நடிகர் சித்தார்த் மற்றும் நடிகை அதிதி ராவ் ஹைதாரி இருவரும் கடந்த செப்டம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில், அந்த புகைப்படங்களை அவர்கள் தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.
அதிதி ராவ் ஹைதாரி தனது திரைப்பயணத்தை மலையாள திரைப்படம் மூலம் தொடங்கி, ‘டெல்லி 6,ராக்ஸ்டார்,மர்டர் 3‘ போன்ற இந்திப் படங்களில் நடித்து பிரபலமடைந்தார்.
தமிழில், ‘காற்று வெளியிடை,செக்க சிவந்த வானம்,சைக்கோ’ போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை பெற்றார்.
சித்தார்த் மற்றும் அதிதி, தெலுங்கில் வெளியான ‘மகா சமுத்திரம்’ படத்தின் மூலம் சேர்ந்து நடித்தபோது, இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது என கூறப்பட்டது. அந்த கிசுகிசுக்கள் திருமணத்தில் முடிந்தது.
இருவரின் திருமணம், தெலங்கானா மாநிலம் வனபர்த்தி மாவட்டம் உள்ள 400 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ ரங்கநாயக சுவாமி கோயிலில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் மணிரத்னம், மற்றும் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், இருவரின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
இதையும் படியுங்க: பறக்குறோம் பறந்தே ஆகுறோம்…தெறிக்கவிடப்போகும் ரேஸ் கார்…களத்தில் கெத்தாக அஜித் ..!
சித்தார்த்-அதிதி தங்கள் திருமண ஆல்பத்தில் சில அழகான புகைப்படங்களை வெளியிட்டு, ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டுள்ளனர். இந்த அழகிய தருணங்களை சமூக வலைதளங்களில் காண,ரசிகர்கள் உற்சாகமாக தங்கள் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
சித்தார்துக்கும்-அதிதிக்கும் இது இரண்டாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டத்திற்குட்பட்ட தென்குவளவேலி என்ற பகுதியைச் சேர்ந்த சங்கர் வயது 45. இவர் கூலி வேலை செய்து…
சச்சின் ரீரிலீஸ் 2005 ஆம் ஆண்டு விஜய் கதாநாயகனாக நடித்து வெளியான “சச்சின்” திரைப்படம் கடந்த 18 ஆம் தேதி…
ஹைதராபாத்தை சேர்ந்த சாய் சூர்யா டெவலப்பர்ஸ், சுரானா ஆகிய ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் விளம்பரங்களில் நடிகர் மகேஷ்பாபு நடித்திருந்தார். இதையும்…
சர்வதேச சந்தையில் நிலவும் விலை பொறுத்தே தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு நாளும் தங்கம் விலை உயர்ந்து கொண்டே…
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
This website uses cookies.