தமிழ் சினிமாவின் இளம் ஹிட் இயக்குனரான அட்லீ ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என தொடர் ஹிட் திரைப்படங்களை இயக்கி புகழ் பெற்றார். தற்போது பாலிவுட் நட்சத்திர நடிகரான ஷாருக்கானை வைத்து ஜாவான் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடிக்கிறார். இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தை ‘ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட்’ சார்பாக ஷாருக்கானின் மனைவி கௌரி கான் தயாரிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்புகள் முக்கால்வாசி முடிந்துவிட்டது. இப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 7ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் விஜய் நடிக்க அட்லீ அழைத்திருந்தார். ஆனால் அவர் லியோ படத்தில் பிசியாக இருப்பதால் அவருக்கு பதிலாக நடிகர் அல்லு அர்ஜுன் அந்த ரோலில் நடிக்கிறார். இப்படத்தில் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நேரத்தில் இப்படத்தில் ப்ரிவ்யூ வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி செம வைரலாகியது. அதில் நயன்தாரா செம மாஸாக என்ட்ரி கொடுத்திருந்தார்.
இந்நிலையில் அந்த வீடியோவை பார்த்து மெர்சலான விக்னேஷ் சிவன், ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் வாழ்த்து கூறியிருந்தார். இதற்கு பதிலளித்திருந்த நடிகர் ஷாருக்கான், உங்கள் அன்புக்கு நன்றி விக்னேஷ் சிவன். நயன்தாரா மிகவும் அருமையானவர்.ஆனால், தற்போது அவர் நடிக்கவும் உதைக்கவும் கற்றுக்கொண்டுள்ளார்.
எனவே கணவராக நீங்க அவரிடம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும், ஏற்கனவே உங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேன் என கூறியிருக்கிறார்.இதற்கு சிரித்துக்கொண்டே பதிலளித்த விக்னேஷ் சிவன், ஆமாம் ஜாக்கிரதையாக தான் இருக்கிறேன் சார். அதே நேரத்தில், படத்தில் உங்கள் இருவருக்கும் இடையே நல்ல காதல் இருப்பதாகவும் கேள்விப்பட்டேன், எனவே நயன் காதல் மன்னனிடம் இருந்து ரொமான்ஸ் கற்றுக்கொண்டாள் என்று பதில் அளித்துள்ளார். இவர்களின் இந்த ஜாலியான உரையாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
என்னை கடவுள் எனச் சொல்லி கடவுளை தாழ்த்திவிட வேண்டாம் என்றும், நான் சாதாரண மனிதன்தான் என்றும் இசையமைப்பாளர் இளையராஜா கூறியுள்ளார்.…
சொல் ஒன்று செயல் ஒன்றாக விஜயகாந்த் இருந்ததில்லை எனக் கூறிய பிரேமலதா, கோலா, நகை விளம்பரங்களில் சிலர் நடிப்பர் என…
This website uses cookies.