நடிகை ஷோபனா தளபதி, எனக்குள் ஒருவன், இது நம்ம ஆளு, போடா போடி என பல தமிழ் படங்களில் நடித்து பிரபலமானவர். இப்போது நடிப்புக்கு சின்னதாக லீவ் போட்டு விட்டார். தற்போது சென்னையில் பரத நாட்டியப்பள்ளியும் நடத்தி வருகிறார் நடிகை ஷோபனா.
இதனிடையே, தமிழில் மட்டுமில்லாமல், மலையாளத்தில் இவர் மிக பிரபலமான நடிகை, Infact ரஜினி, ஜோதிகா நடித்த சந்திரமுகி படத்தில் சந்திரமுகி கதாபாத்திரத்தை ஏற்று, தேசிய விருது வாங்கியவர் ஷோபனா தான். தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம் மற்றும் ஆங்கிலப் படங்களில் மேலதிகமாக கிட்டத்தட்ட 230 படங்களில் நடித்துள்ளார்.
இவர் பழம்பெரும் நடிகை பத்மினியின் சொந்தகாரர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது இவருக்கு 53 வயதாகிறது, இருந்தும் தற்போதுவரை திருமணம் செய்துகொள்ளவில்லை, ஆனால் 23 ஆண்டுகளாக ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்க்கிறார்.
அந்த வகையில், முன்னதாக, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஷோபனா நடிப்பில் வெளியான தளபதி, சிவா என இரண்டு படங்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்த இரண்டு படங்களுக்கும் மக்கள் நல்ல வரவேற்பு கொடுத்தனர்.
மேலும், சிவா படத்தில் ஷோபனா மற்றும் ரஜினி நடித்து வந்த போது மழையில் எடுக்க இருந்த ஒரு பாடல் காட்சியை படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். ஆனால் இந்த விஷயம் ஷோபனாவுக்கு சொல்லவில்லையாம். அன்று ஷோபனாவிடம் உதவியாளர் வெள்ளை நிற சேலையை கொடுத்து இருந்தார். இதனை பார்த்த ஷோபனா அதிர்ச்சி அடைந்து உள்ளார். ஏனெனில் நடிகை சோபனா அந்த ஆடைக்கு தகுந்த உள்ளாடைகளை கொண்டுவரவில்லையாம்.
இறுதியாக, ஷோபனா பிளாஸ்டிக் கவர் எடுத்து கட்டி கொண்டு சென்றாராம். அந்த பாடலின் படப்பிடிப்பில் ரஜினி ஷோபனாவை கட்டிப்பிடிப்பது போன்ற காட்சி எடுக்க பட்ட போது, ரஜினி கட்டிப்பிடித்ததும் கவர் சத்தத்தைக் கேட்டு அதிர்ச்சி ஆகிவிட்டாராம்.
இதனையடுத்து, நடிகை ஷோபனா ரஜினியிடம் இந்த விஷயத்தை பற்றி யாரிடமும் சொல்லாதீர்கள் என் மானம் போய்விடும் என்று தெரிவித்ததாக பேட்டி ஒன்றில் ஷோபனா தெரிவித்துள்ளார்.
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
என்னை கடவுள் எனச் சொல்லி கடவுளை தாழ்த்திவிட வேண்டாம் என்றும், நான் சாதாரண மனிதன்தான் என்றும் இசையமைப்பாளர் இளையராஜா கூறியுள்ளார்.…
This website uses cookies.