‘அப்போ என்னைய உள்ளயே விடல, ஆனா இப்போ’: சிவன் கோயிலில் உருக்கமாக பேசிய ஷகிலா..!

பி கிரேட் படங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர் நடிகை ஷகீலா. மலையாளத்தில் ப்ளே கேள்ஸ் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் கிணரத்தும்பிகள் என்ற மலையாள படத்தில் நடிக்க அது மிகப்பெரிய ஹிட்டடித்தது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல்வேறு மொழியில் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் கவர்ச்சி திரைப்படங்கள் மற்றும் கதாபாத்திரங்கள் மூலம் பிரபலமானார் என்றாலும் காமெடி மற்றும் சில செண்டிமெண்ட் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். டாப் நடிகர்களின் படம் ரிலீஸ் ஆகும் சமயத்தில் இவரின் படமும் ரிலீஸ் ஆகி பெரிய வசூலை தட்டியது. இதனால் முக்கிய நாட்களில் அவரின் படங்கள் ரிலீஸ் செய்ய தடை செய்யப்பட்டது.

கடந்த சில வருடங்களாக தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் நடித்து வந்த ஷகீலா, 2014ம் ஆண்டு கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதன் பின்னர், குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சி மூலம் மிக பிரபலம் அடைந்தார். அந்நிகழ்ச்சி அவர் மீது இருந்து மக்களின் பார்வையை அப்படியே மாற்றியது, அதை அவரும் ரசித்தார். இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து ஷகீலா பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அதுபோக தனியார் யூடியூப் சேனல் ஒன்றில் ஆங்கராகவும் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், தான் கவர்ச்சி நடிகை என்ற ஒரே காரணத்துக்காக பொது இடத்தில் புறக்கணிக்கப்பட்டது குறித்து ஷகிலா மனம் திறந்து பேசியுள்ளார். கடந்தாண்டு நவம்பர் மாதம் கேரளாவின் கோழிக்கோடு பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் நடக்கவிருந்த ஒரு நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த ஷகிலாவை, வணிக வளாக நிர்வாகத்தினர் அனுமதிக்க மறுத்துள்ளனர். மேலும் அந்த நிகழ்ச்சியையும் அவர்கள் ரத்து செய்ததாக சொல்லப்படுகிறது. ஆனால், பாதுகாப்பு காரணத்துக்காகவே அந்த நிகழ்ச்சியை ரத்து செய்ததாக வணிக வளாக நிர்வாகத்தினர் கூறியிருந்தனர்.

இந்நிலையில், கேரளா எர்ணாகுளத்தில் உள்ள தைகட்டு ஸ்ரீ மகாதேவா கோயில் நிகழ்ச்சியில் ஷகிலா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதில் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், நான் இங்கே சிறப்பு விருந்தினராக வந்திருப்பது கடவுளால் திட்டமிடப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நான் கடந்த முறை கேரளா வந்த போது வணிக வளாகத்துக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு திரும்பிச் சென்றேன். ஆனால், கடவுள் எனக்காக வேறு திட்டங்கள் வைத்திருந்ததை நான் இப்போது உணர்ந்து கொண்டேன். வணிக வளாகத்தில் என்னைப் பார்க்க 200, 300 பேர் வந்திருந்தனர். ஆனால் இங்கே என்னை 1000 கண்கள் பார்த்துக்கொண்டிருப்பதை காண்கிறேன் என மிக உருக்கமாக பேசியுள்ளார்.

UpdateNews360 Rajesh

Recent Posts

கோவை மருதமலை கோவில் கும்பாபிஷேகத்தில் விதி மீறல்? நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ்!

கோவை அருள்மிகு மருதமலை முருகன் திருக்கோயிலில் அண்மையில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அளித்த உறுதிமொழியை மீறியதாகக்…

21 minutes ago

பூமாதா, கோமாதா… படத்தில் பேசிய வசனத்தால் ட்ரோலுக்குள்ளாகும் தமன்னா…

தமன்னாவின் புதிய திரைப்படம்… 2022 ஆம் ஆண்டு தெலுங்கில் “ஓடெலா ரயில்வே ஸ்டேஷன்” என்று ஒரு திரைப்படம் வெளிவந்தது. இதில்…

37 minutes ago

ஜெயலலிதாவுக்கு எதிராக பேச காரணம் என்ன? 30 ஆண்டுகளுக்கு பின் காரணத்தை கூறிய ரஜினிகாந்த்!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலிலதாவை எதிர்த்து ரஜினிகாந்த் 1995ல் அனல் பறக்க பேசியது யாரும் மறக்க முடியாது. வெடிகுண்டு கலாச்சாரத்தை பற்றி…

48 minutes ago

பவன் கல்யாண் செய்த காரியத்தால் தேர்வை தவறவிட்ட மாணவர்கள்… பெற்றோர் கண்ணீர்!

ஆந்திர துணை முதல்வர் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் பவன் கல்யாண் தற்போது ஆந்திரா மாநிலத்தின் துணை…

1 hour ago

19 வயது இளம்பெண்ணை சீரழித்த 23 பேர் : 7 நாட்களாக நடந்த கூட்டுப்பாலியல் பலாத்காரம்!

19 வயது இளம்பெண்ணை 23 பேர் 7 நாட்களாக கூட்டுப் பாலியல் செய்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்து. உத்தரபிரதேச மாநிலம்…

2 hours ago

சூப்பர் ஹீரோ திரைப்பட நிறுவனங்களுக்கு ஆப்பு வைக்கப்போகும் சீனா?

வணிக போர் சீனா மீதான வணிகப் போரை தொடங்கியிருக்கிறது அமெரிக்கா. இந்த இரு நாடுகளும் உலகின் மிகப் பெரிய சக்தி…

2 hours ago

This website uses cookies.