தமிழ் சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து சின்னத்திரை நடிகையாக பிரபலமானவர் ரேகா நாயர். ஹீரோயின் ஆக வேண்டும் என்ற கனவோடு கோடம்பாக்கத்தில் ரவுண்டு வந்த இவருக்கு பல ஆண்டுகளாக முயற்சித்தும் சின்ன சின்ன கதாபாத்திரங்களே கிடைத்தது. இவர் பார்த்திபன் இயக்கத்தில் வெளிவந்த இரவின் நிழல் படத்தில் அரை நிர்வாணமாக நடித்து அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தார்.
இரவின் நிழல் படம் ரிலீஸ் ஆன சமயத்தில் ரேகா நாயர் அரை நிர்வாணமாக நடித்ததை குறித்து சர்சைக்குரிய வகையில் நடிகரும் சினிமா பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் மிகவும் தரை குறைவாக விமர்சனம் செய்திருந்தார். இதனால் கடும் கோபத்தில் இருந்த ரேகா நாயர் திருவான்மியூர் பீச்சுக்கு வாக்கிங் சென்ற சமயத்தில் பயில்வானை நேருக்கு நேர் சந்தித்து நடுரோட்டில் வாக்குவாதம் செய்தார். அப்போது அவரை அடிக்கவும் பாய்ந்த வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் பேசுபொருள் ஆனது.
அந்த வகையில் சிறிதளவும் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத நடிகையாக வலம் வரும் நடிகையாக ரேகா நாயர் இருந்து வருகிறார். தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல படங்களின் வாய்ப்புகள் அவரின் வீட்டின் கதவை தட்டும் வகையில் உள்ளது. ரேகா நாயர் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசக் கூடியவர் என்பதை நாம் அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் பேட்டி ஒன்றில் நடிகர் தனுஷ் மீது தனக்குள்ள காதலை வெளிப்படுத்தியது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த பேட்டியில் அவர் கூறியதாவது;- தமிழ் சினிமாவில் தனக்கு மிகவும் பிடித்த நடிகர் என்றால் அது தனுஷ் தான் என்றும், தனக்கு மட்டும் திருமணம் ஆகாமல் இருந்திருந்தால் நிச்சயமாக எப்படியாவது தனுஷ்சை திருமணம் செய்திருப்பேன் என்றும், சமீபத்தில் தனுசை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்த போது அவரிடம் உங்களை ரொம்ப பிடிக்கும் என கூறியதாகவும், பலரும் அவரிடம் இதனை சொல்லியிருக்க வாய்ப்புகள் இருந்தாலும், அது சாதாரணமாக இருக்கலாம் ஆனால் தான் அப்படி சொன்னதற்கான மதிப்பு தன்னைத் தவிர யாருக்கும் தெரியாது அந்த காதலை மனதுக்குள்ளேயே வைத்துக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
மேலும் பேசுகையில், ரேகாநாயர், பெண்கள் சேலையை அணிந்து வெளியில் சென்றால் ஆண்கள் இடுப்பில் கைவைத்தால் அதை அனுபவிக்கணும் என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார். ஆனால் அந்த அர்த்தத்தில் நான் சொல்லவில்லை என்று ரேகா நாயர் வேறொரு பேட்டியில் விளக்கமும் அளித்தது குறிப்பிடத்தக்கது.
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
புதிய பெயருடன் கெளதம் கார்த்திக் சமீபத்தில் நடிகர் ஜெயம் ரவி தன்னை ரவி மோகன் என்று இனிமேல் அழைக்குமாறு அறிக்கை…
ரம்யா பெயருக்கு பின்னாடி இப்படி ஒரு ஸ்டோரியா இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் குட்…
விடாமுயற்சியோடு போராடும் அஜித் நடிகர் அஜித் தற்போது சினிமாவை தாண்டி கார் பந்தயத்தில் தன்னுடைய அசாதாரண திறமையை வெளிப்படுத்தி வருகிறார்,அந்த…
கும்பமேளாவில் தமன்னா தமிழ் சினிமாவில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளிவந்த பையா திரைப்படத்தின் மூலம் பிரபலம் ஆனவர் நடிகை தமன்னா,இந்த…
This website uses cookies.