சிம்பு தனது 42 வது பிறந்த நாளை முன்னிட்டு அடுத்தடுத்து படங்கள் குறித்த அப்டேட்டை வெளியிட்டு ரசிகர்ளை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.இந்த நிலையில் தற்போது சிம்புவின் புதிய பட ஒன்றில் நடிக்க ஆட்கள் தேவை என படக்குழு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
சிம்பு தன்னுடைய 49-வது படத்தை பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்க இருப்பதாக அதிகாரபூர்வ தகவல் வெளியானது.சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டது,அதில் அவர் கையில் ஒரு புக்குடன் ரத்தக்கரையோடு ஒரு கத்தி வைத்திருந்தார்.இதில் சிம்பு ஒரு பொறியல் கல்லூரி மாணவனாக நடிக்க உள்ளார்,கிரைம் த்ரில்லரில் இப்படம் உருவாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.இப்படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.
இதையும் படியுங்க: வசூலை வாரிக் குவிக்கும் விடாமுயற்சி.. முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
தற்போது படத்தின் ஷூட்டிங் வேலைகள் நடைபெற இருப்பதால்,படத்தில் நடிக்க நடிகர்களுக்கான தேர்வு நடைபெற்று வருகிறது.இதற்கான போஸ்டரை பட தயாரிப்பு நிறுவனம் தன்னுடைய X-தளத்தில் வெளியிட்டுள்ளது.
அதில் ஒரு நிமிடம் உங்களுடைய நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் வீடீயோவை அனுப்ப வேண்டும் என அறிவித்துள்ளது.மேலும் இன்ஸ்ட்ராகிராம் ரீல்ஸை அனுப்ப வேண்டாம் என கூறி இ-மெயில் மற்றும் வாட்ஸ் ஆப் நம்பரை கொடுத்துள்ளார்கள்.
இதனால் நடிப்பில் ஆர்வம் இருக்க கூடிய நபர்கள் மற்றும் சினிமாவில் எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும் என காத்துக்கொண்டிருக்கும் நபர்களுக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பாக அமைந்துள்ளது.
மோகன்லாலின் எம்புரான்… பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான “எம்புரான்” திரைப்படம் ரசிகர்களின்…
சீரியல் நடிகையை காதலிப்பது போல் நடித்து கொலை செய்து உடலை சாக்கடையில் புதைத்த கோவில் பூசாரிக்கு ஆயுள் தண்டனை. 2023…
சிஎஸ்கே அணிக்காக இந்தியா வந்து விளையாடி வருகிறார் பத்திரனா. சென்னை அணியில் முக்கிய வீரராக இருக்கும் பத்திரனா கடந்த சீசனில்…
சீன மகிழுந்து நிறுவனத்தின் ரூ.85 ஆயிரம் கோடி முதலீட்டை தமிழ்நாடு இழந்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். விழுப்புரம்:…
சிக்கந்தரின் நிலைமை? கோலிவுட்டின் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் பாலிவுட்டில் உருவாகியுள்ள திரைப்படம்…
பிரதமர் மோடி தனது ஓய்வு அறிவிப்பை வெளியிடுவதற்காகவே ஆர்எஸ்எஸ் தலைமையகத்துக்குச் சென்றதாக சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். மும்பை: உத்தவ் பிரிவு…
This website uses cookies.