காதலிக்க மறுத்தது குத்தமா… ஓவர் டார்ச்சரால் சினிமாவை விட்டே ஓடிய பிரபல நடிகை..!

Author: Vignesh
10 June 2024, 7:05 pm
nagma
Quick Share

தமிழ் சினிமாவில் மூத்த நடிகர்களில் ஒருவரான சரத்குமார் திரைப்பட நடிகர் மற்றும் தமிழ்நாட்டு அரசியல்வாதியாக இருந்து வருகிறார். ஆரம்பத்தில் வில்லன் வேடங்களில் நடித்து பிரபலமானவராக அறியப்பட்ட இவர் பின்னாளில் சூரியன் படத்தில் முதன்மை வேடத்தில் நடித்து சிறப்பு கவனம் பெற்றார்.

திரைத்துறைக்கு வருவதற்கு முன்னரே சாயாதேவி என்பவரைக் காதலித்து திருமணம் செய்துக்கொண்ட சரத்குமார் வரலட்சுமி, பூஜா என்னும் இரு மகள்கள் பெற்றார் . அதன் பின்னர் அவர் சினிமாவில் நடித்த போது நடிகை நக்மாவுடன் ஏற்பட்ட காதலால் மனைவி சாயாதேவி அவரை விவாகரத்து செய்துவிட்டார். அதன் பின்னர் நடிகை ராதிகாவை முறைப்படி இரண்டாம் திருமணம் செய்துக்கொண்டார்.

மேலும் படிக்க: இளையராஜாவை மிரட்டி திருமணத்திற்கு வரவழைத்த தயாரிப்பாளர்.. பயங்கரமான ஆளா இருக்காரே..!

இந்நிலையில், தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பை பெற்ற சரத்குமார் ஆரம்பகால கட்டத்தில் பல காதல் கிசுகிசுக்கினார். அதுவும், திருமணமான போதும் கூட நடிகைகளுடன் ரகசிய காதலில் இருந்தார் என்றெல்லாம் கூறப்பட்டது. அந்தவகையில், வட இந்தியாவில் இருந்து தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகி டாப் இடத்தினை பிடித்த நக்மா தற்போது சரத்குமார் நடிகை நக்மாவுக்கு காதல் டார்ச்சர் கொடுத்த விஷயம் பற்றி கூறி உள்ளார்.

nagma

அதாவது, நடிகை நக்மா தெலுங்கில் நடிக்க ஆரம்பித்தார். நக்மா வாழ்க்கையில் நிறைய சம்பவங்கள் நடந்திருக்கிறது. ராதிகாவின் மூன்றாம் கணவர் சரத்குமார் நக்மாவை டார்ச்சர் செய்தார். ரகசிய போலீஸ் படத்தின் போது அவருடன் பழகி காதலித்தார். சரத்குமார் அப்படி நக்மா நடிக்கும் இடங்களுக்கு சென்று சரத்குமார் டார்ச்சர் செய்ய ஆரம்பித்திருக்கிறார்.

மேலும் படிக்க: சாந்தனுவுக்கு இரண்டாம் திருமணமா?.. நச்சுனு ரிப்ளே செய்த மனைவி KiKi..!(Video)

காதல் கோட்டையில் அஜித்துக்கு நெருக்கமாக நடிக்கும் போது அவருடன் ஏன் நடிக்கிறாய் நடிக்க கூடாது என்று நக்மாவை அதட்டி இருக்கிறார். அதேபோல, வேட்டியை மடித்து கட்டு படத்தில் பாக்கியராஜ் உடன் நெருக்கமான காட்சிகளில் நடிக்க கூடாது என்று நக்மாவிடம் சண்டை போட்டுள்ளார். அதற்கு, நடிகை நக்மா நீ என்ன தாலி கட்டிய புருஷனா என்று நினைத்துக்கொண்டிருக்கிறாயா நீ ஒரு நடிகர் நான் ஒரு நடிகை ஒரே படத்தில் நடித்தோம் அவ்வளவுதான் நமக்கு இடையில் நீ அதையெல்லாம் கேட்கவே கூடாது என்று நக்மா தெரிவித்துள்ளார்.

பொதுவாக வட இந்தியாவில் இருந்து இங்கே வரும் நடிகைகளுக்கு இந்த மாதிரியான டார்ச்சர்கள் வரும் போலீஸ், விஐபி, தாதாவோட டார்ச்சர் தான் கொடுப்பார்கள். ஆதனால், வட இந்தியாவில் இருந்து வரும் நடிகைகள் பெரிய நடிகர்களோடு நட்பாக இருப்பார்கள். அப்போதுதான், அதிலிருந்து தப்பிக்கலாம். ரோஜாவும் செல்வமணி ஆள் என்று தெரிந்ததும் யாரும் என்னை நெருங்கவில்லை என்று கூறியிருந்தார். அதேபோல, பிரபுடன் நெருக்கமாக இருந்தால் அதுபோலத்தான் நக்மாவுக்கும் காதலன் சமயத்தில் பிரபுதேவாவுடன் நடித்திருந்தார். நக்மாவை பிரபுதேவா காதலித்தார். ஆனால், நக்மா காதலிக்கவில்லை. இப்படி ஒரு டார்ச்சர் வரும்போது இங்கே இருந்தே போய்விடலாம் என்று முடிவு செய்து சினிமாவில் இருந்தே நக்மா விலகி விட்டார்.

Views: - 100

0

0