நானும் அவரும் தெரு தெருவா அலைஞ்சோம்.. ஒன்னும் வேலைக்கு ஆகல.. வருத்தப்பட்ட ரேவதி..!

தமிழ் சினிமாவில் புதிதான வேறு மாதிரியான கதைகளை சொல்லிக் கொடுத்தவர்தான் மணிரத்தினம். முதலில் இவர் கன்னடத்தில் பல்லவி அனு பல்லவி என்கிற படத்தை இயக்கினார். இவர் யாரிடமும் உதவி இயக்குனராக பணிபுரியாமல் சுயமாக சினிமாவை கற்றுக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு காலத்தில் பக்கம் பக்கமாக வசனம் பேசிய சினிமாவை மாற்றி வசனத்தை குறைத்து காட்சி வழி கதை சொன்னவர் தான் மணிரத்தினம். அதனால் தான் இப்போதும் சினிமாவில் சாதிக்கத் துடிக்கும் பல இளைஞர்களுக்கு மணிரத்தினம் முன்னுதாரணமாக திகழ்ந்து வருகிறார்.

மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த மௌன ராகம், ரோஜா, பம்பாய், தளபதி, இருவர், அக்னி நட்சத்திரம், நாயகன், அஞ்சலி ஆகிய படங்கள் பற்றி இப்போதும் பேசுகிறார்கள் ஏனெனில் அதற்கு ஒரே காரணம் மணிரத்தினம் தான். இப்போதும் கூட பொன்னியின் செல்வன் படத்தை எடுத்து பெரிய ஹிட்டை கொடுத்துள்ளார் மணிரத்தினம்.

இந்நிலையில், மணிரத்தினம் இயக்கத்தில் பகல் நிலவு, மௌனராகம், அஞ்சலி ஆகிய மூன்று படங்களில் நடித்தவர்தான் நடிகை ரேவதி. இவர் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டி ஒன்றில் பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அப்போது மணிரத்தினின் மேக்கிங் ஸ்டைல் தனக்கு பிடித்துப் போனதாகவும், மணிரத்தினம் அப்போதுதான் மௌனராகம் பட கதையை தன்னிடம் சொன்னதாகவும் தன்னிடம் ஆங்கிலத்தில் முழு கதையும் சொன்ன ஒரே இயக்குனர் மணிரத்தினம் தான் என்று பெருமிதமாக தெரிவித்துள்ளார்.

மேலும், மௌன ராகம் கதையை நீங்கள் படமாக எடுத்தால் நான் நடிப்பேன் என அவரிடமே கூறியதாகவும், அந்த படத்தை தாங்கள் துவங்கிய போது எந்த தயாரிப்பாளரும் அந்த படத்தை எடுக்க முன்வரவில்லை என்றும், தானே சில தயாரிப்பாளர்களிடம் நேராக சென்று பேசியதாகவும், ஆனால் யாருக்கும் அந்த கதையின் மீது நம்பிக்கை வரவில்லை எனவும், இறுதியாக மணிரத்தினத்தின் சகோதரர் ஜிவி அந்த படத்தை தயாரிக்க முன்வந்தார் என ரேவதி பேட்டியில் தெரிவித்து இருந்தார்.

Poorni

Recent Posts

இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!

சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…

15 hours ago

7 மணி நேர வேலை… 2 நாள் விடுமுறை : சாம்சங் ஊழியர்கள் மீண்டும் போராட்டம்!

சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…

15 hours ago

ஆளுநருக்கு திடீர் மாரடைப்பு… மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதலமைச்சர்..!!

ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…

15 hours ago

ஆ ஊனா அமெரிக்கா கிளம்பிடுறாரே இந்த மனுஷன்? கமல்ஹாசன் திடீர் பயணத்துக்கு இதுதான் காரணமா?

எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…

15 hours ago

அரசு நிகழ்ச்சிக்கு ஹெலிகாப்டரில் வந்த அமைச்சர்கள்.. அடுத்த நிமிடமே விபத்து : அதிர்ச்சி வீடியோ!

தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…

16 hours ago

பொன்முடி பேசுனது தப்புதான்.. ஆனா . பெரியாரை விட மோசம் இல்ல.. காங்., மூத்த தலைவர் வக்காளத்து!

பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…

16 hours ago

This website uses cookies.