உன் இஷ்டத்திற்கு என்ன வேணாலும் எழுதுவையா?.. பத்திரிக்கையாளரை வெளுத்தெடுத்த ஜெயலலிதா..!

நடிகை ஜெயலலிதா அரசியலுக்கு வருவதற்கு முன்பு சினிமாவில் நடித்துக்கொண்டிருந்தபோதே மிகவும் தைரியமான பெண்மணியாகவே இருந்து இருக்கிறார்.

ஜெயலலிதா நடிகையாக இருந்தபோது ஒரு பத்திரிக்கையாளர் சக நடிகரான ரவிச்சந்திரனை குறித்து கேள்வி எழுப்பியபோது, “ஒரு நாயகனுக்கான தோற்றம், நடனம் எல்லாம் சிறப்பாக அமையப்பெற்றவர் ரவிச்சந்திரன் என்றும், தன்னுடன் அவர் பல படங்களில் நடித்து இருந்தபோதும், முதல் திரைப்படத்தில் ரவிச்சந்திரன் நடிக்கும்போது இருந்த ஆர்வத்தை பின்னாள் வந்த எந்த திரைப்படங்களிலும் பார்க்க முடியவில்லை என்று மிகவும் தைரியமாகவும் வெளிப்படையாகவும் தெரிவித்து உள்ளார்.

மேலும், ரவிச்சந்திரன் ஆர்வம் மட்டும் அப்படியே இருந்திருந்தால், அவர் இன்னும் மிகப்பெரிய இடத்திற்கு வந்திருப்பார்” எனவும், தனது கருத்தை கூறினாராம். இச்சம்பவம் அவரது தைரியமான பேச்சுக்கு எடுத்துக்காட்டாக கூறலாம்.

இதனிடையே, ஜெயலலிதா சினிமாவில் கொடிகட்டி பறந்த காலக்கட்டத்தில் ஒரு பத்திரிக்கையாளர் தனது பத்திரிக்கையில் “ஜெயலலிதா ஒவ்வொரு செவ்வாய்க்கிழமைகளிலும் முருகனுக்கு விரதம் எடுப்பார் என்றும், செவ்வாய்க்கிழமை மதிய வேளை மட்டும் உணவு எடுத்துக்கொள்ள மாட்டார் என பொய்யாக எழுதி பிரசுரித்து விட்டார். விரதம் எடுப்பது நல்ல விஷயம்தானே, ஆதலால் ஜெயலலிதா பெரிதாக கண்டுகொள்ள மாட்டார் எனவும், மேலும் கோபம்கொள்ளமாட்டார் என நினைத்து அதனை பத்திரிக்கையாளர் எழுதிவிட்டாராம்.

இந்த விஷயம் ஜெயலலிதாவிற்கு தெரியவந்த நிலையில், மிகுந்த கோபம் கொண்டு இருந்தாராம். படப்பிடிப்புத் தளத்தில் அந்த பத்திரிக்கையாளரை பார்த்து, ஜெயலலிதா அவரை தனியாக அழைத்து “நீங்கள் உங்கள் இஷ்டத்திற்கு தான் செவ்வாய்க்கிழமை விரதம் எடுபேன் என எழுதிவிட்டீர்கள். என்றாவது செவ்வாய்க்கிழமை படப்பிடிப்புத் தளத்தில் உணவு உண்ண நேர்ந்தால், அதனை பார்க்கும் மக்கள் தன்னை பற்றி என்ன நினைப்பார்கள் என கோபமாக கடிந்து கொண்டாராம்.

ஆதலால் தன்னை பற்றி எந்த செய்தியாக இருந்தாலும் தன்னிடம் முதலில் கேட்டுவிட்டு எழுதுங்கள்” என கோபமாக ஜெயலலிதா கூறியுள்ளார். ஜெயலலிதாவின் இந்த செய்தியை கண்டுகொள்ள மாட்டார் என நினைத்த பத்திரிக்கையாளருக்கு இந்த சம்பவம் அதிர்ச்சியை தந்தது குறிப்பிடத்தக்கது.

Poorni

Recent Posts

நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!

நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…

4 hours ago

பிளாக்கில் டிக்கெட் விற்பவர்களுக்கு முதல்வர் கனவு.. விஜய்யை மறைமுமாக சாடிய அமைச்சர்!

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…

4 hours ago

கஞ்சா வைத்திருந்த பிரபல சினிமா இயக்குநர்கள்..வளைத்து வைளத்து கைது செய்யும் போலீசார்!

போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…

5 hours ago

வெற்றிமாறன் மேல் உள்ள பயத்தால் சூர்யா எடுத்த திடீர் முடிவு? அப்போ வாடிவாசலோட நிலைமை?

இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…

5 hours ago

அடுத்தவ புருஷனை பங்கு போட்டது தப்புதான்.. ஆனா பாலு மகேந்திரா எனக்கு எல்லாமே கொடுத்தாரு ; நடிகை ஓபன்!

நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…

6 hours ago

ஜெயிலரை ஓவர் டேக் செய்யப்போகும் குட்  பேட் அக்லி! விரைவில் ஒரு தரமான சம்பவம்?

தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…

6 hours ago

This website uses cookies.