பிரபல சர்ச்சையிக்குரிய சீரியல் நடிகையான ரேகா நாயர் தமிழ் சினிமாவின் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்ததன் மூலம் மக்களிடையே பரவலாக முகமறியப்பட்டார். விஜய் டிவியில் ஆண்டாள் அழகர் தொடரில் நடித்து தனது கெரியரை ஆரம்பித்த இவர் தொடர்ந்து சன், கலர்ஸ் தமிழ், ஜீ தமிழ் போன்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்திருக்கிறார்.
இவர் மறைந்த பிரபல சீரியல் நடிகையான விஜே சித்ராவின் தோழி. சித்ராவின் தற்கொலை ரகசியங்களை குறித்து கூட பல யூடியூப் சேனல்களில் பேட்டி கொடுத்து பரபரப்பை கிளப்பியுள்ளார். அதன் பின்னர் இயக்குனர் பார்த்திபனின் இரவின் நிழல் படத்தில் ஆபாச காட்சிகளில் அரைநிர்வாணமாக நடித்து சர்ச்சை ஏற்படுத்தினார். இதனால் அவரை பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் உள்ளிட்டோர் மோசமாக விமர்சிக்க அவரை ரேகா நாயர் அடித்து துவைத்ததெல்லாம் செய்தியாக வெளியானது.
இதனிடையே எப்போதும் பேட்டிகளில் சர்ச்சைக்குரிய வகையில் பேசி வரும் ரேகா நாயர் தனது சோகக்கதையை கூறி அனுதாபத்தை தேடியுள்ளார். ஆம், ரேகா நாயர் தன்னுடைய 17 வயதிலே முதல் திருமணம் செய்துக்கொண்டாராம். 18 வயதில் குழந்தை பிறந்துள்ளது. ஆனால், குழந்தை பிறப்பதற்கு முன்னரே கணவர் கருத்து வேறுபாட்டினால் அவரை பிரிந்து சென்றுவிட்டாராம். அதன் பின்னர் ஒற்றை பெண்மணியாக தனது மகளை வளர்த்து வந்த அவர் தனது 35 வது வயசில் இரண்டாம் திருமணம் செய்துக்கொண்டாராம். சர்ச்சையான நடிகையாக பார்க்கப்படும் ரேகா நாயர் இத்தனை கஷ்டங்களை அனுப்பிவைத்தாரா? என எல்லோரும் வியந்துவிட்டனர்.
எம்புரானுக்கு வந்த வம்புகள் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த மாதம் 27 ஆம் தேதி வெளியான “L2 எம்புரான்”…
தற்போதைய கால சூழலில் சிறு வயதினருக்கும் மாரடைப்பு ஏற்படுவது சகஜமாக மாறி வருகிறது. இதனால் இளைஞர்கள் பலர் வெளியில் சென்றிருக்கும்…
பிக்பாஸ் தர்ஷன் திடீர் கைது… பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே மிகப் பிரபலமாக அறியப்பட்டவர் தர்ஷன். இலங்கையை…
தூத்துக்குடி பாத்திமா நகர் 6வது தெருவை சேர்ந்தவர் ராஜ் (56) மீன்பிடித் தொழில் செய்து வரும் இவர் தற்போது மகிழ்ச்சிபுரம்…
திமுக அரசின் அவலங்களை எடுத்துரைக்கும் வகையில் அதிமுக செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் சார்பில் தாம்பரத்தில் பொது கூட்டம் மற்றும் வீதி…
This website uses cookies.