சினிமா / TV

ஜெயம் ரவி வாழ்க்கையை மொத்தமா மூடி கவிழ்த்த சிவகார்த்திகேயன் – பாவம் மனுஷன்!

நடிகர் ஜெயம் ரவி தொடர்ந்து பல தோல்வி திரைப்படங்களில் நடித்து மார்க்கெட் சறுக்கலில் இருந்து வந்தார். இப்படியான சமயத்தில் நிச்சயம் கட்டாயம் ஒரு வெற்றி திரைப்படத்தை கொடுத்தே ஆக வேண்டும் என்ற ஒரு முனைப்பில் ஜெயம் ரவி நடித்து வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் பிரதர் .

இந்த திரைப்படம் தீபாவளி தினத்தின் ஸ்பெஷலாக வெளிவந்தது. ராஜேஷ் டைரக்ஷனில் ஸ்க்ரீன் மீடியா என்டர்டைன்மென்ட் தயாரித்து வெளிவந்திருக்கும் இந்த திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகன் நடித்திருந்தார் .

இவர்களுடன் எம்.எஸ் பாஸ்கர், பூமிகா, சரண்யா உள்ளிட்ட பல நட்சத்திர பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். பேமிலி சென்டிமென்ட் கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் தான் இசையமைத்திருக்கிறார் .

இந்த திரைப்படம் தீபாவளி தினத்தின் ஸ்பெஷல் ஆக வெளிவந்து திரையரங்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால், இந்த திரைப்படம் ப்ரோமோஷன் பணிகளில் கோட்டை விட்டதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே பின்தங்கி விட்டது.

அதுமட்டுமில்லாமல் சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படம் திரையரங்குகளில் பிரதர் திரைப்படத்திற்கு போட்டியாக வெளிவந்து அனைத்து திரையரங்கங்களையும் ஆக்கிரமித்து விட்டது. ஆம் ஒட்டுமொத்த ரசிகர்களும் ஆடியன்ஸ்சும் அமரன் திரைப்படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்களை குவித்து வருவதால் மக்களும் அமரன் திரைப்படத்தை நோக்கியே படையெடுத்து வருகிறார்கள்.

இதனால் அமரன் திரைப்படத்தோடு போட்டி போட்டு வெளிவந்த பிரதர் திரைப்படம் வசூலிலும் விமர்சனத்திலும் பின்தங்கி இருப்பதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கிறது. ஜெயம் ரவியின் பிரதர் திரைப்படம் வெளிவந்த முதல் நாள் ரூ. 2.5 கோடி வசூல் ஈட்டிய நிலையில் இரண்டாவது நாள் ரூ. 2.25 கோடி வசூல் ஈட்டி இருக்கிறது .

ஆனால் சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படம் இரண்டு நாட்களில் ரூ40. 65 கோடி வசூலிட்டி மாபெரும் சாதனை படைத்திருக்கிறது. இதனால் பல மடங்கு வித்தியாசத்தில் அமரன் திரைப்படம் மொத்தமாக அடி வாங்கிவிட்டது.

எனவே சிவகார்த்திகேயனின் அமரனால் ஜெயம் ரவி மொத்தமாக அடித்து சாத்தப்பட்டு விட்டதாக வெளிவரும் செய்திகள் கூறுகிறது. பாவம் மனிஷன் ரொம்ப நாட்களுக்கு பிறகு எப்படியாவது ஒரு வெற்றி திரைப்படம் கொடுக்க வேண்டும் என காத்துக் கொண்டு இருந்த சமயத்தில் சிவகார்த்திகேயன் மொத்தத்தையும் தூக்கி வாரி சாப்பிட்டுவிட்டார்.

Anitha

Recent Posts

இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!

சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…

14 hours ago

7 மணி நேர வேலை… 2 நாள் விடுமுறை : சாம்சங் ஊழியர்கள் மீண்டும் போராட்டம்!

சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…

14 hours ago

ஆளுநருக்கு திடீர் மாரடைப்பு… மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதலமைச்சர்..!!

ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…

14 hours ago

ஆ ஊனா அமெரிக்கா கிளம்பிடுறாரே இந்த மனுஷன்? கமல்ஹாசன் திடீர் பயணத்துக்கு இதுதான் காரணமா?

எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…

14 hours ago

அரசு நிகழ்ச்சிக்கு ஹெலிகாப்டரில் வந்த அமைச்சர்கள்.. அடுத்த நிமிடமே விபத்து : அதிர்ச்சி வீடியோ!

தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…

15 hours ago

பொன்முடி பேசுனது தப்புதான்.. ஆனா . பெரியாரை விட மோசம் இல்ல.. காங்., மூத்த தலைவர் வக்காளத்து!

பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…

15 hours ago

This website uses cookies.