செருப்பால அடிப்பாங்க… திருத்தணி முருகன் கோவிலில் ஆவேசமான ரோஜா..!

நடிகை ரோஜா வரும் தேர்தலில் ஜகன்மோகன் ரெட்டியின் கட்சியின் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என திருத்தணி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்தார். நாளை முதல் கந்தசஷ்டி விரதம் துவங்கும் நிலையில் வரும் சனிக்கிழமை அன்று சூரசம்ஹாரம் நடைபெற உள்ளது.

இந்நிலையில், ஆந்திர மாநிலத்தின் அமைச்சரும் நடிகையுமான ரோஜா திருத்தணி முருகன் கோவிலில் கணவர் ஆர்கே செல்வமணிவுடன் சாமி தரிசனம் செய்தார். அதன் பிறகு அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ரோஜா மத்தியில் யார் ஆட்சிக்கு வந்தாலும், ஆந்திர மாநிலத்திற்கு நல்லது செய்பவர்களுக்கு வெளியில் இருந்து ஆதரவு தெரிவிப்பதாகவும், யாருடனும் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடப் போவதில்லை என்றும் தெரிவித்திருந்தார்.

மேலும், ஜாமினில் வெளிவந்துள்ள ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கண் அறுவை சிகிச்சை செய்வதற்காக வந்திருப்பதாக குறிப்பிட்ட ரோஜா அவர் மீண்டும் 21ஆம் தேதிக்குள் சிறைக்குச் செல்ல வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

இதனை தொடர்ந்து பேசிய அவர், மக்கள் நேசிக்கும் தலைவராக ஜெகன்மோகன் ரெட்டி இருப்பதால் தவறு செய்பவர்களுக்கு ஊழல் செய்பவர்களுக்கும் கஷ்டம் தான் என்றார். மேலும், சினிமா துறையில் இருந்து தான் அரசியலுக்கு வந்திருந்தாலும், மக்களுக்கு நல்லது செய்து தன் வாழ்க்கையில் முன்னுக்கு வந்திருப்பதாக தெரிவித்தார். தன்னை எதிர்க்க முடியாமல் தன் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் தான் ஒரு பெண் என்று பார்க்காமல் தன் நடத்தை பற்றி சந்திரபாபு நாயுடு விமர்சனம் செய்திருப்பதாக குற்றம் சாட்டிய ரோஜா, தனிநபர் விமர்சனத்தை எந்த ஒரு ஆணும் பெண்ணும் ஏற்க மாட்டார்கள் என்று கூறி செருப்பால்தான் அடிப்பார்கள் என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

Poorni

Recent Posts

டைட்டில் வச்சதே அஜித்சார்தான்- ஆச்சரிய தகவலை பகிர்ந்த ஆதிக் ரவிச்சந்திரன்

இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…

13 minutes ago

என் மேலயே புகார் கொடுக்கறயா.. காவல் நிலையத்தில் புகுந்து நபரை செருப்பால் அடித்த எம்எல்ஏ! (வீடியோ)

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…

24 minutes ago

கொலை மிரட்டல் கொடுத்து சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை : கோவையை அலற விட்ட மத போதகர்!

கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…

2 hours ago

சமையல் சிலிண்டர் விலை அதிரடி உயர்வு : மத்திய அரசு அறிவிப்பு.. சாமானிய மக்கள் ஷாக்!

சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…

2 hours ago

கள்ளக்காதலனை வைத்து நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டல்.. காக்கிச் சட்டைகளை கைக்குள் மடக்கிய ஹேமலதா!

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…

2 hours ago

“வாட் ப்ரோ? இட்ஸ் வெரி ராங் ப்ரோ”… விஜய்யின் வசனத்தை பேசி சீண்டிப்பார்க்கும் அஜித்?

மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…

2 hours ago

This website uses cookies.