பாலிவுட் சினிமாவின் நட்சத்திர ஹீரோவான ஷாருக்கான் தற்போது அங்கு தொடர்ச்சியாக பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக இடத்தைப் பிடித்துக் கொண்டிருக்கிறார்.
கடைசியாக அவரது நடிப்பில் வெளியாகிய மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் தான் ஜவான். இந்த திரைப்படம் கிட்டத்தட்ட ரூ.1000 கோடி வசூல் ஈட்டி மாபெரும் சாதனை படைத்தது.
அதை தொடர்ந்து தற்போது அட்லீ இயக்கத்தில் லயன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஒரு படத்தில் நடிக்க கிட்டத்தட்ட ரூ.250 கோடி வரை சம்பளமாக வாங்குகிறார் நடிகர் ஷாருக்கான்.
இவ்வளவு சம்பளம் வாங்குவது அவ்வளவு சாதாரணமான விஷயம் இல்லை என்பது எல்லோருக்கும் புரியும் வகையில் தான் படும் கஷ்டங்களையும் தனது உழைப்பையும் பற்றி முந்தா பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்
இந்த நிலையில் தற்போது ஸ்விட்ச்லாந்தில் நடைபெற்ற 77வது லோக்கார்னோ திரைப்பட விழாவில் நடிகர் ஷாருக்கானுக்கு சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. இந்த விழாவில் விருது பெற்றுக் கொண்ட அவர். பேசிய பேச்சு தான் தற்போது ரசிகர்களை பெறும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
அதாவது நான் நான் சாகும் நாள் வரை நடிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை. படப்பிடிப்பு தளத்திலேயே என்னுடைய உயிர் போக வேண்டும் என்பதுதான் எனது மிகப்பெரிய ஆசை. ஒருவர் ஆக்சன் எனக் கூற நான் நடித்துக் கொண்டிருக்கும் போதே இறக்க வேண்டும்.
இதையும் படியுங்கள்: போடி சொம்பு தூக்கி…. போற போக்கு பார்த்த கள்ளகாதல் ஜோடியை பிரித்து தான் அனுப்புவாங்க போல!
கட் என சொல்லும் போது என் உயிர் போய் நான் எழுந்திருக்கவே கூடாது. அந்த அளவுக்கு என்னுடைய உயிர் சினிமாவிற்காக இறக்கவேண்டும் நடித்துக்கொண்டிருக்கும் போதே என் உயிர் போனால் மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கும் என ஷாருக்கான் பேசியிருக்கிறார். அவரின் இந்த பேச்சு இணையத்தில் வேகமாக பரவி வைரல் ஆகி வருகிறது. இவ்வளவு எமோஷ்னலாக மனுஷன் பேசுகிறாரே அந்த அளவுக்கு சினிமா மீது அவருக்கு காதல் இருக்கிறதை நினைத்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள்.
பாகிஸ்தான் பி.எஸ்.எல். லீக்கில் வார்னரின் புதிய பாதை உலக கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள 2025 ஐபிஎல் தொடருக்கு மத்தியில்,பாகிஸ்தான்…
தமிழ் சினிமாவின் கருப்பு நாள் தமிழ் சினிமாவில் இயக்குனர் இமயமான பாரதிராஜா குடும்பத்தில் பெரும் துயர சம்பவம் நிகழ்ந்து,அனைவரையும் அதிர்ச்சியாக்கி,சோகத்தில்…
பிரபல பாலிவுட் நடிகர் சன்னி தியோல்,தென்னிந்திய சினிமாவை பாராட்டி,பாலிவுட் அந்தத் தரத்தை கற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.மேலும், தென்னிந்தியாவில் குடியேறவும்…
அண்ணாமலை மற்றும் ஹெச் ராஜா மீது சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
சமூக வலைதளங்களில் டிக்கெட் மோசடி இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஆண்டுதோறும் மிகப்பெரிய விருந்தாக அமைந்து வரும் ஐபிஎல் தொடரை பார்க்க…
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக உள்ளவர் நடிகர் விஜய். கோடிக்கணக்கான ரசிகர்கள் வட்டாரத்தை வைத்துள்ள விஜய், சினிமாவுக்கு முழுக்கு போட…
This website uses cookies.