பிரபல சர்ச்சையிக்குரிய சீரியல் நடிகையான ரேகா நாயர் தமிழ் சினிமாவின் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்ததன் மூலம் மக்களிடையே பரவலாக முகமறியப்பட்டார். இவர் விஜய் டிவியில் ஆண்டாள் அழகர் தொடரில் நடித்து தனது கெரியரை ஆரம்பித்த இவர் தொடர்ந்து சன், கலர்ஸ் தமிழ், ஜீ தமிழ் போன்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்திருக்கிறார்.
இவர் மறைந்த பிரபல சீரியல் நடிகையான விஜே சித்ராவின் தோழி. சித்ராவின் தற்கொலை ரகசியங்களை குறித்து கூட பல யூடியூப் சேனல்களில் பேட்டி கொடுத்து பரபரப்பை கிளப்பியுள்ளார். அதன் பின்னர் இயக்குனர் பார்த்திபனின் இரவின் நிழல் படத்தில் ஆபாச காட்சிகளில் அரைநிர்வாணமாக நடித்து சர்ச்சை ஏற்படுத்தினார். இதனால் அவரை பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் உள்ளிட்டோர் மோசமாக விமர்சிக்க அவரை ரேகா அடித்து துவைத்ததெல்லாம் செய்தியாக வெளியானது.
இந்நிலையில் தற்போது பேட்டி ஒன்றில், இவர் பேசியுள்ளது சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்தது போல் ஆகியுள்ளது. அதாவது பயில்வானுக்கு சரியான கன்டென்ட் ஆக அமைந்துள்ளது என்றே சொல்லலாம்.
அந்த அளவுக்கு ரேகாநாயர் பேட்டியில், அரைகுறை ஆடையுடன் பொதுவெளியில் அலையும் பெண்கள் குறித்து தன் கருத்தை வெளியிட்டுள்ளார். அதில் இடுப்பு தெரிவது போல் ஆடை அணிந்து கொண்டு சென்றால் ஆண்கள் கை வைக்க தான் செய்வார்கள் அதற்கு ஏன் கோவப்பட வேண்டும் என்றும், அதை அனுபவித்துவிட்டு போக வேண்டியது தானே என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், உடல் தெரியும் படி ஆடை அணிவது உன்னுடைய சுதந்திரம் என்றால் ஆண்கள் அதை ரசிக்கும் போது எதற்காக உங்களுக்கு கோபம் வருகிறது என சர்ச்சையாகவும் பேசி உள்ளார்.
மேலும், தனக்கு ஸ்டைலாக உடை அணிவது பிடிக்கும் என்பதால் தான் தன்னை ஒரு சிலை போலவே உணர்வதாகவும், அப்படித்தான் தனக்கு பிடித்த மாதிரியான உடை அணியும் போது மற்றவர்கள் பாராட்டினால் சந்தோஷப்படுவதாகவும், அதுவே ஒரு ஆண் பாராட்டினால் எதற்காக நீங்கள் கோபப்பட வேண்டும் என்றும், எந்த இடத்தில் எப்படி ஆடை அணிய வேண்டும் என்பது உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும் எனவும் அறிவுரை கூறியுள்ளார்.
அதை விட்டுவிட்டு ஷார்ட்ஸ் போட்டுக்கொண்டு பஸ், மால் போன்ற இடங்களுக்கு இளம் பெண்கள் செல்வதால் அப்போது அதை பார்க்கக்கூடிய ஆண்கள் அதை ஏன் குற்றமாக சொல்ல வேண்டும் எனவும், காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார். இந்த பேச்சு அதிர்வலையை ஏற்படுத்தினாலும் வரவேற்பும் கிடைத்து வருகிறது. அந்த வகையில், பயில்வானுக்கு சரியான கன்டென்ட் ஆக அமைந்துள்ளதாக நெடிசன்கள் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.