10 நாட்களுக்கு முன்பே மரணத்தை கணித்த பவதாரிணி – அதிர்ச்சியூட்டும் தகவல்!

தமிழ் சினிமாவின் தலைமுறைக்கும் பேசும், பேசப்போகும் இசை அரசனாக பார்க்கப்படுபவர் இசைஞானி இளையராஜா. இவர் அன்னக்கிளி என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததன் மூலம் 1976 இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் 1000த்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியிருக்கிறார். சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை நான்கு முறை பெற்றுள்ளார். தமிழின் நாட்டுப்புற இசையினை அதன் தரம் குறையாமல் வழங்குவதில் அவர் ஞானி.

இனிமையான பாடலுக்கு கோடிக்கணக்கான ரசிகர்களை தன்வசப்படுத்துயிருக்கும் இளையராஜாவுக்கு கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா , பவதாரிணி என மூன்று பிள்ளைகள் உள்ளனர். இதில் பவதாரிணி பாடகியாகவும், இசையமைப்பாளராகவும் இருந்து வந்தார். இசை நிகழ்ச்சிக்காக இளையராஜா கடந்த 24ம் தேதி கொழும்பை வந்தடைந்தார். இதனிடையே, பவதாரணிக்கு நேற்று முன்தினம் திடீர் சுகயீனம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, பவதாரணி கொழும்பு லங்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில், வியாழக்கிழமை மாலை அவர் உயிரிழந்தார். புற்றுநோயுடன் திடீர் மாரடைப்பு ஏற்பட்டதே உயிரிழப்புக்கான காரணம் என மருத்துவமனை கூறியது.

பவதாரிணி சபரிராஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். பின்னர் இவர்களுக்கு குழந்தை பாக்கியமே இல்லை என்பதால் பவதாரணியை கணவர் பிரிந்து சென்றுவிட்டார். அதன் பின்னர் பவதாரிணி தனது அப்பா இளையராஜாவுடன் மகழ்ச்சியான நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்து வந்தார். இதனிடையே கடந்த ஓராண்டுக்கு முன் பவதாரணிக்கு பித்தப்பையில் கல் இருந்தது. அதற்காக சிகிச்சை எடுத்த போது அது, புற்றுநோயாக மாறி, சிறுநீரகத்திற்கும் பரவிவிட்டது.

இதற்காக பல சிகிச்சைகள் செய்த போதும் அதில் எந்தவிதமான பலனும் கிடைக்கவில்லை. அனைத்து மருத்துவர்களும் கைவிட்ட நிலையில், கடைசியாகத்தான் இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை அளிக்கப்படுவதாக அறிந்து அங்கு சென்று சிகிச்சை எடுத்தால் சரியாகும் என்ற நம்பிக்கையில் சென்றுள்ளார். ஆனால், அங்கு புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்றபோதே திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் அவர் துரதிஷ்டாவசமாக உயிரிழந்துவிட்டார்.

தொடர்ந்து பவராதரணி குறித்து பல விஷயங்கள் செய்தியாக வெளிவந்துகொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் ஒரு ஷாக்கிங் தகவல் கிடைத்துள்ளது. அதாவது பாடகி பவதாரிணி 10 நாட்களுக்கு முன்பே தனது மரணத்தை கணித்துவிட்டதாக கூறப்படுகிறது. ஆம், இறப்பதற்கு முன் நோயின் தீவிரத்தை தெரிந்துகொண்ட அவர் இலங்கை செல்வதற்கு முன் நண்பர்கள், சித்தப்பா, வெங்கட் பிரபு, பிரேம்ஜி, யுவன், கார்த்திக் ராஜா என அனைவரையும் சந்தித்து அவர்களுடன் நேரம் செலவிட்டாராம். அதுமட்டும் அல்லாமல் அவர்கள் அனைவருக்கும் பிடித்த பொருட்களை வாங்கி கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

UpdateNews360 Rajesh

Recent Posts

பிரச்சனையையே போர்வையாக போர்த்திக்கொண்டு தூங்கும் சிம்பு பட இயக்குனர்! மீண்டும் மீண்டுமா?

நடக்குமா? நடக்காதா? தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பதாக இருக்கும் திரைப்படத்தை முதலில் கமல்ஹாசன் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் ஒரு…

9 hours ago

தேசிய விருதுக்கு ஆப்பு வைத்த வீடியோ! தன் கையை தானே சுட்டுக்கொண்ட இயக்குனர் பாலா?

கறாரான இயக்குனர் இயக்குனர் பாலா மிகவும் கறாரான இயக்குனர் எனவும் அவர் நடிகர்களை அடித்து வேலை வாங்குவார் எனவும் ஒரு…

10 hours ago

அதிமுகவிடம் கணிசமான தொகுதிகளை கேளுங்க.. மேலிடத்துக்கு HINT கொடுத்த அண்ணாமலை!

தமிழ்நாட்டில் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஒரு வருடம் இருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் தேர்தலை சந்திக்க இப்போதே…

11 hours ago

காணாம போய்ட்டேன்; தனியா போராடிட்டு இருக்கேன்- அதிர்ச்சியை கிளப்பிய நஸ்ரியா!

கியூட் நடிகை நஸ்ரியா 90ஸ் கிட்களின் கியூட் நடிகையாக வலம் வந்தவர்.“நேரம்” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே இவர்…

12 hours ago

நான் மட்டும் பொண்ணா பொறந்திருந்தா? கமல்ஹாசனை பற்றி பேசி ட்ரோலுக்குள்ளான சூப்பர் ஸ்டார்

உலக நாயகன் உலக நாயகனாக வலம் வந்த கமல்ஹாசன் இந்திய சினிமாவிற்கே ஒரு நடிப்பு பல்கலைக்கழகமாக திகழ்ந்தவர். 1980களில் சாக்லேட்…

13 hours ago

காதல் திருமணம் செய்த மகள் கொடூர கொலை… பெற்றோர் அரங்கேற்றிய நாடகம்!

ஆந்திர மாநிலம், சித்தூர் மசூதி மிட்டாவை சேர்ந்தவர் யாஸ்மின்பானு (23). பூதலப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சாய்தேஜ் (25). இவர்கள் இருவரும்…

13 hours ago

This website uses cookies.