இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்தார்.
இன்றைக்கு இந்தியா-ஆஸ்திரேலியா மேட்ச் கடைசி நாள் ஆட்டம் நடைபெற்று இருக்கும் போது அஸ்வினும்,விராட் கோலியும் ஓய்வு அறையில் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருப்பார்கள்.அப்போது விராட்கோலி எமோஷனல் ஆகி,அஸ்வினை கட்டிப் பிடிப்பார்.
அந்த சமயம் அஸ்வினும் கண் கலங்குவார்.ஒரு வேளை அஸ்வின் ஓய்வு அறிவிக்க போகிறாரா என்று ரசிகர்கள் குழப்பத்தில் இருந்த போது,கொஞ்ச நேரத்தில் ஆட்டம் மழையினால் ரத்து ஆனது.
அதன்பின்பு நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கேப்டன் ரோஹித் ஷர்மாவுடன் சேர்ந்து பேட்டி கொடுக்கும் போது,தன்னுடைய சர்வேதேச டெஸ்ட் கிரிக்கெட் ஓய்வை அறிவித்தார்.
இதையும் படியுங்க: குடும்பத்துடன் ஹனிமூன்..குதூகலத்தில் பிரபல ஜோடி..வைரலாகும் புகைப்படம்..!
அவர் ஆஸ்திரேலியாவுடன் நடைபெற்ற முதல் டெஸ்ட் மேட்சில் கேப்டன் ரோஹித்திடம் இந்த தகவலை சொல்லியுள்ளார்.அவர் தான் நீங்கள் அடுத்த மேட்ச் கண்டிப்பாக ஆட வேண்டும் என்று கூறியுள்ளார்.
அவருடைய இந்த அறிவிப்பு ஒட்டுமொத்த ரசிகர்களை அதிர்ச்சியாக்கியது.டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்தியா சார்பாக அதிக விக்கெட் எடுத்துள்ள நபராக அணில் கும்ப்ளே-க்கு அடுத்தபடியாக 537 விக்கெட் எடுத்துள்ளார்.
ஒரே போட்டியில் சதம் மற்றும் 5 விக்கெட் வீழ்த்திய சாதனையை 3 முறை செய்துள்ளார்.இவர் ஒரு சிறந்த ஆல் ரவுண்டருக்கு உதாரணமாக டெஸ்ட் போட்டிகளில் 6 முறை சதம் அடித்துள்ளார்.டெஸ்ட் கிரிக்கட்டில் 11 முறைக்கு மேலாக தொடர் நாயகன் விருதை பெற்றுள்ளார்.
இப்படி பல வித சாதனைகளை புரிந்து,இந்தியாவின் பெரும்பாலான மேட்சுக்கு மேட்ச் வின்னராக செயல்பட்ட ஆல் ரவுண்டர் அஷ்வினின் ஓய்வு அறிவிப்பை,பல கிரிக்கெட் ரசிகர்கள்,பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து கூறி,அவரது சாதனைகளை பட்டியிலிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் இயக்குனரும் நடிகருமான செல்வராகவன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அஸ்வினை புகழ்ந்து பதிவு ஒன்றை போட்டுள்ளார்.
அதில் “எந்த ஒரு நிலையிலும் விட்டு கொடுக்காமல் போராடும் குணத்தை கொண்டவர்.அவர் சிங்கம் மாதிரி…நம் நாட்டுக்கு அஸ்வின் விளையாடியது மிகப்பெரிய பெருமை..சல்யூட் தலைவா’என்று குறிப்பிட்டுள்ளார்.சமூக வலைத்தளங்கள் முழுவதும் தற்போது MISS YOU ASH ஹேஷ்டேக் வைரல் ஆகி வருகிறது.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.