தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களான அஜித், விஜய்யுடன் போட்டி போட்டு ஒரு படத்திலாது நடிக்க வேண்டும் என நடிகைகள் தவம் கிடக்கின்றனர்.
ஆனால் அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தும் அஜித், விஜய்யுடன் நடிக்க முடியாது என மறுத்துள்ளார் பிரபல நடிகை…
மலையாள சினிமாவில் வெளியான பிரேமம் என்ற படத்தில் மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை சாய்பல்லவி.
அப்படத்தில் கிடைத்த நல்ல வரவேற்பால் தெலுங்கு, தமிழ் படங்களில் அடுத்தடுத்து கமிட்டாகி பிஸியான நடிகையாகினார். அவரின் நடிப்பும், நடனமும் இளைஞர்களை கட்டிப் போட்டது.
தமிழில் பெரியதாக அவருக்கு படம் ஹிட் ஆகவில்லை என்றாலும், தெலுங்கில் மாஸ் நடிகையாக வலம் வருகிறார்.
சாய் பல்லவியுடன் நடிக்க நடிகர்களும் போட்டி போட்டு வரும் நிலையில், அஜித், விஜய் படங்களை வேண்டவே வேண்டாம் என்று தூக்கி எறிந்திருக்கிறார் நடிகை சாய் பல்லவி.
ஒரு மேடையில் விஜய்யுடன் நடிக்க ஆசை என்று கூறிவிட்டு விஜய் பட வாய்ப்பு வந்தும் அதை ஏற்க மறுத்து அவமானப்படுத்தி இருக்கிறார் சாய்பல்லவி.
முக்கியமான ஒரு படத்தில் விஜய்க்கு ஜோடியாகவும், துணிவு படத்தில் அஜித்துடன் நடிக்கவும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
அதற்கு சாய்பல்லவி, பெரிய நடிகர்களின் படத்தில் நடித்தால் நடிகைகளுக்கு முக்கியத்துவம் இருக்காது என்றும் அரைகுறை ஆடையணிந்து பாட்டுக்கு ஆடச்சொல்வார்கள் என்றும் கூறியிருக்கிறார்.
இதை கேட்ட அஜித், விஜய் ரசிகர்கள் சாய்பல்லவியை கிண்டல் செய்து வருகிறார்கள். சிவகார்த்திகேயன், கமல் ஹாசன் தயாரிப்பில் நடிக்கும் படத்தில் சாய்பல்லவி முக்கிய ரோலில் நடிக்க கமிட்டாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
கணவனுக்கு நடந்த விசித்திரமான, அதிர்ச்சியான சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது. சந்தீப் என்பவர் ரஞ்சனா என்பவரை திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்கு பிறகு…
அர்ஜுன் ரெட்டி நடிகை “அர்ஜுன் ரெட்டி” திரைப்படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமானவர் ஷாலினி பாண்டே. “அர்ஜுன் ரெட்டி” திரைப்படம்…
ஹைதராபாத் கச்பவுலி பகுதியில் ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள 400 ஏக்கர் நிலத்தை ஐடி பார்க்…
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
This website uses cookies.