தமிழ் சினிமா உலகில் கவுண்டமணி, செந்திலுக்கு பிறகு நடிகர் சந்தானம் காமெடியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர். இவர் நகைச்சுவை நடிகராக இருந்து தற்போது தமிழ் நகைச்சுவை உலகில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். சின்னத்திரை நிகழ்ச்சியின் மூலம் தான் நடிகர் சந்தானம் மக்கள் மத்தியில் பிரபலமானார். அதன் பின் இவர் முதலில் குணால் நடித்த ‘ பேசாத கண்ணும் பேசுமே’ என்ற படத்தில் சிறு காட்சியில் தோன்றியிருப்பார். இந்த திரைப்படத்திற்கு பின்னர் தான் நடிகர் சந்தானம் காதல் அழிவதில்லை என்ற படத்தில் நடித்திருந்தார்.
அதனை தொடர்ந்து நடிகர் சந்தானம் பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி நடிகராக நடித்து இருந்தார். நடிகர் சந்தானம் கடந்த சில வாருடங்களாக சினிமாவில் ஹீரோவாக திகழ்ந்து கொண்டு வாருடங்களாக ஆனால், சில ஆண்டுகளாக இவர் நடிப்பில் வெளியான சபாபதி, டிக்கிலோனா, பாரிஸ் ஜெயராஜ், பிஸ்கோத், டகால்டி போன்ற படங்கள் எல்லாம் பெரிய அளவில் வெற்றி அடையவில்லை.
இந்நிலையில், சந்தானம் நடிப்பில் வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டது. கவுண்டமணி செந்தில் புகழ்பெற்ற நகைச்சுவை கதாபாத்திரமான வடக்குப்பட்டி ராமசாமி என்ற பெயரை தலைப்பாக வைத்துள்ளார்கள். பிப்ரவரி 2ஆம் தேதி தியேட்டர்களில் வடக்குப்பட்டி ராமசாமி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், சந்தானம் சிவ பக்தர் என்பதை தாண்டி சத்குருவின் சீடர் என்பது அனைவரும் அறிந்த விஷயம். நேற்று சிவராத்திரியை முன்னிட்டு கோவை ஈஷா மையத்தில் ஆட்டம் பாட்டத்துடன் வழிபாட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதில், சந்தானம், பூஜா ஹெக்டே, தமன்னா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது, சந்தானம் கண்ணீர் சிந்த சிவனை உருக்கமாக வழிபட்டு இருக்கிறார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இழப்பீடு கேட்ட இளையராஜா ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படத்தில் ஆங்காங்கே பல காட்சிகளில்…
சேலத்தில் பாஜக மாநில துணை தலைவர் கே.பி.ராமலிங்கம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது, செந்தில் பாலாஜியின் செய்தியை திசை…
டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மாதம் 6ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை…
காஷ்மீர் பகல்காமில் தீவிரவாதிகள் தாக்குதலில் 28 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் இந்தியாவையே உலுக்கியுள்ளது. ஜம்மு காஷ்மீரின் பகல்காம் பள்ளத்தாக்கில் சுற்றுலா…
பிக்பாஸ் ஜோடி தெலுங்கு தொலைக்காட்சித் தொடர்களின் மூலம் தனது ஆக்டிங் கெரியரை தொடங்கியவர் பாவனி. அதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில்…
ஆந்திர மாநிலம் விஜயநகரம் நகரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ஒரு மாணவி செல்போன் பேசிக் கொண்டிருந்ததால் ஆத்திரமடைந்த ஆசிரியை…
This website uses cookies.