எஸ் எஸ் சி நடிகர் இயக்குனர் தயாரிப்பாளர் எழுத்தாளர் என பல பன்முகத் திறமைகளை தன்னகத்தே கொண்டவர். சட்டம் ஒரு இருட்டறை, நான் சிகப்பு மனிதன் போன்ற பல படங்கள் மாபெரும் வெற்றி படங்களாக இவரை இயக்குனராக ஜொலிக்க வைத்தது.
பிரபல இயக்குநராக வலம் வருபவர் எஸ்ஏ சந்திரசேகர் இவரது ஒரே மகன் விஜய். தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக உள்ள விஜய்க்கு நாடு முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். நடிகர் விஜய் இன்று தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக மட்டுமின்றி மாஸ் நடிகராகவும் உள்ளார் என்றால் அதற்கு அடித்தளம் போட்டவர் அவரது அப்பாதான்.
அப்பாவின் இயக்கத்தில் நடிகராக அறிமுகமான விஜய் பின்னர் படிப்படியாக உயர்ந்து இன்று இந்த அளவுக்கு தவிர்க்க முடியாத ஒரு நடிகராக வளர்ந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே நடிகர் விஜய்க்கும் அவரது அப்பாவுக்கும் இடையிலான உறவு சரியாக இல்லை என்றும் இருவருக்கும் இடையே பேச்சு வார்த்தை சரியில்லை என்றும் தகவல் வெளியாகி வருகிறது.
இந்நிலையில், பேட்டி ஒன்றில் பங்கேற்ற எஸ்.ஏ சந்திரசேகர் பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில், அவர் தான் சோபாவை காதலித்து திருமணம் செய்து கொண்டதாகவும், இருவருமே வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் தாங்கள் நடிகர் சிவாஜியின் துணைவியார் தலைமையில், திருமணம் செய்து கொண்டதாகவும், அதன் பின்னர் சில வருடங்கள் கழித்து தன்னிடம் தன் மனைவி கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்து கொள்ள ஆசையாக இருப்பதாக கூறியதால், சரி என்று தானும், இதற்கு சம்மதம் தெரிவித்து சோபாவை இரண்டாவது முறையாக திருமணம் செய்து கொண்டேன். இதற்கு விஜய் தான் சாட்சியாக இருந்தார் என்று எஸ் எஸ் சி நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.
பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
This website uses cookies.