சிம்ரன் தங்கையை திட்டமிட்டு கொலை செய்தாரா பிரபல நடிகை… 21 வருட மர்மம் கலைந்தது!

Author: Shree
29 July 2023, 2:24 pm

ஒல்லி பெல்லி இடுப்பழகியாக ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமாவையும் தன் இடுப்பசைவால் ஆட்டி படைத்தவர் நடிகை சிம்ரன். மும்பை பஞ்சாபி குடும்பத்தில் பிறந்து வளர்ந்த இவர் நிகழ்ச்சி தொகுப்பாளராக சினிமாத்துறையில் அறிமுகமானார்.

1995-இல் அவர் நடித்த முதல் படமான சனம் பெருந்தோல்வியை அடைந்தது. அதன் பின்னர் இந்தியை தவிர மற்ற மொழிகளில் கவனம் செலுத்தி மலையாளத்தில் மம்முட்டியுடன் இந்திரபிரஸ்தம், கன்னடத்தில் சிவராஜ்குமாருடன் சிம்ஹடா மாரி படத்திலும் அப்பாய் காரி பெல்லி என்ற தெலுங்குப் படத்திலும் நடித்தார்.

தமிழில் 1997 ஆம் ஆண்டு ஒன்ஸ்மோர் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இங்கு முதல் படமே சூப்பர் ஹிட் அடித்தது. பின்னர் நேருக்கு நேர், துள்ளாத மனமும் துள்ளும், வாலி , ஜோடி , பிரியமானவளே , பஞ்சதந்திரம் , கன்னத்தில் முத்தமிட்டால் , வாரணம் ஆயிரம் என பல்வேறு ஹிட் படங்களில் நடித்தார்.

பின்னர் தீபக் பக்கா எனபவரை திருமணம் செய்துக்கொண்டு செட்டில் ஆனார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இதே போல் சிம்ரனின் தங்கை மோனல் நேவலும் நடிகை தான். விஜய்யுடன் இணைந்து பத்ரி உள்ளிட்ட ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார். இவர் 2002 இல் தற்கொலை செய்து கொண்டு கொண்டு இறந்தது அப்போது மரமமாக பார்க்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது இவரது மரணத்திற்கான உண்மைச்சம்பவம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மோனல், பிரசன்னா என்பவரை உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளார். பிரசன்னா, பிரபல நடன கலைஞர் கலா மாஸ்டரின் நெருங்கிய சொந்தக்காரர்.

மோனல் – பிரசன்னா காதலுக்கு பிரசன்னா வீட்டில் சம்மதம் தெரிவிக்காமல் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் மனமுடைத்துப்போன அவர் தற்கொலை செய்துக்கொண்டு இறந்துவிட்டார். ஆனால் இந்த உண்மை சம்பவம் அப்போது மறைக்கப்பட்டுவிட்டது.

அதுமட்டுமலல்லாமல் மோனல் தற்கொலையில் நடிகர் ரியாஸ் கான் மற்றும் நடிகை மும்தாஜ் இருவருக்கும் தொடர்பு இருக்கிறது என நடிகை சிம்ரன் அப்போதைய பேட்டிகளில் கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது ஒரு தகவல் கிடைத்துள்ளது. தற்கொலை செய்துக்கொள்ளும் அன்று மோனல் நாவல் தனது படத்தின் பூஜையில் பங்கேற்றிருந்தாராம்.

மேலும் அவர் இறந்த பின்னர் நடிகை மும்தாஜ் அந்த வீட்டிற்கு சென்று அந்த தடயங்களை அழித்துவிட்டு சென்றதாக ஒரு அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 21 ஆண்டுகளுக்கு முன் நடந்த இந்த மர்ம கொலையில் பலர் சிக்கியிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

  • Kudumbasthan Movie Blockbuster Hit பட்டையை கிளப்பும் குடும்பஸ்தன்…அதுக்குள்ள சின்னத்திரையில்.. வெளியான மாஸ் அறிவிப்பு..!!