தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாக உள்ளவர் சாய் பல்லவி. பல படங்களில் கதைக்கு, திறமைக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிக்கும் இவர் இதுவரை கவர்ச்சி துளிகூட காட்டியதில்லை.
இந்த நிலையில் முதன்முறையாக பாலிவுட்டில் சாய் பல்லவி நடிக்க உள்ளார். ராமாயணம் படத்தில் சீதையாக நடிக்கிறார். இந்த படம் பான் இந்தியா படமாக உருவாகிறது.
இப்படி இருக்க சாய் பல்லவி குறித்து சமீபத்தில் ஒரு தகவல் பரவியது. ராமாயணம் திரைப்படத்தில் சீதையாக நடிக்கும் காரணமாக, சாய் பல்லவி அசைவ உணவை முழுமையாக நிறுத்தி சைவ உணவுக்குச் சென்றுவிட்டார் என்று ஒரு வதந்தி பரவியது.
இதையும் படியுங்க: விவாகரத்து அறிவித்த பிரபல இயக்குனர்.. ரஜினி பிறந்தநாளில் அதிர்ச்சி!
மேலும், வெளியூர் சென்றாலும், அவருடன் சமையற்காரரை அழைத்துச் செல்வதாகவும், ஹோட்டல்களில் உணவருந்துவதில்லை எனவும் கூறப்பட்டது. இதை அறிந்த ரசிகர்கள், “சாய் பல்லவி இப்படி மாறிட்டாங்களே!” என பேச ஆரம்பித்தனர்.
இந்நிலையில், சாய் பல்லவி தனது ட்விட்டர் பக்கத்தில் இதற்கு விளக்கமளித்துள்ளார். அவர் குறிப்பிட்டது : “வதந்திகள் மற்றும் பொய்களைக் கவனித்தபோதெல்லாம் நான் பெரும்பாலும் அமைதியாகவே இருந்தேன். உண்மை எது என்பதை கடவுள் அறிவார்.
ஆனால், இந்த வதந்திகள் தொடர்ந்து பரவுவது வேதனையானது. எனவே, இப்போது எதிர்வினையாற்றும் நேரம் வந்துவிட்டது. குறிப்பாக, எனது படங்கள் வெளியீட்டுக்கு முன்போ, முக்கிய அறிவிப்புகளின் போது இத்தகைய தகவல்கள் பரவுகின்றன.
அடுத்த முறையிலிருந்து, இத்தகைய வதந்திகள் மீண்டும் ஏற்பட்டால், நான் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க தயங்கமாட்டேன்” என்று அவர் உறுதியுடன் தெரிவித்தார்.
சொந்தத் தொகுதியிலேயே தோற்ற பிரசாந்த் கிஷோர் விஜயை எப்படி ஜெயிக்க வைக்கிறார் என்பதைப் பார்க்கலாம் என சரத்குமார் கூறியுள்ளார். பெரம்பலூர்:…
படப்பிடிப்பில் நடந்த சுவாரஸ்ய தகவலை நடிகை ராதிகா சரத்குமார் பகிர்ந்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. 2015ல் வேல்ராஜ் இயக்கத்தில்…
நடிகை அளித்த பாலியல் வழக்கில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று காவல் நிலையத்தில் ஆஜராகினார். சென்னை: நாம் தமிழர்…
அஜித் தற்போது தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக உள்ளார். விடாமுயற்சி படம் சமீபத்தில் வெளியான நிலையில் அஜித்தின் அடுத்த படமான…
சினிமாவுக்கு முழுக்கு போட உள்ள விஜய் தனது கடைசி படம் ஜனநாயகன் என அறிவித்துள்ளார். மேலும் அரசியலில் தனது முழு…
வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை திடீர் உயர்ந்துள்ளது சாமானிய மக்களுக்கு ஷாக்கை கொடுத்துள்ளது. பொதுத்துறையை சேர்ந்த எண்ணெய் நிறுவனக்ள் 14.20…
This website uses cookies.