இந்தியத் திரையுலகின் முன்னணி இயக்குனர்கள் என்று சொன்னால் விரல்விட்டு எண்ணும் வகையில் சில இயக்குனர்கள் மிஞ்சுவார்கள். அதில் முக்கியமான இயக்குனர் என்று பார்த்தால் இயக்குனர் ஷங்கர். இவரின் படங்கள் தமிழைத் தாண்டி பல மொழிகளிலும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ரோகித் என்பவருடன் ஷங்கரின் முதல் மகளுக்கு திருமணம் நடைபெற்றது. ஆனால், ரோகித் போக்சோ சட்டத்தில் சிக்கியதால் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். அதன் பின்னர், சமீபத்தில் தனது மகளுக்கு இரண்டாம் திருமணத்திற்கான ஏற்பாடு செய்து வந்தார் இயக்குனர் சங்கர்.
மேலும் படிக்க: திருமணத்திற்கு முன்பே கர்ப்பம்.. வேறுவழியில்லாமல் காதலரை கரம் பிடித்த கனவுக்கன்னி..!
இவர்களுடைய, நிச்சயதார்த்த புகைப்படங்கள் கூட வெளிவந்தது. சமீபத்தில், ரசிகர்கள் மத்தியில் அந்த புகைப்படங்கள் வைரலானது. மேலும், தமிழக முதல்வர் முதல் பாலிவுட் நட்சத்திரங்கள் என அனைவருக்கும் ஷங்கர் நேரில் சென்று பத்திரிக்கை வைத்தார். இந்நிலையில், மிகவும் பிரம்மாண்டமான முறையில் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவின் இரண்டாம் திருமணம் நடைபெற்றது.
மேலும் படிக்க: ஓரினச்சேர்க்கையில் உல்லாசம்.. கூச்சமின்றி கூறிய ரெஜினா கசாண்ட்ரா..!
கார்த்திகேயன் என்பவரை ஐஸ்வர்யா கரம் பிடித்துள்ளார். இந்த திருமணத்தில், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளார். அந்த புகைப்படம் தற்போது வெளியானது. மேலும், ரசிகர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை சமூக வலைதளங்கள் மூலம் ஷங்கர் குடும்பத்திற்கு தெரிவித்து வருகின்றனர்.
ரஜினி, கமல், சூர்யா, மணிரத்தினம், சுகாஷினி, கார்த்திக், நயன், விக்னேஷ் சிவன், உள்ளிட்ட பல நட்சத்திர பிரபலங்கள் இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு விஜயின் மனைவி சங்கீதா தன்னுடைய தோழிகளுடன் சென்று வாழ்ந்து தெரிவித்திருக்கிறார். விஜய் கோட் படத்தின் ஷூட்டிங் காக ரஷ்யாவில் இருப்பதால் சங்கர் மகள் திருமணத்திற்கு தான் வர முடியாது என்பதால், சங்கீதாவை அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க: ஜோவிகா எனக்கு பொறக்கல.. உண்மையான அப்பா அவர் தான்.. அதிரவைத்த வனிதாவின் Ex கணவர்..!
தற்போது, திருமணத்தில் எடுத்த புகைப்படங்கள் இணையதளத்தில் பகிரப்பட்டு வரும் நிலையில், மருமகன் மகளுக்கு தாலி கட்டும் போது எடுத்த புகைப்படமும் வெளியாகி இருக்கிறது. அப்போது, கைகூப்பி எமோஷனலான மகள் ஐஸ்வர்யாவை ஏக்கத்துடன் சங்கர் பார்க்கும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஆறுதலான கருத்துக்களை தெரிவித்து வந்தனர். மேலும், சிலரோ ஏன் மாப்பிள்ளை சிரிக்கவே மாட்டேங்குறாரு என்று கருத்துக்களை முன்வைத்து வந்தனர்.
மேலும் படிக்க: போதை ஊசி போட்டுக்கிட்டு ஷூட்டிங் வந்த கவர்ச்சி நடிகை.. பயில்வான் வெளியிட்ட திடுக்கிடும் தகவல்..!
மேலும் படிக்க: எனக்கு ஓட்டு இல்லையா?.. ஆசையோடு வந்த சூரிக்கு காத்திருந்த அதிர்ச்சி..!(video)
இந்நிலையில், திருமணம் முடிந்த கையோடு ஐஸ்வர்யா தன்னுடைய கணவர் தருண் கார்த்திகேயனுடன் ரொமான்ஸ் செய்து எடுத்த போட்டோஷூட் எடுத்துள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. தற்போது எடுத்துக் கொண்ட புகைப்படத்தில் மாப்பிள்ளை சிரித்த முகத்துடன் காணப்படுவதால் இந்த ஜோடியும் நல்லாதான் இருக்கிறது என்று பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…
This website uses cookies.