சினிமா / TV

இஸ்லாமை பின்பற்றும் ஒருவர்.. சபரிமலையில் நின்ற நடிகர்.. வெடித்த மத கருத்துகள்!

இஸ்லாமிய நம்பிக்கையைப் பின்பற்றும் ஒருவர், அல்லாஹ்விடம் மட்டுமே பிரார்த்தனைச் செய்ய வேண்டும் என மூத்த பத்திரிகையாளர் ஒருவர் மோகன்லால் சபரிமலையில் சிறப்பு வழிபாடு செய்தது குறித்து கூறியுள்ளார்.

திருவனந்தபுரம்: மோலிவுட் எனப்படும் மலையாளத் திரையுலகில் சூப்பர் ஸ்டார்களாக வலம் வருபவர்கள் மம்மூட்டி மற்றும் மோகன்லால். இதனிடையே, உலகப் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில், கடந்த மார்ச் 18ஆம் தேதி மோகன்லால் சாமி தரிசனம் செய்தார். அப்போது, அவர் நடிகர் மம்மூட்டிக்காக சிறப்பு வழிபாடு நடத்தியதாக சமூக வலைத்தளங்களில் வைரலானது.

தொடர்ந்து, மம்மூட்டி உடல்நிலை சரியில்லாததை தொடர்ந்து, மோகன்லால் சாமி தரிசனம் செய்ததாக கூறப்படுகிறது. அதாவது, தேவசம் அலுவலகம் வெளியிட்ட ரசீது ஒன்று சோஷியம் மீடியாவில் வைரலானது. இந்த ரசீதாலும், வெளியான தகவலாலு மத ரீதியான கருத்துகள் வெளிவருகின்றன.

மேலும், இது குறித்து முன்னாள் பத்திரிகையாளர் ஓ.அப்துல்லா கூறுகையில், “மோகன்லாலை தனக்காக மம்மூட்டி பிரார்த்தனை செய்யச் சொல்லியிருந்தால், அவர் (மம்மூட்டி) மன்னிப்பு கேட்க வேண்டும். ஏனென்றால், இஸ்லாமிய நம்பிக்கையைப் பின்பற்றும் ஒருவர், அல்லாஹ்விடம் மட்டுமே பிரார்த்தனைச் செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார்.

அதேபோல், திரைப்படத் தயாரிப்பாளர் பிருத்விராஜ் சுகுமாரன் கூறுகையில், “மம்மூட்டி – மோகன்லால் ஆகிய இருவருமே இதுபோன்ற ஒன்றைச் செய்வது இது முதல் முறையல்ல. இருப்பினும், இந்த முறை, அது செய்திகளில் இடம் பிடித்து வெளியாகியுள்ளது” எனக் கூறியுள்ளார்.

இந்த நிலையில், இது தொடர்பாக மோகன்லால் கூறுகையில், “மம்மூட்டியுடன் 50க்கும் மேற்பட்ட படங்களில் நான் நடித்துள்ளேன். நாங்கள் ஒவ்வொரு வாரமும் சந்தித்துக் கொள்வோம். உண்மையிலேயே நாங்கள் நல்ல நண்பர்கள். பிரார்த்தனைகள் என்பவை தனிப்பட்டவை. மம்மூட்டிக்காக பிரார்த்தனை செய்வதில் எந்த தவறும் இல்லை.

இதையும் படிங்க: நீ மாசமா இருக்கியோ, நாசமா போவியோ : என் கூட ப***… மகனின் காதலியை தரக்குறைவாக பேசிய தந்தை!

அவருக்கு லேசான உடல்நலக் குறைவு ஏற்பட்டபோது பிரார்த்தனை செய்தேன். தற்போது அவர் நல்ல முறையில் குணமடைந்து வருகிறார். மம்மூட்டிக்கு, தான் நடத்திய சிறப்பு வழிபாடு குறித்து தேவையின்றி சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோயிலை நிர்வகிக்கும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு அதிகாரி தெரியப்படுத்தியிருக்கலாம்” எனக் கூறியிருந்தார்.

ஆனால், “நடிகர் மோகன்லால் நடத்திய சிறப்பு வழிபாடு குறித்து தேவஸ்தான ஊழியர் எந்தத் தகவலையும் வெளியிடவில்லை. வழிபாட்டு ரசீதை பெற்றுச் சென்ற நடிகரின் (மோகன்லால்) உதவியாளர் வெளியிட்ட தகவல் வைரலானது. இதற்கும், திருவிதாங்கூர் தேவஸ்தானத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை” என திருவிதாங்கூர் தேவஸ்தானம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Hariharasudhan R

Recent Posts

வாய்ப்பு தாறோம் வாங்க..கமல் பெயரில் மோசடி..எச்சரிக்கை விடுத்த நிறுவனம்.!

கமல் தயாரிப்பு நிறுவனம் எச்சரிக்கை.! நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம்,தங்களுடைய நிறுவன பெயரை தவறாக பயன்படுத்தி…

43 minutes ago

உதயநிதிக்கு ஜால்ரா போடவா? கடுப்பான Ex அமைச்சர்.. மதுரையில் பரபரப்பு பேச்சு!

திமுக எம்எல்ஏக்களைப் போல் உதயநிதிக்கு ஜால்ரா போட மக்கள் எங்களை தேர்ந்தெடுக்கவில்லை என ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். மதுரை: மதுரை புறநகர்…

58 minutes ago

பதில் சொல்லுங்க.. பதறி ஓடிய அமைச்சர்.. சட்டென முடிந்த திமுக ஆர்ப்பாட்டம்!

திமுகவின் அரசியல் நாடகங்களை தமிழக மக்கள் இனியும் நம்பப் போவதில்லை என பகிரங்கமாக கூறியுள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.…

1 hour ago

இறங்கி அடித்த சியான் விக்ரம்…அசுர வசூலில் ‘வீர தீர சூரன்’.!

விக்ரம் முரட்டு கம்பேக் நடிகர் விக்ரம் நடித்துள்ள ‘வீர தீர சூரன்’ திரைப்படத்தின் இரண்டாவது நாள் வசூல் தொடர்பான தகவல்…

3 hours ago

அதிமுகவை முந்தும் தவெக.. கூட்டணி கட்டாயத்தில் இரட்டை இலை? பரபரப்பு சர்வே!

சி வோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பில் விஜய், 18 சதவீத வாக்குகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது தமிழக அரசியலில் கவனம் பெற்றுள்ளது.…

4 hours ago

மட்டம் தட்டிய பத்திரிகையாளர்..கொந்தளித்த CSK பயிற்சியாளர்..என்ன நடந்தது.?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஏற்பட்ட ஒரு கேள்வியின் காரணமாக கடும்…

4 hours ago

This website uses cookies.