டோலிவுட்டில் முன்னனி நடிகையாக வலம் வரக்கூடிய நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் வித்தியாசமான கதாபாத்திரங்கள், கதைகளை தேர்ந்தெடுத்து தனது தொடர்ச்சியான வெற்றி மூலம் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார். தற்போது ‘சபரி’ படத்திலும் இதற்கு முன்பு ஏற்றிடாத வித்தியாசமான ஒரு கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார்.
இவ்வளவு பிஸியாக நடித்துக் கொண்டிருந்தாலும் சோசியல் மீடியாவில் தனது ரசிகர்களுக்கு தரிசனம் கொடுக்க இவர் தவறுவதே இல்லை. அடிக்கடி போட்டோக்கள், வீடியோக்கள் பதிவிட்டு வருகிறார்.
சமீபகாலமாக தெலுங்கு படங்களில் அதிகம் கவனம் செலுத்தி வரும் வரலட்சுமி. சமீபத்தில் கூட பாலகிருஷ்ணாவுடன் நடித்திருந்த வீரசிம்ஹா ரெட்டி படம் பொங்கலுக்கு ரிலீசாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
அடுத்ததாக நடிகை வரலட்சுமி நடிப்பில் கொன்றால் பாவம் என்கிற திரைப்படம் தயாராகி வருகிற மார்ச் 10-ந் தேதி ரிலீசாக இருக்கிறது. இப்படத்தின் விழா சமீபத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
இவ்விழாவில், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட வரலட்சுமியின் தந்தை சரத்குமாரிடம், அவரது மகளின் திருமணம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டதற்கு பதிலளித்த சரத்குமார், “அது வரலட்சுமியுடைய தனி விருப்பம். தான் யாரையும் கட்டாயப்படுத்த மாட்டேன் என்றும், தன்னுடைய வாழ்க்கை துணையை தேர்ந்தெடுத்துவிட்டதாக வரலட்சுமி வந்து தன்னிடம் கூறும்போது அவருக்கு திருமணம் செய்துவைப்பேன்” என வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
இதனிடையே, நடிகர் விஷாலை சில ஆண்டுகள் காதலித்த வரலட்சுமி, பின்னர் அவரை பிரேக் அப் செய்து பிரிந்தது குறிப்பிடத்தக்கது.
பிக்பாஸ் தர்ஷன் திடீர் கைது… பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே மிகப் பிரபலமாக அறியப்பட்டவர் தர்ஷன். இலங்கையை…
தூத்துக்குடி பாத்திமா நகர் 6வது தெருவை சேர்ந்தவர் ராஜ் (56) மீன்பிடித் தொழில் செய்து வரும் இவர் தற்போது மகிழ்ச்சிபுரம்…
திமுக அரசின் அவலங்களை எடுத்துரைக்கும் வகையில் அதிமுக செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் சார்பில் தாம்பரத்தில் பொது கூட்டம் மற்றும் வீதி…
வக்ஃபு சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கலவையில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்…
சச்சின் ரீரிலீஸ்… விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான “சச்சின்” திரைப்படம் 90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக…
This website uses cookies.