வீட்டை விட்டு துரத்திய கமல்? வெறும் ரூ. 60 வைத்துக்கொண்டு நடு ரோட்டில் தூங்கிய சரிகா!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகரும் உலகநாயகனுமான கமல்ஹாசன் 1988 ஆம் ஆண்டு சரிகா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பிறந்த குழந்தைகள் தான் ஸ்ருதிஹாசன் மற்றும் அக்ஷராசன். சரிக்கா கமல்ஹாசனை காதலித்து திருமணம் செய்து கொண்ட பிறகு கமல் நடிப்பில் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளிவந்த ஹேராம் திரைப்படத்தில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றி இருந்தார்.

அந்த திரைப்படத்தில் சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான தேசிய விருது பெற்று சரிகா கௌரவிக்கப்பட்டார். சிறப்பாக சென்று கொண்டிருந்த இவர்கள் வாழ்க்கை மிக குறுகிய காலத்திலேயே முடிவுக்கு வந்துவிட்டது . ஆம் கடந்து 2004 ஆம் ஆண்டு சரிக்காவுடன் உறவை கமல்ஹாசன் முடித்துக் கொண்டார். கமலஹாசனை பிரிந்த சரிக்கா சொந்த ஊருக்கு சென்று செட்டில் ஆகிவிட்டார். மகள்கள் மட்டும் கமலஹாசன் வளர்ந்து வருகிறார்கள் .

இந்த நிலையில் பழைய பேட்டி ஒன்றில் கமல்ஹாசனை பிரிந்த போது. நடந்த விஷயங்கள் குறித்து பகிர்ந்திருக்கிறார் சரிகா. அந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. நானும் கமல்ஹாசனும் கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்து வந்தோம். இதனிடையே எங்கள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நாங்கள் விவாகரத்து செய்து பிரிந்து விட முடிவெடுத்தோம்.

என்னுடைய முடிவை நான் சிறப்பான முடிவாகவே கருதுகிறேன். விவாகரத்து என்பது ஒரே இரவில் எடுக்கும் முடிவு இல்லை. நான் பல நாட்கள் யோசித்து தான் இப்படி ஒரு முடிவை எடுத்தேன். நான் கமல்ஹாசனை பிரிந்து அவரது வீட்டை விட்டு வெளியேறும் போது என்னிடம் வெறும் ரூ.60 ரூபாய் பணம் மட்டுமே இருந்தது கமலை பிரிந்த உடன் நான் நடுரோட்டுக்கு வந்து விட்டேன். அந்த சமயத்தில் நான் வெறும் ரூ. 60 பணத்தையும் என்னுடைய காரையும் வைத்துக்கொண்டு நண்பரின் வீட்டுக்கு சென்றேன் .

அங்கே குளித்து ஆடைகளை மாற்றிக்கொண்டு இரவில் நான் என் காரிலேயே வந்து தூங்கினேன். அந்த நாட்களை என்னால் மறக்க முடியாது என சரியாக கூறியிருந்தார். சரிக்காவின் இந்த பேட்டியை குறித்து கமல்ஹாசனிடம் பத்திரிக்கையாளர் கேள்வி கேட்டதற்கு, நீங்கள் ஏன் சரிகாவுக்கு உதவவில்லை? அவரை ஏன் அப்படி சவாலான சூழ்நிலை எதிர்கொண்டார்? என கேட்டதற்கு சரிக்கா யாருடைய அனுதாபத்தையும் தேடவில்லை.

அவர் பொதுவாக அதுபோன்ற பெண்ணே கிடையாது. அதனால் அவருக்கு உதவி செய்தால் அவர் நிச்சயம் அந்த சமயத்தில் வருத்தப்பட்டு இருப்பார். மேலும், என்னைப் போன்ற ஒருவர் உதவி செய்வதை அவர் பெரும் அவமானமாக கருதுவார். அப்போது நான் உதவி இருந்தாலும் அவரின் நிலைமை மிக மோசமாகி இருக்கும் அவருடைய அனுதாபத்தையும் தேடாமல் மிகவும் பொறுமையாக இருந்து.இந்த முடிவை எடுத்ததை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன் என கமல்ஹாசன் தெரிவித்திருந்தார்.

Anitha

Recent Posts

கோவில் திருவிழாவில் பரபரப்பு… 6 மாத குழந்தையுடன் குண்டத்தில் இறங்கிய போது தவறி விழுந்த பக்தர்..(வீடியோ)!

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆவரங்காடு பகுதியில் ஸ்ரீ அக்னி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பூச்சாற்றுதலுடன்…

9 minutes ago

வாய் பேச முடியாத 14 வயது சிறுமி.. வனப்பகுதிக்குள் நடந்த வன்புணர்வு : கோவையில் பகீர்!

கோவை தொண்டாமுத்தூர் பகுதியைச் சேர்ந்த அசாம் மாநிலத்திலத்தை சேர்ந்த வாய் பேச முடியாது 14 வயது சிறுமியை பாலியல் சீண்டல்…

37 minutes ago

டிரைலரும் ரெடி, மூணாவது சிங்கிளும் ரெடி! குட் பேட் அக்லி திரைப்படத்தின் மாஸ் அப்டேட்…

எகிறும் எதிர்பார்ப்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி…

50 minutes ago

காதல் திருமணத்திற்கு காத்திருந்த இளம்பெண் கொலை… கடைசியாக பேசிய காதலன் : காத்திருந்த டுவிஸ்ட்!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே கொளத்தூரை சேர்ந்தவர் செல்லப்பன். இவரது 2 ஆவது மகள் விக்னேஸ்வரி (24). பிள்ளைப்பாக்கம் சிப்காட்டில்…

2 hours ago

விஜய் சேதுபதியை திட்டிய ரசிகருக்கு பதிலடி கொடுத்த சாந்தனு! அப்படி என்னதான் நடந்தது?

தோல்வி இயக்குனருடன் கூட்டணியா? “விடுதலை 2” திரைப்படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி “ஏஸ்”, “டிரெயின்” ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும்…

2 hours ago

This website uses cookies.