சின்னத்திரை வழியாக தனது பயணத்தை தொடங்கி, கடின உழைப்பின் மூலம் வெள்ளித்திரையில் உச்சத்தை தொட்டிருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன் இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர்.
சிவகார்த்திகேயன் சமீபத்தில் நடிப்பில் வெளிவந்த “அமரன்” படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று, வசூலில் சாதனை படைத்துள்ளது. உலகளவில் ரூ.300 கோடி அளவில் வசூல் செய்ததாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த வெற்றி, சிவகார்த்திகேயனின் சினிமா பயணத்தில் முக்கிய திருப்புமுனையாக அமைந்துள்ளது.
“அமரன்” வெற்றியைத் தொடர்ந்து, சிவகார்த்திகேயன் தற்போது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகின்றது.
சமீபத்தில், நடிகை ரம்யா கிருஷ்ணன் சிவகார்த்திகேயனைப் பற்றிய ஒரு பேட்டியில் தெரிவித்த கருத்துகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இதையும் படியுங்க: திருமணத்தில் நாகசைதன்யா – சோபிதாவுக்கு விருப்பமில்லை.. பரபரப்பை கிளப்பிய நாகர்ஜூனா!
“ஜோடி” நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் பங்கேற்ற போது, அவருக்கு நான் அதிகமான டாஸ்க்குகளை கொடுத்தேன். அதற்குக் காரணம், அவரிடம் உள்ள திறமையை நான் தெளிவாக உணர்ந்தேன். அப்போது நான் கூறினேன், “இவரால் ஹீரோ ஆக முடியாதபட்சத்தில், நான் என் பெயரை மாற்றிக் கொள்வேன்.”
இன்று, அவரது திறமையும் உழைப்பும் அவர் பெரிய உயரத்தை எட்ட காரணமாக உள்ளது,”* என ரம்யா கிருