கடந்த சில நாட்களாக நடிகைகளின் DEEP FAKE வீடியோ வெளியாகி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ராஷ்மிகா வீடியோ வெளியாகியது பிரதமர் வரை கொந்தளிக்க செய்தது. ராஷ்மிகாவை தொடர்ந்து நடிகை கத்ரீனா கைஃப் டைகர் 3 படத்தில் நடித்த காட்சியை டீப் ஃபேக் டெக்னாலஜி மூலம் ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டனர்.
இப்படி நடிகைகளின் டீப் ஃபேக் வீடியோக்கள் வெளியாவது தொடர்கதையாக உள்ள நிலையில், தற்போது புதிதாக பாலிவுட் நடிகை ஆலியா பட்டின் டீப் ஃபேக் வீடியோ ஒன்று வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
மேலும் படிக்க: கேஜிஎப் பட நடிகைக்கு செம அடி.. சுற்றி வளைத்த பொதுமக்கள் சத்தம் போட்டு அலறிய வீடியோ வைரல்..!
அந்த வீடியோவில் நடிகை ஆலியா பட் படுக்கையறையில் இருப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்று இருந்தன. இது DEEP FAKE வீடியோ என தெரியாமல் சிலர் உண்மை என நினைத்து பகிரத்தொடங்கியதால், இந்த வீடியோ வைரலானது. இப்படி நடிகைகளின் DEEP FAKE வீடியோக்கள் தொடர்ந்து பரவி வருவதால் அது பெரும் தலைவலியாக மாறி இருக்கிறது.
மேலும் படிக்க: இரவு பார்ட்டியில் PlayBoy நடிகருடன் ஐஸ்வர்யா ராஜேஷ்.. யாருன்னு தெரிஞ்சா அல்லு வுட்ரும்..!
இந்த நிலையில் மீண்டும் ராஷ்மிகாவின் டீப் பேக் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் ராஷ்மிகா சிவப்பு நிற நீச்சல் உடை அணிந்து ஒரு நீர் வீழ்ச்சியின் கீழே நின்று இருப்பது போன்ற காட்சி உள்ளது. இந்த வீடியோவை உண்மை என்று நம்பி பலர் கருத்துக்களை பதிவிட்டு வரும் நிலையில், இது போலி வீடியோ என்று தெரிய வந்தது. கொலம்பியன் மாடல் அழகி டேனியேலா வில்லாரியலின் முகத்தை நீக்கிவிட்டு ராஷ்மிகாவின் முகத்தை டீப் பேக் தொழில் நுட்பம் மூலம் இணைத்து வெளியிட்டுள்ளனர். இது சினிமா வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இது பற்றி போலீஸ் எடுத்த நடவடிக்கைக்கு நன்றி தெரிவித்து ராஷ்மிகா இன்ஸ்டாவில் பதிவிட்டு இருக்கிறார். இதே போல, உங்கள் ஃபோட்டோவும் தவறாக பயன்படுத்தப்பட்டால் நிச்சயம் நடவடிக்கை எடுப்பார்கள் என்பதற்கு இதுவே ஒரு சாட்சி என ராஷ்மிகா அதில் குறிப்பிட்டு இருக்கிறார்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.