தமிழ் சினிமாவில் உதவி இயக்குனராக அறிமுகம் ஆகி பின்பு நடிகர்,இயக்குனர் என கலக்கி வருபவர் சமுத்திரக்கனி.இவர் முதன்முதலில் சசிகுமார் இயக்கிய சுப்ரமணியபுரம் படத்தில் வில்லனாக தன்னுடைய நடிப்பு பயணத்தை தொடங்கினார்.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தன்னுடைய ஆரம்ப கால சினிமா பயணத்தை பகிர்ந்துள்ளார்.அதில் அவர் பிரபல வில்லன் நடிகராக இருந்த ஒருவரை பார்த்து தான் எனக்கு நடிப்பின் மீது ஆர்வம் வந்தது என கூறியிருப்பார்.
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் தன்னுடைய அசாதாரண நடிப்பால்,அதுவும் நெகடிவ் ரோலில் நடித்து ரசிகர்களின் பாராட்டை பெற்றவர் நடிகர் ரகுவரன்,இவரது தனித்துவமான நடிப்பு மற்றும் அவரது குரல் இன்றும் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.இந்த நிலையில் சமுத்திரக்கனி என்னுடைய ரோல் மாடல் ரகுவரன் சார் தான்,அவரை போல தான் நான் நடந்துகொள்வேன்,அவரை பார்த்து தான் எனக்கு நடிக்க ஆசையே வந்தது என தன்னுடைய ஆரம்பல கால பயணத்தை அந்த நேர்காணலில் பகிர்ந்திருப்பார்.
சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளிவந்த திரு.மாணிக்கம் திரைப்படம் அனைவரையும் பாராட்டை பெற்று OTT தளத்தில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது,இப்படத்தில் இவர் ஒரு நேர்மையான மனிதராக நடித்திருப்பார் என்று சொல்வதை விட வாழ்ந்திருப்பார் என்று சொல்லலாம்,அந்த அளவிற்கு மிக அற்புதமாக நடித்து மக்கள் மனதை கொள்ளையடித்திருப்பார்.
கோவை குனியமுத்தூர் டைமண்ட் அவென்யூ பகுதியில் நேற்று இரவு இரு தரப்பினர் இடையே நடைபெற்ற மோதலில் சுண்ணாம்பு காளவாய் பகுதியைச்…
சின்னத்திரையில் பிரபலமானால் போதும் பெரிய திரையில் தானாகவே வாய்ப்புகள் வந்து விழும். இது இந்த காலத்தில் எழுதப்படாத விதியாக உள்ளது…
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
This website uses cookies.