இந்த உலகமே ஒரு சாக்கடை.. அந்த மாதிரியான விஷயத்தை மகள் முன்பே வெளிப்படையாக பேசிய நடிகை ரேகா..!

Author: Vignesh
28 May 2024, 3:35 pm
Rekha-Nair-updatenews360
Quick Share

பிரபல சர்ச்சையிக்குரிய சீரியல் நடிகையான ரேகா நாயர் தமிழ் சினிமாவின் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்ததன் மூலம் மக்களிடையே பரவலாக முகமறியப்பட்டார். இவர் விஜய் டிவியில் ஆண்டாள் அழகர் தொடரில் நடித்து தனது கெரியரை ஆரம்பித்த இவர் தொடர்ந்து சன், கலர்ஸ் தமிழ், ஜீ தமிழ் போன்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்திருக்கிறார்.

Rekha-Nair-updatenews360

இவர் மறைந்த பிரபல சீரியல் நடிகையான விஜே சித்ராவின் தோழி. சித்ராவின் தற்கொலை ரகசியங்களை குறித்து கூட பல யூடியூப் சேனல்களில் பேட்டி கொடுத்து பரபரப்பை கிளப்பினார். அதன் பின்னர், இயக்குனர் பார்த்திபனின் இரவின் நிழல் படத்தில் ஆபாச காட்சிகளில் அரைநிர்வாணமாக நடித்து சர்ச்சை ஏற்படுத்தினார். இதனால் அவரை பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் உள்ளிட்டோர் மோசமாக விமர்சிக்க அவரை ரேகா அடித்து துவைத்ததெல்லாம் செய்தியாக வெளியானது.

மேலும் படிக்க: புற்றுநோய், பணக்கஷ்டம், பாதியிலேயே நின்று போன படிப்பு.. பிரபல சீரியல் நடிகையின் வாழ்க்கையில் நடந்த சோகம்..!

இந்நிலையில், சமீபத்தில் தன் மகனுடன் அளித்த பேட்டியில் சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். இந்த சமூகம் என்னை வேறு மாதிரியாகத்தான் பார்க்கிறார்கள் என்றும், நாம் எல்லாம் அதனை காதில் வாங்க வேண்டிய அவசியம் இல்லை ஏனென்றால், நான் யாரையும் ஏமாற்றவில்லை, யாருடனும் தவறு செய்யவில்லை. யார் குடும்பத்தையும் கெடுக்கவில்லை.

rekha-updatenews369

மேலும் படிக்க: குடும்பத்தை ஒதுக்கி வைத்த விஜய்?.. ஒரே ஒரு போட்டோவ போட்டு மொத்த பேரையும் ஆஃப் பண்ணிட்டாரே..!

எனக்கு என் விஷயம் சரியாக இருப்பது போல் இந்த சமூகத்தில் ஒவ்வொருவரும் சரியாகத்தான் இருக்கிறார்கள். அப்படி பார்த்தால் இந்த சமூகம் யாரையும் விட்டு வைக்கவில்லை என்பது தெளிவாக தெரிவதால் என்னையும் விட்டு வைக்கவா போகிறது என்ற எண்ணம் எனக்கு தோன்றுகிறது. ஆனால், யார் என்ன சொன்னாலும் சாக வேண்டிய அவசியமில்லை. இந்த உலகமே ஒரு சாக்கடை தான். பொதுப்பணிக்கு வரும் பெண்கள் விமர்சனங்களை எதிர்கொள்வதற்கான துணிச்சல் இருந்தால் மட்டுமே வாங்க இல்லை என்றால் சாதாரண பெண்ணாக வாழ்ந்து விடுங்கள் என்று கூறி இருக்கிறார்.

Views: - 97

0

0