சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் ஆக திகழ்ந்துவரும் நயன்தாரா கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு மேல் தன் வளர்ச்சியில் தனக்கான ஒரு இடத்தை பெற்று கோட்டையை கட்டி வருகிறார். முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் தற்போது நடித்து வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் பாலிவுட்டில் ஜவான் படத்தில் நடித்ததன் மூலம் தன் மார்க்கெட்டை அதிகரித்து 12 கோடி சம்பளமாக உயர்த்தி அதிர வைத்தார். தற்போது, தன்னுடைய இரண்டாம் திருமண நாளை கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் இரட்டை ஆண் குழந்தைகளுடன் கொண்டாடி புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். அந்த புகைப்படங்களும் இணையதளத்தில் ராக்கெட் வேகத்தில் வைரலானது.
இந்நிலையில், நடிகர் கவின் நடிக்கும் ஒரு படத்தில் நயன்தாரா நடிக்க உள்ளதாகவும், மலையாளத்தில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாகும் செய்திகள் கோலிவுட்டில் முணுமுணுக்கப்பட்டு வருகிறது. ஆனால், நடிகை நயன்தாரா திடீரென மலையாள படத்தில் இருந்து விலகி இருக்கிறாராம். அதாவது, கோடம்பாக்கத்தில் உள்ள ஒரு சில பேர் ஒரு வேலை நயன்தாரா போட்ட கண்டிஷன் ஒத்துழைப்பு தராததால் தான் நயன்தாரா அந்த படத்தில் விலகி இருப்பதாக கூறி வருகிறார்கள்.
அப்படி 20 கிலோமீட்டர் தூரத்தில் தான் படப்பிடிப்பு இருக்க வேண்டும். வெளிநாடு ஷூட்டிங் இருந்தால் வரமாட்டேன் என்றும், பல கண்டிஷன்களை போடுவாராம். அதற்காக, உள்ளூரிலே செட்டு போட்டு தயாரிப்பாளர்கள் எடுத்தும் வருகிறார்கள். இந்த கண்டிஷனுக்கு எல்லாம் ஒற்றுக்கொள்ளவில்லை என்பதால், தான் நயன்தாரா படத்திலிருந்து விலகி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. தற்போது, நயன்தாராவுக்கு பதில் அந்த படத்தில் நடிகை சமந்தாவை நடிக்க வைக்க படக்குழு பேச்சு வார்த்தைகள் நடத்தி இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே கெளதம் மேனன் இயக்கத்தில் சமந்தா விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்திற்கு அமித்ஷா வந்துள்ள நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளார். மேலும் தமிழக பாஜக தலைவராக உள்ள…
சூர்யா 45 ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு…
பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…
தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…
இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…
This website uses cookies.