தமிழ் சினிமாவில் உதவி இயக்குனராக அறிமுகம் ஆகி பின்பு நடிகர்,இயக்குனர் என கலக்கி வருபவர் சமுத்திரக்கனி.இவர் முதன்முதலில் சசிகுமார் இயக்கிய சுப்ரமணியபுரம் படத்தில் வில்லனாக தன்னுடைய நடிப்பு பயணத்தை தொடங்கினார்.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தன்னுடைய ஆரம்ப கால சினிமா பயணத்தை பகிர்ந்துள்ளார்.அதில் அவர் பிரபல வில்லன் நடிகராக இருந்த ஒருவரை பார்த்து தான் எனக்கு நடிப்பின் மீது ஆர்வம் வந்தது என கூறியிருப்பார்.
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் தன்னுடைய அசாதாரண நடிப்பால்,அதுவும் நெகடிவ் ரோலில் நடித்து ரசிகர்களின் பாராட்டை பெற்றவர் நடிகர் ரகுவரன்,இவரது தனித்துவமான நடிப்பு மற்றும் அவரது குரல் இன்றும் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.இந்த நிலையில் சமுத்திரக்கனி என்னுடைய ரோல் மாடல் ரகுவரன் சார் தான்,அவரை போல தான் நான் நடந்துகொள்வேன்,அவரை பார்த்து தான் எனக்கு நடிக்க ஆசையே வந்தது என தன்னுடைய ஆரம்பல கால பயணத்தை அந்த நேர்காணலில் பகிர்ந்திருப்பார்.
சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளிவந்த திரு.மாணிக்கம் திரைப்படம் அனைவரையும் பாராட்டை பெற்று OTT தளத்தில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது,இப்படத்தில் இவர் ஒரு நேர்மையான மனிதராக நடித்திருப்பார் என்று சொல்வதை விட வாழ்ந்திருப்பார் என்று சொல்லலாம்,அந்த அளவிற்கு மிக அற்புதமாக நடித்து மக்கள் மனதை கொள்ளையடித்திருப்பார்.
கடந்த 21ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.…
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ் மாநில முஸ்லிம் லீக் அமைப்பின்…
ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் தேர்களுடன்…
திண்டுக்கல், செம்பட்டி சேடப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி சக்திவேல் இவரது மனைவி கவுசல்யா, 2001ல் இவர்களது பக்கத்து விட்டில் நகை திருடுபோனது,…
இயக்குநர் வினாயக் சந்திரசேகரன் 'குட் நைட்' படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை வலுவாகத் தொடங்கினார். குட் நைட் திரைப்படம்…
கடலூரில் மாயமான இரண்டு இளைஞர்களை சக நண்பர்களே அடித்துக் கொன்று புதைத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடலூர்: கடலூர் மாவட்டம்,…
This website uses cookies.