தமிழ் சினிமாவில் நடிகைகளுக்கு நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என பல தரப்பில் இருந்து தொல்லைகள், அட்ஜெஸ்ட்மென்ட் கொடுமை எல்லாமே இருக்கத்தான் செய்கிறது. அதற்கெல்லாம் ஒப்புக்கொண்டு அட்ஜெஸ்ட் செய்து நடிக்கும் நடிகைகள் மட்டுமே மார்க்கெட்டில் நிலைத்து நிற்க முடியும் என்ற ஒரு மறைமுக நிபந்தனைகள் திரைத்துறையில் இருப்பது தான் அந்த தொழிலையே இழிவுபடுத்திக்கிறது.
அப்படித்தான் ஒரு சம்பவம் தற்போது நடிகை ஹன்சிகாவுக்கு நடந்துள்ளது… ஆம் நடிகை ஹன்சிகா மோத்வானி – நடிகர் ஆதி நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் பார்ட்னர். இப்படத்தில் யோகிபாபு, முனீஸ்காந்த், ரோபோ சங்கர், ஜான் விஜய் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். மனோஜ் தாமோதரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் ட்ரைலர் அண்மையில் வெளியாகியது.
இந்த ட்ரைலர் வெளியீட்டுவிழாவில் ஹன்சிகாவுடன் நடித்தது குறித்து பேசிய நடிகர் ரோபோ ஷங்கர், படத்தில் நான் ஹன்சிகா காலை தடவுற மாதிரி ஒரு காட்சி படத்துல இருந்தது. ஒரு பொருளை தேடி முட்டிக்கு கீழ் கால தடவனும், அது தான் சீன். அந்த காட்சியில் நடிக்க வைக்க நானும் போராடி பார்த்தேன். ஆனா முடியவே முடியாதுனு சொல்லிட்டாங்க. நானும் டைரக்டரும் கால்ல விழுந்துலாம் கெஞ்சினோம். கட்டை விரலையாச்சும் தடவிக்கிறேன்னு கேட்டோம். முடியவே முடியாதுன்னு சொல்லிட்டாங்க.
மேலும் ஹீரோ ஆதி மட்டும் தான் என்னை தொட்டு நடிக்கனும், வேற யாரும் தொடக்கூடாதுனு சொல்லிட்டாங்க. அப்போதான் நினைச்சேன்.. ஹீரோ ஹீரோ தான், காமெடியன் ஓரமா தான் இருக்கனும் போல என மிகவும் கீழ்த்தரமாக இழிவாக பேசியிருந்தார். இப்படிதான் சினிமா துறையில் பல நடிகைகளிடன் நடிகர்கள் அத்துமீறுகிறார்கள் என சர்ச்சை வெடித்துள்ளது. மேலும் ஒரு பொது மேடையில் இப்படியா பேசுவரது என ரோபோ ஷங்கருக்கு கண்டனங்கள் வலுத்தது. ரோபோ ஷங்கரின் பேச்சுக்கு பத்திரிகையாளர் ஒருவர், ” நடிக்கவே லாயக்கு இல்லாத நடிகரை எல்லாம் மேடையில் ஏத்தினா இப்படித்தான் பேசுவாங்க என திட்டனார். இதையடுத்துப் பாட்னர் படக்குழு சார்பில் ரோபோ சங்கரின் பேச்சுக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக ஜான் விஜய் தெரிவித்தார்.
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
என்னை கடவுள் எனச் சொல்லி கடவுளை தாழ்த்திவிட வேண்டாம் என்றும், நான் சாதாரண மனிதன்தான் என்றும் இசையமைப்பாளர் இளையராஜா கூறியுள்ளார்.…
சொல் ஒன்று செயல் ஒன்றாக விஜயகாந்த் இருந்ததில்லை எனக் கூறிய பிரேமலதா, கோலா, நகை விளம்பரங்களில் சிலர் நடிப்பர் என…
This website uses cookies.