நடிகை ஷோபனா தளபதி, எனக்குள் ஒருவன், இது நம்ம ஆளு, போடா போடி என பல தமிழ் படங்களில் நடித்து பிரபலமானவர். இப்போது நடிப்புக்கு சின்னதாக லீவ் போட்டு விட்டார். தற்போது சென்னையில் பரத நாட்டியப்பள்ளியும் நடத்தி வருகிறார் நடிகை ஷோபனா.
இதனிடையே, தமிழில் மட்டுமில்லாமல், மலையாளத்தில் இவர் மிக பிரபலமான நடிகை, Infact ரஜினி, ஜோதிகா நடித்த சந்திரமுகி படத்தில் சந்திரமுகி கதாபாத்திரத்தை ஏற்று, தேசிய விருது வாங்கியவர் ஷோபனா தான். தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம் மற்றும் ஆங்கிலப் படங்களில் மேலதிகமாக கிட்டத்தட்ட 230 படங்களில் நடித்துள்ளார்.
இவர் பழம்பெரும் நடிகை பத்மினியின் சொந்தகாரர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது இவருக்கு 53 வயதாகிறது, இருந்தும் தற்போதுவரை திருமணம் செய்துகொள்ளவில்லை, ஆனால் 23 ஆண்டுகளாக ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்க்கிறார்.
அந்த வகையில், முன்னதாக, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஷோபனா நடிப்பில் வெளியான தளபதி, சிவா என இரண்டு படங்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்த இரண்டு படங்களுக்கும் மக்கள் நல்ல வரவேற்பு கொடுத்தனர்.
மேலும், சிவா படத்தில் ஷோபனா மற்றும் ரஜினி நடித்து வந்த போது மழையில் எடுக்க இருந்த ஒரு பாடல் காட்சியை படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். ஆனால் இந்த விஷயம் ஷோபனாவுக்கு சொல்லவில்லையாம். அன்று ஷோபனாவிடம் உதவியாளர் வெள்ளை நிற சேலையை கொடுத்து இருந்தார். இதனை பார்த்த ஷோபனா அதிர்ச்சி அடைந்து உள்ளார். ஏனெனில் நடிகை சோபனா அந்த ஆடைக்கு தகுந்த உள்ளாடைகளை கொண்டுவரவில்லையாம்.
இறுதியாக, ஷோபனா பிளாஸ்டிக் கவர் எடுத்து கட்டி கொண்டு சென்றாராம். அந்த பாடலின் படப்பிடிப்பில் ரஜினி ஷோபனாவை கட்டிப்பிடிப்பது போன்ற காட்சி எடுக்க பட்ட போது, ரஜினி கட்டிப்பிடித்ததும் கவர் சத்தத்தைக் கேட்டு அதிர்ச்சி ஆகிவிட்டாராம்.
இதனையடுத்து, நடிகை ஷோபனா ரஜினியிடம் இந்த விஷயத்தை பற்றி யாரிடமும் சொல்லாதீர்கள் என் மானம் போய்விடும் என்று தெரிவித்ததாக பேட்டி ஒன்றில் ஷோபனா தெரிவித்துள்ளார்.
சேலம், நாராயண நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் மாதவராஜ்(75). இவரது மனைவி பிரேமா(67). கணவன் மனைவி மட்டும் வீட்டில்…
டிராகன் திரைப்பட கதாநாயகி கயாது லோஹர் ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் புகழ்பெற்ற வாயுலிங்கமான ஸ்ரீகாளஹஸ்திஸ்வரர், ஞானபிரசுன்னாம்பிகை தாயாரை தரிசனம்…
பிரியங்கா வசி திருமணம் குறித்து பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பல விஷயங்களை பேசியுள்ளார். மெட்ரோ மெயில் என்ற சேனலுக்கு…
தமிழக அரசின் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 261 பயனாளிகளுக்கு வீடு கட்டிக் கொள்வதற்கு அரசு ஆணையினை உயர்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தனித்து தான் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவோம் என…
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் ஜீடிமெட்லா பகுதியில் உள்ளகஜுலராமரம், பாலாஜி லேஅவுட்டில் சஹஸ்ரா மகேஷ் ஹைட்ஸ் எனும் அடுக்குமாடி குடியிருப்பில் வெங்கடேஸ்வர்…
This website uses cookies.