ஆணவத்தில் கேவல படுத்திய ??ஸ் கனவுகன்னி.. காலில் விழ வைத்த பாண்டியராஜன்..!

90ஸ் களில் பிரபல நடிகையாக தென்னிந்திய திரையுலகில் வலம் வந்தவர் நடிகை சீதா. இவர் நடிகரும் இயக்குனருமான பாண்டியராஜன் இயக்கத்தில் வெளியான “ஆண் பாவம்” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகினார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழித்திரைப்படங்களில் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். சினிமாவில் மட்டுமில்லாமல் சன் டிவி, மெகா டிவி, சூர்யா டிவி என பிரபல தொலைக்காட்சி சேனல் சீரியல்களிலும் நடித்துள்ளார்.

இப்படி பிரபல நடிகையாக சீதாவும் நடிகர் பார்த்திபனும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரு பெண் குழந்தைகள் பிறந்தனர். அதோடு ஒரு ஆண் குழந்தையையும் தத்தெடுத்து வளர்த்து வந்தனர்.

இந்நிலையில், இருவரும் 2001ம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணங்களால் 11 ஆண்டு கால திருமண வாழ்க்கையை முறித்து விவாகரத்து செய்து கொண்டனர்.

அதன் பிறகு நடிகை சீதா தனது 43 வயதில், 2011ம் ஆண்டு தொலைக்காட்சி நடிகர் சதிஷை மறுமணம் செய்து கொண்டார். ஆனால் இவர்களும் சிறுது காலத்தில் பிரிந்து விட்டனர்.

இந்நிலையில் நடிகை சீதாவை அறிமுகம் செய்த நடிகர் பாண்டியராஜன் குறித்து பேட்டியொன்றில், கூறியுள்ளார். அதில், சீதாவின் புகைப்படங்களை பார்த்து, பாண்டியராஜனுக்கு பிடித்து போக, நேராக சீதா வீட்டிற்கே சென்று சீதாவின் தந்தையிடம் சீதாவை நடிக்க வைக்க அனுமதி வாங்கியுள்ளார். ஆனால், சீதாவிற்கு நடிப்பில் ஆர்வம் கிடையாதாம். ஒரு வழியாக அவரை பாண்டியராஜன் சம்மதிக்க வைத்துள்ளார்.

அதற்கு பின் முதன் முதலில் சீதாவை ‘ஆண்பாவம்’ படத்தில் பாண்டியராஜன் நடிக்க வைத்துள்ளார். இப்படத்தில் படப்பிடிப்பு ஒன்றில் கடிகாரம் ஒன்று சூடான நீரில் விழ, அதை எடுப்பதற்கு சீதா தான் அணிந்திருந்த தாவணியின் மேலாடையை கழட்டி வடிகட்டி மாதிரி பயன்படுத்தி அந்த கடிகாரத்தை எடுக்க வேண்டும் என்ற இந்த சீனை பாண்டியராஜன் சொன்னதும், சீதா நான் தாவணியை கழட்ட முடியாது என அடம்பிடித்துள்ளார்.

அதற்கு பின்னர் பாண்டியராஜன், இல்லமா கதைப்படி அப்படி செய்தால் தான் சரியாக இருக்கும் என்று கூற, சீதா முடியவே முடியாது என மறுத்துவிட்டாராம். சரி வேண்டாம்… சைடு முந்தானையாவது வடிகட்டியாக பயன்படுத்தி கடிகாரத்தை எடு என்று பாண்டியராஜன் சமாதானம் படுத்தி உள்ளார்.

சொன்ன மாதிரி அந்த காட்சியில் நடித்து முடித்தவுடன் சீதா உடனே கேமராவை பார்த்துள்ளார். இதனால் கோபமடைந்த பாண்டியராஜன் ஏன் கேமராவை பார்த்த? என்று திட்டியுள்ளார். அதற்கு சீதா… சரியா என்று கேட்கதான் பார்த்தேன் என்று கேவமாக தெரிவித்துள்ளார். இதை பார்க்க நாங்க இருக்கோம் என்று சொல்லிவிட்டு மறுபடியும் அந்த சீனை பாண்டியராஜன் எடுத்துள்ளார்.

