நடிகை ரித்திகா தற்போது மாலத்தீவுக்கு தனது கணவருடன் ஹனிமூனுக்கு சென்று இருக்கிறார். அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அந்த புகைப்படங்களுக்கு பல பேர் லைக்குகளை போட்டு வருகின்றனர். அமிர்தா என்னும் கதாபாத்திரத்தில் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வருபவர் நடிகை ரித்திகா.
இவர் முதன் முதலாக ராஜா ராணி நாடகத்தில் கதாநாயகனுக்கு தங்கை கதாபாத்திரத்தில் நடித்தார். ஆனால் இவருக்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. இருப்பினும் தொடர்ந்து அவர் போராடி வந்தார். பின்னர் நடிகை ரித்திகாவுக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு நடிகை ரித்திகா பல ரசிகர்களைப் பெற்று இருக்கிறார். பாலா உடன் நடிகை ரித்திகா சேர்ந்து செய்த சேட்டைகள் ரசிக்கும்படியாக இருந்தது. நடிகை ரித்திகா சமீபத்தில் விஜய் டிவியில் கிரியேட்டிவ் டைரக்டராக வேலை பார்த்து வரும் வினு என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
வினு மலையாளி என்பதால் கேரளாவில் உள்ள ஒரு கோவிலில் வைத்து எளிமையாக நடிகை ரித்திகா திருமணம் நடைபெற்றது. சமீபத்தில் நடிகை ரித்திகா வரவேற்பு சென்னையில் வைத்து மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
அந்த திருமண வரவேற்பில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து பலர் கலந்து கொண்டனர். குறிப்பாக பாலா, புகழ், ஷகிலா, சிவாங்கி, நிஷா என பல முன்னணி சின்னத்திரை நடிகர்கள் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தனர்.
தற்போது இவர் தனது கணவர் வினுவுடன் இணைந்து மாலத்தீவுக்கு ஹனிமூனுக்கு சென்று இருக்கிறார். அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பாக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா, பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் ரெட்ரோ. இந்த படம்…
கோவை குனியமுத்தூர் டைமண்ட் அவென்யூ பகுதியில் நேற்று இரவு இரு தரப்பினர் இடையே நடைபெற்ற மோதலில் சுண்ணாம்பு காளவாய் பகுதியைச்…
சின்னத்திரையில் பிரபலமானால் போதும் பெரிய திரையில் தானாகவே வாய்ப்புகள் வந்து விழும். இது இந்த காலத்தில் எழுதப்படாத விதியாக உள்ளது…
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
This website uses cookies.