சினிமா / TV

தமிழில் பாடுவது சிரமம்தான்.. பிரபல பாடகி பேச்சு.. ரசிகர்கள் அதிர்ச்சி!

தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் பாடுவது சிரமம்தான் என பிரபல பின்னணிப் பாடகி ஸ்ரேயா கோஷல் கூறியுள்ளார்.

சென்னை: தமிழ் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மொழிகளில் பாடி தேசிய அளவில் புகழ்பெற்ற பாடகியாக வலம் வருபவர் ஸ்ரேயா கோஷல். இந்த நிலையில், இவரின் இசை நிகழ்ச்சி சென்னை நந்தனத்தில் மார்ச் 1ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில், இது தொடர்பான செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

இதில், பிரபல பின்னணிப் பாடகி ஸ்ரேயா கோஷல் கலந்து கொண்டு பேசினார். முதலில், தமிழில் தனக்குப் பிடித்த பாடல் என முன்பே வா,..அன்பே வா.. பாடலைப் பாடிக் காட்டினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “என்னுடைய அப்பா விஞ்ஞானியாக இருந்தாலும், நான் இசைத் துறையில் வந்தது ஆச்சரியமானதுதான்.

ஆனால், தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் பாடுவதுதான் எனக்கு மிகவும் சிரமமான ஒன்று” எனத் தெரிவித்தார். இதனால், ரசிகர்கள் ஆச்சர்யத்தில் உள்ளனர். காரணம், தமிழ், மலையாள மொழிகளில் பாடல் பாடுவது சிரமம் என்றாலும், அவரது குரலுக்காக ரசிகர் பட்டாளமே இருக்கிறது.

ரசிகர் ப்ரபோஸ்: முன்னதாக, கடந்த ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெற்ற இசைக் கச்சேரியில், கூட்டத்தில் இருந்த ஒரு ரசிகர், “ஸ்ரேயா, நீங்கள்தான் என்னுடைய இரண்டாவது காதல்” என தான் கையில் வைத்திருந்த பதாகையில் குறிப்பிட்டிருந்தார். உடனே அந்த ரசிகரிடம், அப்போது முதல் காதல் யார் என ஸ்ரேயா கோஷல் கேட்டார்.

இதையும் படிங்க: ’சூரியன உதயநிதி பார்த்ததே இல்ல’.. ’தற்குறிகள்’.. அண்ணாமலை கடும் விமர்சனம்!

அதற்கு, அந்த ரசிகர் தனது அருகில் அமர்ந்திருந்த காதலியைக் காண்பித்தார். பின்னர், அனைவரின் முன்பாகவும் அவரிடம் கல்யாணத்துக்கு ப்ரபோஸ் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். இதனையடுத்து, தனது காதலிக்கு மோதிரத்தை அணிவித்த அந்த காதலனுக்காக, ஸ்ரேயா கோஷல் பாட்டு பாடினார்

Hariharasudhan R

Recent Posts

சிறுவன் அன்புக்கரசின் அன்புக்கு கட்டுப்பட்ட தமிழக அரசு.. இன்ப அதிர்ச்சி கொடுத்த அமைச்சர்!

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே P.புதுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கடந்த ஜனவரி மாதம் 35 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக…

39 seconds ago

குடிக்க தண்ணீர் கேட்டு தம்பதியை தாக்கி நகை பறிப்பு : மர்மநபர்களை தேடும் போலீஸ்..!!

சேலம், நாராயண நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் மாதவராஜ்(75). இவரது மனைவி பிரேமா(67). கணவன் மனைவி மட்டும் வீட்டில்…

16 hours ago

பவ்யமாக பழத்தை எடுத்து கொடுத்த கயாடு லோஹர்… மொத்தக் கூட்டமும் சுத்தி வந்திருச்சே!

டிராகன் திரைப்பட கதாநாயகி கயாது லோஹர் ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் புகழ்பெற்ற வாயுலிங்கமான ஸ்ரீகாளஹஸ்திஸ்வரர், ஞானபிரசுன்னாம்பிகை தாயாரை தரிசனம்…

16 hours ago

பிரியங்காவை வைத்து விளையாடும் விஜய் டிவி.. 8 வருட ரகசிய உறவு : பிரபலம் பகீர்!

பிரியங்கா வசி திருமணம் குறித்து பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பல விஷயங்களை பேசியுள்ளார். மெட்ரோ மெயில் என்ற சேனலுக்கு…

17 hours ago

திருமணம் செய்த உடனே குழந்தை பிறக்க வேண்டுமென்றால்… சர்ச்சையை கிளப்பிய திமுக எம்பி பேச்சு!

தமிழக அரசின் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 261 பயனாளிகளுக்கு வீடு கட்டிக் கொள்வதற்கு அரசு ஆணையினை உயர்…

18 hours ago

விஜய் பங்கேற்ற இஃப்தார் நோன்பு.. சீமான் சொன்ன அதிரடி காரணம்!

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தனித்து தான் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவோம் என…

19 hours ago

This website uses cookies.