தமிழ் திரையுலகை பொருத்தவரை நடிகரை தலைவர் இடத்தில் வைத்து ரசிகர்கள் கொண்டாடும் அளவிற்கு மக்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்துள்ளவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தான். இவரது மூத்த மகள் தான் ஐஸ்வர்யா. 2006ம் ஆண்டு நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்த ஐஸ்வர்யாவுக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், கடந்த 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் தனது கணவர் தனுஷை பிரிவதாக அறிவித்தார்.
தற்போது இருவரும் தனித்தனியே பிரிந்து தான் வாழ்ந்து வருகிறார்கள். ஆனால், அவர்கள் விவாகரத்து செய்யவில்லை. இவர்கள் பிரிவுக்கு காரணம் தனுஷ் பல்வேறு நடிகைகளுடன் தகாத உறவில் இருந்தது தான் என கூறப்படுகிறது. அந்த விஷயங்களை கண்டும் காணாமல் இருந்தவரைக்கும் பிரச்சனை இரு குடும்பத்தினருக்கு மட்டும் தெரியும். ஆனால் அவரை கண்டித்து எச்சரித்ததால் மனைவியே வேண்டாம் என பிரிந்துவிட்டார்.
குறிப்பாக இவர்களின் விவாகரத்துக்கு நடிகை அமலா பால் தான் காரணமாம் VIP படத்தில் நடித்தபோது தனுஷை வீட்டிற்கே அனுப்பாமல் தனியாக வீடு எடுத்து இருவரும் ஜாலி பண்ணியதாக செய்திகள் கூறுகிறது. இதை அறிந்து ஐஸ்வர்யா மிகவும் வேதனை பட்டாராம். மகளின் நிலையை பார்த்து வருந்திய ரஜினி கடுங்கோபத்தோடு தனுஷ் – அமலா பால் தங்கியிருந்த அப்பார்ட்மெண்டிற்கு சென்று கையும் களவுமாக பிடித்து அமலா பாலுக்கு செம டோஸ் விட்டாராம். ஆனால், அவரோ நடத்தை சரியில்லாத உங்கள் மருமகனை அடக்கிவையுங்கள் என திமிராக பேசினாராம். இதனால் அங்கு பெரிய பிரச்சனையே வெடித்ததாம்.
இதையடுத்து அங்கிருந்து அமைதியாக திரும்ப வந்த ரஜினி அமலா பாலுக்கு பட வாய்ப்புகளே கிடைக்காத மாதிரி தொடர்ந்து சதி செய்து அவரது மார்க்கெட்டையே காலி செய்தாராம். அமலா பாடல் படங்களில் ஒப்பந்தம் செய்யப்பட்ட பின்னரும் காரணமே இன்றி தூக்கியடிக்கப்பட்டாராம். பின்னர் பணத்திற்கு வழி இல்லாததால் சொந்த ஊரான கேரளாவுக்கே சென்று தஞ்சம் அடைந்தாராம்.
தன் மகளுக்காக எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் சென்று வில்லனாக மாறும் ரஜினியை அன்று தான் பார்த்ததாம் கோலிவுட் திரையுலகம். தற்ப்போது இந்த தகவல் பரபரப்பாக பேசப்பட ரஜினி இவ்வளவு மோசமானவரா? என வாய் மேல் விரல் வைத்துவிட்டார்கள் ரசிகர்கள். இதேபோல் தான் சிம்பு ஐஸ்வர்யாவை காதலித்து கழட்டிவிட்ட சமயத்தில் ரஜினி சிம்புவுக்கும் இதையேதான் செய்தாராம். மகளுக்காக சிம்புவை சினிமாவில் இருந்து கொஞ்ச நாள் ஒதுக்கி வைத்தார் என கோலிவுட்டில் பேசிக்கொள்கிறார்கள்.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.