தமிழ் சினிமாவின் மூலம் அறிமுகமான நடிகை சமந்தா தற்போது தென் இந்தியாவின் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் பல ஹிட் திரைப்படங்களில் நடித்து வரும் சமந்தா தற்போது “மா இண்டி பங்காரம்” என்ற தெலுங்கு திரைப்படத்தை தயாரித்து நடித்தும் வருகிறார்.
சமந்தா தான் பல ஆண்டுகளாக மையோசிடிஸ் என்ற அரிய நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கடந்த 2022 ஆம் ஆண்டு வெளிப்படையாக அறிவித்தார். இதற்காக அமெரிக்காவில் தீவிர சிகிச்சையையும் மேற்கொண்டு வருகிறார்.
சமந்தா சினிமாவில் அறிமுகமாவதற்கு முன்பிருந்தே பல விளம்பரப் படங்களில் நடித்து வருகிறார். அவர் சினிமாவில் நடித்து புகழ் பெற்ற பிறகு பல பிராண்டுகளுக்கு பிராண்ட் அம்பாசிடராகவும் இருந்தார். இதில் பல துரித உணவுகளின் நிறுவனங்களும் அடங்கும். ஆனால் சமந்தா எப்போதும் உடல் ஆரோக்கியத்தை குறித்தே பேசி வருகிறார்.
இந்த முரண் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் அவரிடம் கேட்டபோது, அதற்கு அவர், “நான் சினிமாத் துறைக்குள் நுழைந்தபோது வெற்றி என்பது எப்படி நிர்ணயிக்கப்பட்டது என்றால், உங்களது முகம் எத்தனை பிராடெக்டுகளில் இருக்கிறது என்பதை பொறுத்துதான். அந்த சமயத்தில் என்னை தேடி பல மல்டி நேஷனல் பிராண்டுகள் வந்தன. அப்போது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. நமக்கு அங்கீகாரம் கிடைக்கிறது என்று நினைத்தேன்.
நான் 20 வயதுகளில் இருந்தபோது துரித உணவுகளை உட்கொண்டிருக்கிறேன். நான் செய்த செயல்களினால் விளைவுகள் ஏற்படாது என நினைத்திருந்தேன். ஆனால் அது தவறு என்று பின்னாளில் புரிந்துகொண்டேன். நான் இனி விளம்பரப்படங்களில் நடிக்கப்போவதில்லை. கடந்த வருடம் மட்டும் 15 பிராண்டுகளுக்காக வந்த விளம்பரங்களை தவிர்த்திருக்கிறேன். அது பலகோடி ரூபாய் வருமானம்” என்று பதிலளித்திருந்தார். சமந்தாவின் இந்த பேட்டி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
ரவீனா தாஹா 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரீயலான “தங்கம்” தொடரில் குழந்தை நட்சத்திரமாக…
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…
புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…
தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின்…
அடுத்த படத்துக்கு யார் இயக்குனர்? அஜித்குமார் நடிப்பில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…
தமிழகத்துக்கு அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி, தேர்தல் வியூகம் என அடுத்தடுத்து…
This website uses cookies.