50 பேரின் ஆணுறுப்பை வெட்டி வீசணும்….. நடிகை சனம் ஷெட்டி கொந்தளிப்பு!

கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் கிட்டத்தட்ட 50 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுக்க பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இச்சம்பவத்தை அடுத்து பெண்களுக்கு பாதுகாப்பு தரவேண்டும். பெண்களுக்கு எதிரான பாலியல் சுரண்டல்கள் பற்றி பல பேர் பொதுவெளியில் வந்து வெளிப்படையாக தங்களது கருத்துக்களையும் போராட்டங்களையும் நடத்தி வருகிறார்கள்.

அந்த வகையில் பிரபல நடிகையான சனம் செட்டி தனியார் அமைப்புடன் இணைந்து வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்தினார். இந்த நிலையில் அந்தப் போராட்டத்தின் போது பேசிய நடிகை சனம் செட்டி… நான் நடிகை என்பதால் வெறும் பொழுதுபோக்கு சம்பந்தமான பதிவுகளை மட்டும் சமூக வலைத்தளங்களில் பதிவிட சொல்கிறார்கள் .

இந்த சமூகத்தில் தான் நானும் வாழ்கிறேன். நாளைக்கு என்னுடைய வீட்டில் கூட இது போன்ற விஷயங்கள் நடந்தால் அப்போதும் எப்படி பொழுது போக்குக்காக பதிவுகளை பகிர முடியும்? இதனால் சினிமா வாய்ப்புகள் போனால் கூட போகட்டும் பரவாயில்லை… எது போனாலும் நான் பேசுவேன்.

கல்கத்தா மருத்துவமனையில் ஒரு டாக்டருக்கு நடந்தது நாளைக்கு எனக்கு நடக்காது என்று என்ன நிச்சயம்? என்ன கியாரண்டி ? யார் கியாரண்டி கொடுப்பார்கள்? ஹேமா அறிக்கை வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சொந்த அப்பாவே அவரது குழந்தையை பாலியல் துன்புறுத்தல் செய்யும் சமூகத்தில் நாம் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதில் எங்கே பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது? அதனால் இப்போது இருக்கும் தண்டனை போதாது பாலில் துன்புறுத்தல் செய்பவர்களின் ஆணுறுப்பை அறுத்து போடவேண்டும்.

அதை பார்த்து யாருக்கும் அந்த ஒரு சிந்தனை கூட வரவே கூடாது. ஆணுறுப்பை வெட்டி வீசினால் தான் பெண்களுக்கு பெண்களுக்கு எதிரான வன்முறைகளை அறவே ஒழிக்க முடியும். நம் நாட்டில் பெண்களுக்கு பாலியல் தொந்தரவுகள் இருக்காது என்பதை உறுதி செய்ய முடியுமா?

நீதிமன்றம் காவல்துறை சட்டம் எல்லாம் எதற்கு? தமிழ்நாட்டில் 6 முதல் 10 வரை உள்ள குழந்தைகளுக்கு கூட பாலியல் வன்கொடுமை தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது.

ஒருத்தனுக்கு நாம கொடுக்கிற தண்டனையை பார்த்து இன்னொருத்தர் யாருக்கும் அதுபோன்ற சிந்தனை கூட மனதில் வரக்கூடாத அளவுக்கு நாம் அதை ஏற்படுத்த வேண்டும் என மிகுந்த ஆவேசத்தோடு நடிகை சனம் ஷெட்டி பேசியிருந்தார். அவரின் இந்த பேச்சுக்கு பலரும் பாராட்டுகளை குவித்து வருகிறார்கள்.

Anitha

Recent Posts

கடலூரில் செட் போட்டு கள்ளநோட்டு அச்சடிப்பு.. விசிக நிர்வாகி அதிரடி நீக்கம்!

கடலூர், திட்டக்குடி அருகே விவசாய நிலத்தில் கள்ளநோட்டு அச்சிட்டு வந்ததாக விசிக நிர்வாகி உள்பட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.…

5 minutes ago

90களின் நயன்தாராவுக்கு ரூட்டு விட்ட முரட்டு நடிகர்… அஜித் மீதுள்ள ஆசையால் சினிமாவை விட்டு விலகல்!

முரட்டு நடிகர் வீசிய காதல் வலையில் சிக்கித் தவித்த பிரபல நடிகை சினிமாவை விட்டே ஒதுங்கிய விஷயம் குறித்து பிரபலம்…

33 minutes ago

மெரினா கடலில் இளம்பெண்கள் செய்த செயலைப் பாருங்க.. ரோந்து போலீசார் பகீர் தகவல்!

சென்னை மெரினா கடலில் பெற்றோரின் திடீர் பிரிவால் மகள்கள் விபரீத முடிவை எடுக்கச் சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை…

53 minutes ago

வீர தீர சூரன் நான் இல்லை, நீங்கதான்- திண்டுக்கலில் சீயான் விக்ரம் செய்த சம்பவம்…

கலவையான விமர்சனம்… எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிப்பில் கடந்த வாரம் வெளியான “வீர தீர சூரன் பார்ட்…

1 hour ago

காரை துரத்திய பைக்.. கல் வீசி கண்ணாடி உடைப்பு : NH சாலையில் இளைஞர்கள் நடத்திய போதை ஆட்டம்!

காஞ்சிபுரத்தை சேர்ந்த சஞ்சீவி என்பவர் குடும்பத்துடன் காரில் திண்டுக்கல் சென்றுக்கொண்டிருந்த நிலையில் விழுப்புரம் புறவழிச் சாலையில் இருசக்கர வாகனத்தின் மீது…

1 hour ago

துர்நாற்றம் வீசிய வீடு.. கொடூரமாகக் கிடந்த கருணாஸ் கட்சி நிர்வாகி.. சென்னையில் அதிர்ச்சி!

சென்னை, விருகம்பாக்கத்தில் வழக்கறிஞர் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது. சென்னை: சென்னையின் விருகம்பாக்கம்,…

2 hours ago

This website uses cookies.