தமிழ் சினிமாவின் இளம் நடிகையான காயத்ரி ரெட்டி,சமீபத்தில் சமூக வலைதளங்களில் தன்னை இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மாவின் முன்னாள் காதலி என சிலர் விமர்சித்து வருவதால்,அதற்கு இன்ஸ்டாகிராமில் விளக்கம் அளித்துள்ளார்.
2019 ஆம் ஆண்டு நடிகர் விஜய்,அட்லி இயக்கத்தில் வெளியான பிகில் படத்தில்,கால்பந்தாட்ட வீராங்கனை மாரி என்ற கதாபாத்திரத்தில் நடித்த காயத்ரி ரெட்டி,சமூக வலைதள ரசிகர்களால் தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளார்.
இதையும் படியுங்க: ‘சச்சின்’ ரீ-ரிலீஸில் புது பிளான்…ரெக்கார்ட் பிரேக் சம்பவம் உறுதி.!
காரணம்,ஐபிஎல் தொடக்கத்தில் இருந்த டெக்கான் சார்ஜர்ஸ் அணியின் உரிமையாளர் வெங்கட்ரமண ரெட்டியின் மகளின் பெயரும் காயத்ரி ரெட்டி தான்.ரோகித் சர்மா அந்த அணியில் விளையாடியதால்,ரசிகர்கள் நடிகை காயத்ரி ரெட்டியை,அந்த காயத்ரி ரெட்டியாகக் கருதி,அவரை ரோகித் சர்மாவின் முன்னாள் காதலி என விமர்சிக்க தொடங்கியுள்ளனர்.
இதனால், நடிகை காயத்ரி ரெட்டி தனது இன்ஸ்டாகிராமில்,ரசிகர்கள் பதிவு செய்த கமெண்டுகளின் ஸ்கிரீன் ஷாட் பகிர்ந்து,”யாருடா நீங்க? நான் நிஷாந்த் ரெட்டியின் மனைவி,ரோகித் சர்மாவின் முன்னாள் காதலி கிடையாது” என தனது ஆதங்கத்தையும், தவறான தகவல்களை பரப்புவதை நிறுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
சமீப காலமாக ரசிகர்களின் இந்த செயல் அதிகரித்துக்கொண்டே வருகிறது,துபாயில் நடந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியின் போது பிலிப்ஸ்,விராட் கோலி அடித்த பந்தை அற்புதமாக பறந்து பிடிப்பார்.
அப்போது இந்திய ரசிகர்கள் பலர் சமூக வலைத்தளத்தில் பிலிப்ஸ் நிறுவனத்தின் பெயரை டேக் செய்து திட்டி வந்தார்கள்,அதே மாதிரி இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கவர்த்தியை பாராட்டுவதற்கு பதிலாக பாலிவுட் ஆக்டர் வருண் தவானை மாற்றி டேக் செய்து பாராட்டி வந்தார்கள்,ரசிகர்களின் இந்த செயல்களால் சமூக வலைத்தளங்கள் முழுவதும் மீம் கண்டெண்ட்களாக நிரம்பி வருகிறது.
ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து அதிக போட்டிகளில் ஒரு முறைகூட டாஸ் வெல்லாத கேப்டன் என்ற பிரைன் லாராவின் மோசமான உலக…
ராஜ்ய சபா சீட் பெறுவது தொடர்பாக அதிமுக உடன் எந்த வருத்தமும் இல்லை என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா…
சுந்தர் சி - குஷ்பூ தம்பதியின் 25வது திருமண நாளை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம்…
அதிமுகவின் சாதனைகளை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் திண்ணைப் பிரச்சாரத்தை தீவிரப்படுத்த வேண்டும் என இபிஎஸ் அறிவுறுத்தியுள்ளார். சென்னை: அதிமுக மாவட்ட…
கடலூர் அருகே திருடச் சென்றபோது ஒருவர் உயிரிழந்ததற்கு காரணமாக இருந்ததாக அவரது நண்பர்கள் மூவர் உள்பட 4 பேர் கைது…
இந்தியா - நியூசிலாந்து சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டிக்குப் பிறகு ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் கேன் வில்லியம்சன்…
This website uses cookies.