தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் பாடுவது சிரமம்தான் என பிரபல பின்னணிப் பாடகி ஸ்ரேயா கோஷல் கூறியுள்ளார்.
சென்னை: தமிழ் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மொழிகளில் பாடி தேசிய அளவில் புகழ்பெற்ற பாடகியாக வலம் வருபவர் ஸ்ரேயா கோஷல். இந்த நிலையில், இவரின் இசை நிகழ்ச்சி சென்னை நந்தனத்தில் மார்ச் 1ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில், இது தொடர்பான செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
இதில், பிரபல பின்னணிப் பாடகி ஸ்ரேயா கோஷல் கலந்து கொண்டு பேசினார். முதலில், தமிழில் தனக்குப் பிடித்த பாடல் என முன்பே வா,..அன்பே வா.. பாடலைப் பாடிக் காட்டினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “என்னுடைய அப்பா விஞ்ஞானியாக இருந்தாலும், நான் இசைத் துறையில் வந்தது ஆச்சரியமானதுதான்.
ஆனால், தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் பாடுவதுதான் எனக்கு மிகவும் சிரமமான ஒன்று” எனத் தெரிவித்தார். இதனால், ரசிகர்கள் ஆச்சர்யத்தில் உள்ளனர். காரணம், தமிழ், மலையாள மொழிகளில் பாடல் பாடுவது சிரமம் என்றாலும், அவரது குரலுக்காக ரசிகர் பட்டாளமே இருக்கிறது.
ரசிகர் ப்ரபோஸ்: முன்னதாக, கடந்த ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெற்ற இசைக் கச்சேரியில், கூட்டத்தில் இருந்த ஒரு ரசிகர், “ஸ்ரேயா, நீங்கள்தான் என்னுடைய இரண்டாவது காதல்” என தான் கையில் வைத்திருந்த பதாகையில் குறிப்பிட்டிருந்தார். உடனே அந்த ரசிகரிடம், அப்போது முதல் காதல் யார் என ஸ்ரேயா கோஷல் கேட்டார்.
இதையும் படிங்க: ’சூரியன உதயநிதி பார்த்ததே இல்ல’.. ’தற்குறிகள்’.. அண்ணாமலை கடும் விமர்சனம்!
அதற்கு, அந்த ரசிகர் தனது அருகில் அமர்ந்திருந்த காதலியைக் காண்பித்தார். பின்னர், அனைவரின் முன்பாகவும் அவரிடம் கல்யாணத்துக்கு ப்ரபோஸ் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். இதனையடுத்து, தனது காதலிக்கு மோதிரத்தை அணிவித்த அந்த காதலனுக்காக, ஸ்ரேயா கோஷல் பாட்டு பாடினார்
சி வோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பில் விஜய், 18 சதவீத வாக்குகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது தமிழக அரசியலில் கவனம் பெற்றுள்ளது.…
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஏற்பட்ட ஒரு கேள்வியின் காரணமாக கடும்…
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் தனது சினிமா அறிமுகத்திலேயே அவர் வாங்கி இருக்கும் சம்பளம் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது.தெலுங்கு…
அதிமுக உடனான கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், சரியான நேரம் வரும்போது, அதை தெரியப்படுத்துவோம் என்றும் அமித்ஷா கூறியுள்ளார்.…
தூத்துக்குடி அருகே காதலை கைவிட்டுச் சென்ற இளம்பெண்ணை தீக்கிரையாக்கி கொன்ற இளைஞர் உள்பட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி:…
தோனி களமிறங்குவாரா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு.! ஐபிஎல் 2025 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள்…
This website uses cookies.