தமிழில் ஏபிசிடி, பம்பரக்கண்ணாலே, இந்திரலோகத்தில் இரு அழகப்பன், ராஜா ராணி உள்ளிட்ட படங்களில் நடித்து உள்ளார். பிரபல காமெடி நடிகை பிரேமா பிரியா சமீபத்தில் தனியார் இணையத்தளத்திற்கு பேட்டியளித்திருந்த போது வாழ்க்கையில் நடந்த கஷ்டங்களை வெளிப்படையாக கூறி கண்ணீர் விட்டு அழுத்துள்ளார்.
7 மாதங்களுக்கு முன் சர்க்கரை நோயால் என் கணவர் மரணமடைந்தார். அதுகுறித்து சினிமாவை சேர்ந்தவர்கள் ஒருவர் கூட விசாரிக்கவில்லை.
என் மகள் படிப்பிற்கு கூட கஷ்டப்பட்டு வருகிறேன் என்று தெரிவித்துள்ளார். கணவர் இருப்பதற்கு முன் நன்றாக இருந்த வாழ்க்கை கணவர் இறந்தப்பின் இல்லை. சாப்பட்டுக்கே நிற்கதியாக நிற்கிறேன் எனவும் தெரிவித்தார்.
அப்பா, மாமனார், கணவர் என்று அடுத்தடுத்த மரணங்கள் பிரேம பிரியாவை தனிமையில் கொண்டு சென்றதாக ஷகீலாவின் சமீபத்திய பேட்டிகள் தெரிவித்துள்ளார்.
மேலும், சில மாதங்களுக்கு முன்னர் நடிகர் வடிவேலு தன்னை வளர விடாமல் இந்த நிலைக்கு மாற்றிவிட்டார் என்றும், அவரால் தான் தன் வாழ்க்கையே வீணாகி விட்டதாக தெரிவித்திருந்தார். இதுகுறித்து, ஷகிலா வடிவேலுவை இப்படி பேசிட்டு அவரிடமிருந்து மிரட்டல் வந்ததா என்று கேட்டுள்ளார்.
அதற்கு, ஒரு நம்பரில் இருந்து மறுப்பு சொல்லி வீடியோ போடணும்னு சொன்னாங்க ஆனா நான் மாட்டேன்னு சொல்லிட்டேன் என பிரேம பிரியா தெரிவித்து இருந்தார். மேலும், இதை ஏன் முன்னாடியே சொல்லல என்று சகிலா கேட்டதற்கு, முன்னாடி மீடியா இதுபோன்று இல்லை. எனக்கும் வடிவேலுக்கும் மீடு பிரச்சினை இல்லையே என்று தெரிவித்துள்ளார்.
இப்ப நீ சொல்றது மீ டு பிரச்சனை இல்லை என்று சொல்லலாம். வடிவேலுவை எனக்கு தெரியும் அவர் என்ன எதிர்பார்ப்பார் என்று எனக்கு தெரியும் என்று ஷகீலா தெரிவித்து இருக்கிறார். மேலும், ஷகிலா வடிவேலு உங்களை ரொம்ப நல்லா தெரியும் இதுபோல் நிறைய பேர் உங்களை பற்றி சொல்கிறார்கள் நீங்கள் எப்படி இந்த இடத்துக்கு வந்தீங்கன்னு தெரியும். நடிக்க முடியாமல் போக சின்ன சின்ன நடிகர்களை வளர விடாமல் தடுத்ததற்கு அனுபவிக்கிறீங்க என்று ஷகிலாவும் தன் பங்குக்கு தெரிவித்துள்ளார்.
நீலகிரியில், மகளை பாலியல் தொல்லை அளிப்பதற்கு தந்தைக்கு அனுமதித்ததாக தாய் உள்பட இருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். நீலகிரி:…
வீட்டை ஜப்தி செய்ய ஐகோர்ட் உத்தரவு நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும் நடிகருமான துஷ்யந்த் தனது மனைவி அபிராமியுடன்…
நடிகை அளித்த பாலியல் புகார் தொடர்பான விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளதை வரவேற்பதாக சீமான் கூறியுள்ளார். சென்னை:…
100 கோடியை தொட்ட டிராகன் கடந்த பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி ரிலீஸ் ஆன டிராகன் திரைப்படம் எதிர்பார்த்ததை…
விழுப்புரத்தில் டீயில் எலி மருந்து கலந்து கொடுத்து காதலனைக் கொல்ல முயன்ற காதலியை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். விழுப்புரம்:…
எங்களை விட்டுப் போகாதீர்கள் என எவ்வளவோ கேட்டோம், அவராகவே போனார் என ஓபிஎஸ்சை அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் விமர்சித்துள்ளார்.…
This website uses cookies.