பாலிவுட் சினிமாவின் நட்சத்திர நடிகரான ஷாருக்கான் இந்தி சினிமா உலகத்தில் நடிகர், தயாரிப்பாளர், தொகுப்பாளர் இப்படி பன்முக திறமைகளை கொண்டிருக்கிறார். இவர் 1980களில் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து திரைத்துறையில் நுழைந்தார். அதன் பின்னர் 1992ல் தீவானா என்ற இந்தித் திரைப்படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து பல்வேறு சூப்பர் டூப்பர் ஹிட் படங்களில் நடித்து உலகம் முழுக்க பெருவாரியான ரசிகர்கள் கூட்டத்தை சம்பாதித்தார்.
அதன் பின்னர் தொடர்ந்து பெரும் பொருட்செலவில் உருவாகிய ஜவான் படத்தில் நடித்தார். அட்லீ இயக்கத்தில் உருவாகிய இத்திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடித்திருந்தார். இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் வெளியாகிய இப்படத்தை ‘ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட்’ சார்பாக ஷாருக்கானின் மனைவி கௌரி கான் தயாரித்திருந்தார். இப்படம் சுமார் ரூ. 644 கோடி வசூலித்து அபார சாதனை படைத்தது.
இந்நிலையில் தற்போது சொல்லவரும் தகவல் என்னவென்றால், துபாயில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஷாருக்கான். அந்த நிகழ்ச்சியில் தன் கெரியர் பற்றி பேசினார். அதாவது, ” நான் என் கெரியரை போதும் முடித்துக்கொள்ளலாம் என விரும்புகிறேன். ஆனால் அது தற்போதைக்கு முடியாது. என் கெரியர் முடிய இன்னும் 35 ஆண்டுகள் இருக்கிறது. என் ரசிகர்களுக்காக தொடர்ந்து நான் நடிப்பேன் என்றார்.
தொடர்ந்து நீங்கள் ஏன் ஹாலிவுட் படத்தில் நடிக்கவில்லை?என கேட்டதற்கு…. மொத்த உலகமும் விரும்பும் படத்தில் நடிக்க விரும்புகிறேன். அதன் பிறகு யாரும் என்னை பார்த்து நீங்கள் ஏன் ஹாலிவுட் படத்தில் நடிக்கவில்லை என்று கேட்கக் கூடாது. நான் நடிக்கும் அந்த படம் அனைத்து எல்லைகளையும் தாண்டிச் செல்ல வேண்டும் என்பது தான் என் நோக்கம் என கூறினார்.
பாலிவுட்டில் எதார்த்தம் இல்லை எனக் கூறியுள்ள அனுராக் காஷ்யப், விரைவில் மும்பையை காலி செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார். மும்பை: இது…
உறவுகள் தான் முக்கியம் நடிகர் விஜயகுமாரின் இரண்டாவது மகள் அனிதா விஜயகுமார்,சிறு வயதிலிருந்தே மருத்துவர் ஆக வேண்டும் என்பதில் உறுதியாக…
படத்தின் மீது அதிகரிக்கும் எதிர்ப்பு இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி தயாரிப்பில்,அறிமுக இயக்குநர் பாரதி இயக்கத்தில் உருவாகியுள்ள…
ரஜினியிடம் ஆசி வாங்கிய ஐசரி கணேஷ் 2020ஆம் ஆண்டு வெளியான ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் சுந்தர்.சி…
பின்னணி பாடகர்களான திப்பு மற்றும் ஹரிணியின் வாரிசுதான் சாய் அபயங்கர். இவர் ஆல்பங்களுக்கு இன்றைய கால இளசுகள் அடிமை. இவர்…
வீடு என்னுடைய பெயரில் இல்லை நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும் நடிகருமான துஷ்யந்த்,அவரது மனைவி அபிராமியுடன் இணைந்து ஈசன்…
This website uses cookies.