மீண்டும் கேமராவை சீதா பார்க்க, கோபத்தில் பாண்டியராஜன் கிட்டப் போய் கை ஓங்க சீதா படக்கென்று மேல எழ கை சீதாவின் கன்னத்தில் பட்டு விட்டதாம், இதற்கு சீதா உடனே அழுது ஆர்ப்பாட்டம் செய்துள்ளார். அதன் பிறகு சீதாவை சமாதானம் செய்து மீண்டும் பாண்டியராஜன் நடிக்க வைத்துள்ளார்.

பாண்டியராஜன் இல்லாத நேரத்தில் அவரை blood pressure எங்கே என்று தான் சீதா கேட்பாராம். அது அவருக்கு சீதா வைத்த பட்டப் பெயராம். இதே போல் பல சமயங்களில் சீதாவிற்கும் பாண்டியராஜனுக்கு சிறியதாக வாக்குவாதம் கூட வந்து இருக்கிறதாம். இதைப் பற்றி ஒரு பேட்டியில் கூறும் போது பாண்டியராஜனே தெரிவித்துள்ளார்.

தன்னைக் கண்டாலே சீதாவிற்கு பிடிக்காது எனவும், அவ்வப்போது தகராறு ஏற்படும் என்றும், ஆனால் கடைசி நேரத்தில் படத்தை பார்த்து விட்டு பாண்டியராஜன் காலில் சீதா விழுந்துவிட்டாராம். தான் எதாவது தவறுதலாக பேசியிருந்தால் மன்னித்து விடுங்கள் என்று தெரிவித்து மன்னிப்பு கேட்டதாக பேட்டியில் பாண்டியராஜன் தெவித்தார்.

Poorni

Recent Posts

வசூலில் மிரட்டிய டிராகன் ஓடிடியில் ரிலீஸ்… தேதி அறிவிப்பு!

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…

38 minutes ago

நாங்க எப்போ சொன்னோம்? நழுவிச் சென்ற பிரேமலதா.. அண்ணாமலை சொன்ன ‘நச்’

தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…

54 minutes ago

விஜய் போல பாஜக பகல் கனவு காண்கிறது.. ஜெயக்குமார் சரமாரி பேச்சு!

2026ல் ஆட்சியைப் பிடிப்பது என்ற நடிகர் விஜயின் பேச்சு போல பாஜகவும் பகல் கனவு காண்கிறது என அதிமுக முன்னாள்…

3 hours ago

வாரிசு நடிகருடன் கூத்து… கருவை சுமந்த நடிகை : காத்திருந்த டுவிஸ்ட்!

சினிமாவில் திருமணமான நடிகருடன் நெருக்கமாக இருப்பது, பின்னர் காதலிப்பது கல்யாணம் வரை சென்று பிரிவது என ஏராளமான விஷயங்கள் நடப்பது…

3 hours ago

’இனி எந்த போராட்டமும் இல்லை’.. விஜயலட்சுமி வெளியிட்ட கடைசி வீடியோ!

சீமான் மீது அளித்த புகாரின் மீது இனி எந்தப் போராட்டம் நடத்தப்போவதில்லை என நடிகை விஜயலட்சுமி தான் வெளியிட்ட வீடியோ…

4 hours ago

மீனாட்சி செளத்ரிக்கு அரசாங்கம் அடித்த ஆர்டர்? உண்மை நிலவரம் என்ன?

நடிகை மீனாட்சி செளத்ரியை மாநில பெண்கள் அதிகாரமளித்தல் பிராண்ட் அம்பாசிடராக ஆந்திர அரசு நியமித்ததாக வரும் தகவலில் உண்மையில்லை என…

5 hours ago

This website uses cookies.