தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகையான ஸ்ரேயா சரண் 2000 காலகட்டத்தின் ஆரம்பத்திலிருந்து தற்போது வரை தொடர்ச்சியாக திரைப்படங்களில் நடித்து நட்சத்திர நடிகையாக அந்தஸ்தை பிடித்திருக்கிறார், 42 வயதாகும் இவரது மார்க்கெட் கொஞ்சம் கூட குறையவில்லை.
அதற்கு மிக முக்கிய காரணமே இவரது எவர்கிரீன் அழகு தான். இளமை குறையாமல் பார்த்த கண்ணுக்கு இன்னும் அப்படியே இருந்து வரும் ஸ்ரேயா சரண் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் எனக்கு 20 உனக்கு 18 திரைப்படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமானார்.
அதை அடுத்து ரஜினிகாந்துடன் ஜோடி போட்டு சிவாஜி திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் அவருக்கு மாபெரும் வெற்றி படமாக மிகப்பெரிய பெயரும் புகழும் தேடி கொடுத்தது. அதை அடுத்து தமிழில் மழை, திருவிளையாடல் ஆரம்பம், அழகிய தமிழ் மகன், கந்தசாமி, குட்டி, புலி உள்ளிட்ட பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாகவும் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாகவும் இடத்தை பிடித்தார்.
இதனிடையே இவர் உருசியாவைச் சேர்ந்த தொழிலதிபரும், டென்னிசு வீரருமான ஆன்ட்ரி கொஸ்சீவை ரகசியத் திருமணம் செய்துக்கொண்டார்.இவர்களுக்கு ராதா என்ற பெண் குழந்தை உள்ளது. திருமணத்திற்கு பிறகு தொடர்ந்து தெலுங்கு மொழிகளில் வாய்ப்புகள் கிடைக்க தொடர்ச்சியாக நடித்து வரும் ஸ்ரேயா சரண் சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
இந்த நிலையில் டூ பீஸ் உடையில் எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட நெட்டிசன்ஸ் எல்லோரும் விலா எலும்பு தெரியும் அளவிற்கு இவ்வளவு ஒல்லியாகிவிட்டீர்களா? என கேட்டு வருகிறார்கள்.அது மட்டும் இல்லாமல் இவரது எல்லை மீறி இந்த கிளாமர் இணையவாசிகளை கிறுகிறுக்க வைத்திருக்கிறது.