2019 ஆம் ஆண்டு வெளியான ‘போதை ஏறி புத்தி மாறி’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகம் ஆனவர் நடிகை துஷாரா விஜயன். ஆனால் ‘சார்பட்டா பரம்பரை’ படம் தான் கோலிவுட்டில் இவருக்கு மிகப்பெரிய அறிமுகத்தை தந்தது. பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் ஆர்யாவின் ஜோடியாக மாரியம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
தனுஷின் 50 வது படமான “ராயன்” 26 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அண்மையில் ‘ராயன்’ இசை வெளியீட்டு விழா நடந்தது.
ராயன்’ இசை வெளியீட்டு விழாவுக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய துஷாரா விஜயன் ‘நான் என்னுடைய 35 வது வயதில் சினிமாவில் இருந்து விலகி விடுவேன்.அதன்பின்னர் நடிக்க மாட்டேன். 35 வயதுக்கு பின் சுற்றுப்பயணம் மேற்கொள்ள வேண்டும் என்பது தான் என்னுடைய விருப்பம் என்று தெரிவித்தார்.நல்ல திறமை மிக்க நடிகை துஷாரா இப்படி ஒரு முடிவை எடுத்திருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரத்தை சேர்ந்த சஞ்சீவி என்பவர் குடும்பத்துடன் காரில் திண்டுக்கல் சென்றுக்கொண்டிருந்த நிலையில் விழுப்புரம் புறவழிச் சாலையில் இருசக்கர வாகனத்தின் மீது…
சென்னை, விருகம்பாக்கத்தில் வழக்கறிஞர் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது. சென்னை: சென்னையின் விருகம்பாக்கம்,…
மத்திய அரசின் பாதுகாப்பு கொடுப்பதற்காக விஜய்க்கும், பாஜகவுக்கும் எந்த உடன்பாடும் கிடையாது என அண்ணாமலை கூறியுள்ளார். கோயம்புத்தூர்: தமிழக பாஜக…
சென்னையில், இன்று (மார்ச் 31) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 65 ரூபாய் அதிகரித்து 8 ஆயிரத்து 425…
நடிகை ஐஸ்வர்யா ராய் பல சர்ச்சைகளில் சிக்கினாலும், தான் உண்டு தன் வேலை உண்டு என எந்த விமர்சனத்துக்கு பதில்…
This website uses cookies.