இனி வடிவேலு அந்த விஷயத்திற்கு சரிபட்டு வரமாட்டார் : நாய் சேகர் ரீட்டர்ன்ஸ் குறித்து காமெடி நடிகர் அட்வைஸ்..!

தன்னுடைய நகைச்சுவையான பாடி லாங்குவேஜின் மூலம் தமிழ் சினிமாவில் உயந்த பல நடிகர்கள் உள்ளனர். நடிகர் சிங்கமுத்து அப்படி திறமை மிக்க காமெடி நடிகர்களில் ஒருவர் தான். இவரை போல வைகை புயல் வடிவேலு என்ற அந்தஸ்துடன் தமிழ் சினிமாவின் முதன்மையான காமெடியனாக வலம் வந்தவர் நடிகர் வடிவேலு. இவர்கள் இருவரும் முன்னதாக பல திரைப்படங்களில் இணைந்து நடித்திருக்கின்றனர். ஆனால் நடிகர் வடிவேலு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சிங்கமுத்து நில மோசடி செய்து விட்டதாக நிதிமன்றத்தில் புகார் அளித்திருந்த நிலையில், இன்றும் முடிக்கப்படாமல் நிலுவையில் தான் உள்ளது அந்த வழக்கு.

இந்த நிலையில், நடிகர் சிங்கமுத்து பிரபல செய்தி ஊடகம் ஒன்றிக்கு சமீபத்தில் அளித்த பேட்டியில் வடிவேலுவுடனான சண்டை பற்றியும் தன்னுடைய மகன் பற்றியும் சில விஷியங்களை பகிர்ந்து உள்ளார். அதில் நீதிமன்ற வழக்கை பற்றி கேட்ட போது அந்த வழக்கு வாய்தாவாக வாய்தாவாக வாங்கி இன்னமும் முடியாமல் இருந்து வருவதாகவும், ஒருமுறை நான் அந்த வழக்கின் போது வேண்டுமென்றே அவரின் பக்கத்தில் சென்று அமர்தேன். அப்போது அவர் என்னுடன் நேருக்கு நேராக சொல்லியிருக்கலாம் ஆனால் அவர் சொல்லவில்லை. ஏனென்றால் வடிவேலு சொன்னது பொய் என்று அவருக்கே தெரியும் என தெரிவித்துள்ளார்.

என்னுடைய மகன் கதாநாயகனாக வந்துவிட்டான் மேலும், அவருடைய மகன் கதாநாயகனாக வரவில்லை என்ற வயிற்றெரிச்சல் மற்றும், படம் கிடைக்கவில்லை என்றால் தன்னுடைய பணத்தை போட்டு படம் எடுக்க வேண்டியதுதானே என கேள்வி எழுப்பிய அவர், அது முதலில் மக்களுக்கு பிடிக்க வேண்டும் என்றும், அதற்கான முயற்சியைத்தான் செய்ய வேண்டும் எனவும், அதை தவிர்த்து மற்றவர்கள் மீது பொறாமை பட கூடாது என்று கூறினார்.

மேலும், சிங்கமுத்துவிடம் நாய் சேகர் ரீட்டர்ன்ஸ் திரைப்படம் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சிரித்துக்கொண்டே நான் நாய் சேகர் ரீட்டர்ன்ஸ் பார்க்க வில்லை அனால் படம் பார்தவர்களின் முகத்தை என்னால் பார்க்க முடியவில்லை. வடிவேலு அந்த படத்தில காமெடியன்கள் எல்லாம் இதோட முடித்தார்கள் என்று சொன்னார்.

எனக்கு இந்த படம் வெளியாவதற்கு ஒரு மாதத்துக்கு முன்னரே தெரிந்து விட்டது இந்த படம் ஓடாது என்றும், படத்தில் ஒருவர் மட்டும் காமெடி செய்தால் படம் ஓடாது என்றும், உதாரணமாக பத்து பேர் சேர்ந்து தேர் இழுத்தால்தான் தேர் பிரச்சனை இல்லாமல் நகரும் ஒருவர் மட்டும் இழுத்தால் இடையில் ஏதாவது பிரச்சனையாகிவிடும் என்று சிங்கமுத்து தெரிவித்தார்.

மீண்டும் வடிவேலுடன் நடிப்பீர்களா என்ற கேள்விக்கு, எல்லாரும் பொழைக்குறக்காக ஏதாவது சொல்லிட்டு இருப்பாங்க என்றும், அது அவர்களுடைய குணம் இப்போதெல்லாம் பல பேர் பல விதமாக பேசுகிறார்கள் எனவும், வடிவேலு சும்மாவே இருந்திருக்கலாம், புலி வருது புலி வருதுன்னு கடைசியில் அவரே வீட்டிற்குள் சென்று விட்டார்.

வடிவேலு மனசு வீடக் கூடாது, இந்த படம் இல்லைனா மற்ற படங்களில் நடித்து அடுத்த படங்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறதா என்று பார்க்க வேண்டும் எனவும், முயற்சி செய்து ஒரு நண்பனாக சொல்கிறேன் எனவும், ஆனால் நட்பை களங்கப்படுத்திய உனக்கு எப்படி தெரியும் என்றும், நட்பு விஷயத்திற்கு அவர் சரிபட்டு வரமாட்டார், எனவும் அந்த பேட்டியில் காமெடி நடிகர் சிங்கமுத்து தெரிவித்துள்ளார்.

Poorni

Recent Posts

நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!

நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…

14 hours ago

பிளாக்கில் டிக்கெட் விற்பவர்களுக்கு முதல்வர் கனவு.. விஜய்யை மறைமுமாக சாடிய அமைச்சர்!

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…

14 hours ago

கஞ்சா வைத்திருந்த பிரபல சினிமா இயக்குநர்கள்..வளைத்து வைளத்து கைது செய்யும் போலீசார்!

போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…

15 hours ago

வெற்றிமாறன் மேல் உள்ள பயத்தால் சூர்யா எடுத்த திடீர் முடிவு? அப்போ வாடிவாசலோட நிலைமை?

இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…

15 hours ago

அடுத்தவ புருஷனை பங்கு போட்டது தப்புதான்.. ஆனா பாலு மகேந்திரா எனக்கு எல்லாமே கொடுத்தாரு ; நடிகை ஓபன்!

நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…

16 hours ago

ஜெயிலரை ஓவர் டேக் செய்யப்போகும் குட்  பேட் அக்லி! விரைவில் ஒரு தரமான சம்பவம்?

தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…

16 hours ago

This website uses cookies.