பிரபல நடிகரால் நடுத்தெருவுக்கு வந்த பானுப்பிரியா.. கந்தலாகிப்போன கண்ணழகியின் வாழ்க்கை..!
Author: Vignesh7 December 2023, 4:00 pm
சினிமா உலகில் 80 மட்டும் 90 காலகட்டத்தில் பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர்கள் இன்று வாய்ப்பு கிடைக்காமல் ஒரு சிலர் சினிமாவில் இருந்து விலகி சின்னத்திர பக்கம் சென்றுள்ளார்கள்.
ஒரு சிலர் அம்மா மற்றும் அக்கா கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கின்றார்கள். அந்த வகையில் ஒரு காலகட்டத்தில் தனக்கென ஒரு அங்கீகாரத்தை பெற்றுள்ள நடிகைதான் பானுப்பிரியா.
இவரைப் பற்றியான சில தகவல் சமீபத்தில் வெளியாகி உள்ளது. கடந்த, 1990களில் ரஜினி, விஜயகாந்த், கார்த்திக், கமல் போன்ற நடிககைளுடன் இணைந்து நடித்துள்ளார். இவர் சுமார் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி ஒரு நிலையில், தற்போது கிடைக்கும் படங்களில் நடித்து வரும் பானுப்ரியாவின் ஆரம்ப கால சினிமா வாழ்க்கையில் பிரபல நடிகரால் ஏமாற்றம் அடைந்த சம்பவம் தற்போது வெளியாகி உள்ளது.
அதாவது, வேகமாக வளர்ந்த பானுப்பிரியா நிறைய பணம் சம்பாதித்தார். ஆனால் நடிகைகள் பலரும் செய்யக்கூடாத ஒரு தவறை செய்தார். அது என்னவென்றால் சொந்த காசைப்போட்டு படத்தை தயாரிக்க முடிவு செய்தது தான். கோடியில் பணம் பார்க்க கேப்டன் விஜயகாந்தை வைத்து காவியத்தலைவன் படத்தினை தயாரித்தார். ஆனால் படம் சரியான வரவேற்பை பெறாததால் அனைத்து சொத்துக்களையும் இழந்து நடுத்தெருவுக்கு வந்தார். படாத பாடுபட்டு எஞ்சி இருந்த சொத்தினை வைத்து தான் இயல்பு நிலைக்கு பானுப்பிரியா வந்திருக்கிறார்.