என்னை எல்லாரு முன்னாடியும் அப்படி கூப்பிட்டார் – விஜய் குறித்து ரகசியம் உடைத்த ஷகிலா!
Author: Rajesh8 February 2024, 9:39 pm
ஐட்டம் நடிகை, ஆபாச நடிகை என மிகவும் கொச்சையான நடிகையாக மக்களால் பார்க்கப்பட்டவர் நடிகை ஷகிலா. இவர் ஆபாச படங்களில் முகம் சுளிக்கும் அளவிற்கு நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆனார். மோசமான படுக்கையறை காட்சிகள், கவர்ச்சி நடனம் என தமிழ் உள்ளிட்ட ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா ரசிகர்களின் இரவு நேரத்தை இன்பமாக்கினார். இவர் தன் 15வது வயதில் ப்ளே கேள்ஸ் என்ற படத்தில் துணை நடிகையாக அறிமுகமானார்.

அதன் பின்னர் மலையாளம் , தமிழ் என பல்வேறு அடல்ட் திரைப்படங்களில் நடித்து முகம் சுளிக்க வைத்தார். அத்துடன் குடும்ப ரசிகைகளின் வெறுப்பையும் சம்பாத்தித்து வைத்தார். இருந்தாலும் 90களில் கவர்ச்சி நடிகையாக கொடிக்கட்டி பறந்த ஷகிலா இளசுகளின் கனவுக்கன்னியாக இருந்தார்.
அதன் பின்னர் இவரது அடையாளத்தையே மாற்றியது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி. அந்நிகழ்ச்சியில் மூலம் ஒரு புதிய அவதாரம் எடுத்த ஷகிலா தன் உண்மையான நல்ல குணத்தை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த மக்களையும் கவர்ந்தார். தொடர்ந்து நிகழ்ச்சி நடுவராக இருந்து வருகிறார். தொடர்ந்து பிரபலங்களை வைத்து பேட்டி எடுத்து வருகிறார்.
அண்மையில் நடிகை ஷகீலா பேட்டி ஒன்றில் நடிகர் விஜய் குறித்த ரகசிய விஷயம் ஒன்றை கூறியுள்ளார். நான் விஜய் உடன் அழகிய தமிழ் மகன் படத்துல நான் நடிக்கறதா இருந்துச்சு. அப்போது விஜய் யாருடனும் பேசமாட்டார் என்று நடிகர், நடிகைகள் கூறி வருந்தினார்கள். அதை கேட்டு நான் விஜய் உடன் காம்பினேஷன் இல்லாத காட்சி எனக்கு கொடுங்கள் என கேட்டேன்.
கடைசியில் பார்த்தால் அவருடன் நடிக்கவேண்டியதாயிற்று. ஆனால், நான் மனக்கணக்கு போட்டு வைத்திருந்த விஜய் வேறு, நான் நேரில் பார்த்த விஜய் வேறு. ஆமாம், அவர் என்னை பார்த்ததும் ஹாய் ஷக்கீ… என்று சத்தமாக கூப்பிட்டார். அதை கேட்டதும் நான் சிலிர்த்துப்போனேன். உடனே அங்கிருந்த எல்லோரும். வாவ்! என்று ஆச்சர்யத்துடன் திரும்பி பார்த்தார்கள். ஒரு கவர்ச்சி நடிகையான எனக்கே விஜய் அவ்வளவு மரியாதை கொடுத்தார் என ஷகிலா மனம் நெகிழ கூறினார்.