அடக்கடவுளே, என்ன பண்ணுனாலும் விட்டுப்போகாத பிரச்சனை… உடைந்து போன சமந்தா..!
Author: Vignesh27 March 2023, 5:00 pm
மாநாடு படத்தில் எஸ். ஜே சூர்யா சொல்வது போல், சமந்தா வந்தார், நடித்தார், முதலிடத்தை பிடித்தார், முதலிடத்தில் இருக்கிறார், Repeatu. இந்த வளர்ச்சி எப்போது நடந்தது திட்டவட்டமாகத் தெரியவில்லை. எந்தப் படத்தின் மூலம் இவருக்கான அங்கீகாரம் இவ்வளவு தூரம் கிடைத்தது என்றும் தெரியவில்லை.
ஆனால் காத்துவாக்குல இரண்டு காதல் படம் ரிலீஸான பிறகு சென்னை முழுக்க கதீஜா பற்றிய பேச்சுதான். 2010- ல் மாஸ்கோவின் காவேரி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் சமந்தா. பாணா காத்தாடி, நீதானே என் பொன்வசந்தம், நான் ஈ, கத்தி, 24, மெர்சல், சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்களின் மூலம் பக்கத்து வீட்டு பெண் போல நடித்து இன்றளவும் கனவுக்கன்னியாக வலம் வருகிறார்.
தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு படங்களிலும் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். இந்நிலையில், தற்போது சம்மு குட்டி விஜய்சேதுபதியுடன், “காத்துவாக்குல ரெண்டு காதல்” படத்தில் இவரின் நடிப்புக்கு ஏகப்பட்ட பாராட்டுக்கள்.பின் 2017 ஆம் ஆண்டு இவர் பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா மகன் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். சில மாதங்களுக்கு முன், இருவரும் தன்னுடைய விவாகரத்தை அறிவித்தனர்.
இந்த நிலையில், கடந்த ஆண்டு மயோசிடிஸ் என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டார். எழுந்து கூட நடக்க முடியாமல் தீவிர சிகிச்சையில் இருந்தார்.அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதவிட்டு இளசுகளை சுண்டி இழுத்து வருகிறார். அந்த வகையில் தற்போது இணையத்தில் அவரது அழகான புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
இதனிடையே, சமீபத்தில் சமந்தா நடித்த சாகுந்தலம் படத்தின் பிரமோஷனுக்காக பாலிவுட் ஊடகத்திற்கு பேட்டியளித்துள்ளார். அப்போது, மயோசிடிஸ் நோயில் இருந்து மீண்டு குணமடைந்துவிட்டீர்களா என்ற கேள்வி கேட்கப்பட்டதற்கு சமந்தா, இன்னும் அந்த நோயில் இருந்து முழுமையாக விடுபடவில்லை என்றும் முன்பை விட தனது உடல் நிலை நல்ல முன்னேற்றம் தற்போது ஏற்பட்டுள்ளது என்றும் கூடிய விரைவில், மயோசிடிஸ் நோயின் பிடியில் இருந்து முழுமையாக விடுபடுவேன் என்ற நம்பிக்கை இருப்பதாக சமந்தா தெரிவித்துள்ளார்.