நடிகர் அஜித்தின் மனைவி நடிகை ஷாலினிக்கு, ரிச்சர்ட் மற்றும் ஷாமிலி என உண்டபிறந்த சகோதர, சகோதரி உள்ளார்கள். நடிகை ஷாமிலி கடந்த 1990ஆம் ஆண்டு வெளிவந்த அஞ்சலி படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக பிரபலமானவர். இதன்பின் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த ஷாமிலி Oye! எனும் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
மேலும் படிக்க: படுக்கையில் புரட்டி எடுத்த இளம் ஹீரோ… கும்பிடு போட்டு தலைதெறிக்க ஓடிய கீர்த்தி சுரேஷ்..!
மேலும், தமிழில் விக்ரம் பிரபு நடித்து வெளியான வீரசிவாஜி படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். தற்போது பெரிதும் பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் ஷாமிலி, அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய சமீபத்திய புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை பதிவு செய்து வருகிறார்.
மேலும் படிக்க: குடும்பத்தை விட்டு பிரிந்த விஜய்?.. திருமணத்திற்கு தனியா வந்த மனைவி சங்கீதா..!
அது மட்டுமல்லாமல் ஓவியராக புதிய அவதாரம் எடுத்துள்ளார். இதற்காக ஓவியர் ஏ.வி.இளங்கோவிடம் முறையாக ஓவியம் வரைய கற்றுக்கொண்டு, அவர் சமீபகாலமாக ஓவியங்கள் வரைந்து அதை அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டும் வந்துள்ளார். அந்த வகையில், அவர் வரைந்த ஒரு சில ஓவியங்கள் பெங்களூருவில் ஓவிய கண்காட்சியில் கூட காட்சிக்கு வைக்கப்பட்டது.
மேலும் படிக்க: Adjustment பண்ண வேற லெவலுக்கு போயிடலாம்.. பகீர் கிளப்பும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை..!
அவர் வரைந்திருந்த பெண்களின் அரை நிர்வாண ஓவியங்கள் பார்வையாளர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது. கலை நுணுக்கத்துடன் அவர் வரைந்த ஓவியங்களை பலரும் பாராட்டியதாக கூறப்படுகிறது என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஆடை இல்லா பெண்ணின் ஓவியத்தை வரைந்து இணையதளத்தில் அந்த புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிற நடிகை ஷாமிலி ஏற்கனவே ஓவியத்தை வரைந்து விற்பனை செய்யும் வேலையை நடிகை ஷாமிலி பார்த்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ஷாலினியின் தங்கையான ஷாமிலி தனது மாமா அஜித்துடன் இணைந்து கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படத்தில் நடித்துள்ளார். அப்படத்தில் ஐஸ்வர்யா ராய் மற்றும் தபுவின் தங்கை கதாபாத்திரத்தில் ஷாமிலி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அரியலூரில் தவணைத் தொகை வசூலிக்கச் சென்ற பைனான்ஸ் ஊழியர் அடித்துக் கொலை செய்யப்பட்ட எரிக்கப்பட்ட சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…
நீலகிரியில், மகளை பாலியல் தொல்லை அளிப்பதற்கு தந்தைக்கு அனுமதித்ததாக தாய் உள்பட இருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். நீலகிரி:…
வீட்டை ஜப்தி செய்ய ஐகோர்ட் உத்தரவு நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும் நடிகருமான துஷ்யந்த் தனது மனைவி அபிராமியுடன்…
நடிகை அளித்த பாலியல் புகார் தொடர்பான விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளதை வரவேற்பதாக சீமான் கூறியுள்ளார். சென்னை:…
100 கோடியை தொட்ட டிராகன் கடந்த பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி ரிலீஸ் ஆன டிராகன் திரைப்படம் எதிர்பார்த்ததை…
விழுப்புரத்தில் டீயில் எலி மருந்து கலந்து கொடுத்து காதலனைக் கொல்ல முயன்ற காதலியை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். விழுப்புரம்:…
This website uses cookies.