“மடியிலேயே உயிர் போயிடுச்சு”…. விஜய்க்கு அந்த ஏக்கம் இப்பவும் இருக்கு… வருத்தத்துடன் பகிர்ந்த SAC..!

தமிழ் சினிமாவில் இயக்குனர், தயாரிப்பாளர், எழுத்தாளர், நடிகர் என பல முகங்களை கொண்டு விளங்கி வருபவர் எஸ்.ஏ. சந்திரசேகர். கோலிவுட்டில் அவர் ஒரு பச்சை குழந்தை என்னும் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். சட்டம் ஒரு இருட்டறை என்னும் திரைப்படம் தான் இவரை பிரபலம் அடைய வைத்தது. தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் 70திற்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

மேலும், தனது மகனும் பிரபல நடிகருமான தளபதி விஜய் அவர்களை அறிமுகம் செய்து வைத்ததும் இவர் தான். சந்திரசேகர் அவர்கள் இயக்கிய படங்கள் மூலமாக மக்களுக்கு நிறைய நல்ல கருத்துக்களை எடுத்துக் கூறியிருக்கிறார்.

இந்நிலையில், இறந்த தனது மகளின் கடைசி தருணங்களை குறித்து, எஸ் ஏ சந்திரசேகர் மற்றும் அவர் மனைவி சோபா ஆகியோர் ஒரு பேட்டியில் வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர்.

சமீபகாலமாக தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரும், விஜய்யின் தந்தையுமான எஸ் ஏ சந்திரசேகர் பேட்டிகளில் பங்கேற்று தங்கள் குடும்பத்தில் நடந்த சம்பவங்கள் குறித்து வருதத்துடன் பேசி வருகிறார்.

இதுகுறித்து, தன் மனைவி ஷோபாவுடன், பேட்டி ஒன்றில் இறந்து போன தனது மகள் குறித்து சோகமான தருணங்களை, உருக்கத்துடன் கூறியுள்ளார்.

அதாவது, தனது மகளுக்கு நோய் இருப்பது தெரிந்து, மிகவும் கவனத்துடன் பார்த்து வந்ததாகவும், ஏவிஎம் உள்ளிட்ட எந்த இடத்துக்கு ஷூட்டிங் சென்றாலும், மகளையும் உடன் அழைத்துக் கொண்டு சென்றதாகவும்,

ஒரு நாள் தான் ஷூட்டிங் கிளம்பும்போது, திடீரென தன் கையைப் பிடித்துக் கொண்டு அப்பா என் கூடவே இருங்க என அழுதாள் என மிகவும் உருக்கத்துடன் கண்கலங்கி தெரிவித்தார். அப்படியே கொஞ்ச நேரத்தில் வாயிலிருந்து ரத்தம் வழிய ஆரம்பித்து விட்டது. இதனால், நாங்களும் அவளை தூக்கிக்கொண்டு ஓடினோம்.

இருந்தாலும் கடைசி நேரத்தில் தன் மடியிலேயே, மகளின் உயிர் பிரிந்து விட்டது என்றும், விஜய்க்கு தங்கையை பிரிந்த அந்த ஏக்கம் இப்போதும் இருக்கிறது. இதை மட்டும் எங்களால் வாழ்க்கையில் மறக்கவே முடியாது என இருவரும் கண்ணீருடன் கூறியுள்ளனர்.

Poorni

Recent Posts

என்ன நடக்குது…கண்டிப்பா தட்டி கேட்கனும்‌‌..இயக்குனர் மோகன் ஜி கொந்தளிப்பு.!

மோகன் ஜி உருக்கமான பதிவு பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள எளம்பலூர் மலையின்பாதியை காணும்,இதையெல்லாம் கேட்க யார் வருவார் என தமிழ்…

43 minutes ago

அமைச்சரின் குழந்தைகள் அறிவற்றவர்களா? அண்ணாமலை கடும் தாக்கு!

பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் மகன் மூன்று மொழி சொல்லிக் கொடுக்கக்கூடிய பள்ளியில்தான் படிக்கிறார், அதனால் அவருக்குத்தானே அறிவில்லை என்று அர்த்தம்…

2 hours ago

என் போனை கொடுக்குறேன்..செக் பண்ணி பாத்துக்கோங்க…டி.இமான் ஓபன் டாக்.!

டி. இமான் தனிப்பட்ட வாழ்க்கை தமிழ் சினிமாவில் தனித்துவமான இசையமைப்பாளராக திகழும் டி.இமான் விஸ்வாசம், மைனா, கும்கி, வருத்தப்படாத வாலிபர்…

3 hours ago

மனைவியின் தகாத உறவால் கணவர் கொலை.. விசாரணையில் வெளியான மற்றொரு சம்பவம்!

சிவகாசியில், மனைவியின் தகாத உறவைத் தட்டிக் கேட்ட கணவர் கள்ளக்காதலன் உள்ளிட்ட 4 பேரால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். விருதுநகர்:…

3 hours ago

போடு வெடிய..! OTT-யில் வியூஸை அள்ளும் குடும்பஸ்தன்..!

குடும்பஸ்தன் திரைப்படம் – ஓடிடி & வசூல் சாதனை! மிக குறைந்த பட்ஜெட்டில் உருவான குடும்பஸ்தன் திரைப்படம் திரையரங்குகளில் பெரிய…

4 hours ago

அதிமுக கோட்டையை வெல்ல வியூகம்? திமுக தலைமையால் திருப்பூருக்கு வந்த சோதனை!

திருப்பூர் மாவட்ட திமுகவை நான்காக பிரித்து பொறுப்பாளர்கள் நியமிக்கப்ப்பட்டுள்ள நிலையில், இதனால் அதிமுக இடையே கடும் போட்டி நிலவும் என…

4 hours ago

This website uses cookies.