ரஜினி இப்படிப்பட்டவரா?.. ஜாதி பார்த்து ஒதுக்கி வைக்கப்பட்ட தனுஷின் பெற்றோர்கள்..!

Author: Vignesh
23 April 2024, 12:49 pm

கடந்த 2004ஆம் ஆண்டு தனுஷுக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்திருக்கும் நவம்பர் 18ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிகளுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். தனுஷ் ஐஸ்வர்யா இருவரும் கடந்த ஆண்டு தங்களுடைய பிரிவை அறிவித்தனர். திடீரென இருவரும் தங்களுடைய பிரிவை அறிவித்ததால், அனைவரும் அதிர்ச்சியடைந்தார்கள். இவர்களுடைய பிரிவிக்கு என்ன காரணம் என்று இதுவரை தெரியவில்லை.

dhanush - updatenews360

மேலும் படிக்க: விதி இப்படி ஆயிடுச்சு.. இதனால தான் என் பொண்ணு சினிமாவுக்கு வரல.. ஊர்வசி ஓபன் டாக்..!

பல காரணங்கள் கூறப்பட்டு வரும் நிலையில், சமரசம் செய்து வைக்க ரஜினிகாந்த் முயற்சித்து பின்னர் அது தோல்வியில் முடிந்ததாகவும் கூறப்பட்டது. முன்னதாக, 2004 ஆம் ஆண்டு நடந்த தங்களுடைய திருமணம் செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று இருவரும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

dhanush-aishwarya

மேலும் படிக்க: கீழே விழ பதறிய திரிஷா.. ஸ்டைலாக வந்து நடிகையுடன் செல்பி எடுத்து மகிழ்ந்த ரசிகர்கள்..!

இந்த விவகாரம் அதிகமாக பேசப்பட்டு வரும் நிலையில், தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா விவாகரத்து குறித்து பத்திரிக்கையாளர் சபிதா ஜோசப் தமிழ் சேனலுக்கு அண்மையில் பேட்டியளிக்கையில், ரஜினி குடும்பத்தில் தனுஷ் குடும்பத்திற்கு போதிய மரியாதை கொடுக்கவில்லை. அவர்களை உரிய முறையில் நடத்தவில்லை, அவர்களுக்கு இடையில், ஜாதி என்ற ஒன்று இருக்க வாய்ப்பு இருந்திருக்கிறது.

மேலும் படிக்க: நிர்வாண காட்சியில் நடிக்கும் போது.. ராதிகா ஆப்தே சொன்னதைக் கேட்டு ஆடிப்போன ரசிகர்கள்..!

என்னதான் ரஜினி காலா, கபாலி திரைப்படங்களில் எல்லாம் நடித்திருந்தாலும், அது அந்த இயக்குனரின் பார்வை தான். ரஜினி வீட்டில் பெரிதாக ஒன்றும் ஜாதி பார்க்கவில்லை என்று வைத்து கொள்வோம், ஆனால் ஒருவித இடைவெளி அங்கு இருந்திருக்கிறது. இவ்வளவு ஏன் அவர் இருக்கும் வீட்டிலே யார் யார் எந்தெந்த ரூமிற்குள் வரவேண்டும் என்பது குறித்தான கட்டுப்பாடுகளும் இருந்திருக்கிறது.

மேலும் படிக்க: அந்த விஷயத்தில் வீக்.. கல்யாணமே பண்ணி இருக்க மாட்டேன்.. சங்கீதா வாழ்க்கை இப்படி ஆகிருச்சே..!

எல்லா ரூமுக்குள்ளும் நீங்கள் அவ்வளவு எளிதாக சென்று விட முடியாது. தனுசு உடைய அப்பா பெரிய கண்ணியவான் என்று சொல்லிவிட முடியாது. அவருடன் இருக்கக்கூடிய எல்லா பணியாளர்களுமே பெண்கள் தான். அவருடைய, மூத்த மகன் செல்வராகவனும் தன்னுடைய மனைவியான சோனியா அகர்வாலை பிரிந்து தற்போது, இரண்டாவது திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார். அதேபோல, தனுசுக்கும் அவரது பெற்றோர் இரண்டாம் திருமணத்தை செய்து வைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

இந்த கட்டுரையில் குறிப்பிட்ட உள்ள தகவல்கள் அனைத்தும் பேட்டியில் பேசிய சபிதா ஜோசப்பின் தனிப்பட்ட கருத்துக்களாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே, இந்த தகவலுக்கும் அப்டேட் நியூஸ் 360 இணையதளத்திற்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது.

  • srilankan tamizhans are negatively portrayed in retro movie said by bismi இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!