ஒரு சில வருடங்களுக்கு முன்பு நடிகை ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் பெரிய அளவில் ஹிட்டான வம்சம் சீரியலில் பூமிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து சீரியல் வட்டாரத்தில் பிரபலமானவர் சந்தியா ஜகர்லமுடி.
மேலும், இவர் சந்திரலேகா போன்ற சீரியல்களிலும் நடித்திருந்தார். இப்போது இவர் சீரியல் பக்கம் தலை காட்டாமல் தெரு நாய்களை பாதுகாத்து வரும் பணியை செய்து வருகிறார். அண்மையில், இவர் தனது வாழ்க்கையில் நடந்த மோசமான விஷயம் குறித்து பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.
அதாவது, 2006 ஆம் ஆண்டு கும்பகோணத்தில் செல்லமடி நீ எனக்கு டைட்டில் பாடல் கோவில் யானையுடன் எடுக்கப்பட்டதாம். அப்போது, யானை தன்னை மோசமாக தாக்கியதாகவும், அதனால் தனக்கு ஏழு இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு சில பாகங்களை அகற்ற நேர்ந்ததாகவும் தெரிவித்திருந்தார்.
மேலும், யானைத் தன்னை தூக்கி நசுக்கிய போது உயிர் பிழைத்ததே பெரிய விஷயம் தான். எனவே, தன்னால் வலி தாங்க முடியாமல் தான் துடித்துக் கொண்டிருந்தபோது அங்கிருந்த ஒரு சிலர் தன்னை தூக்கிக்கொண்டு ஓடியதாகவும், அப்போது தன்னை தூக்கிக் கொண்டு போன டான்ஸர்களின் ஒருவன் தான் வலியால் துடித்துக் கொண்டிருக்கும் போது கூட தனக்கு உதவி செய்வது போல் நடித்து தன்னுடைய மார்பில் கை வைத்து அசிங்கமாக நடந்து கொண்டதாகவும், தன் வாழ்க்கையில் கஷ்டமான விஷயம் என்றால் அதைத்தான் தான் சொல்வேன் என கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.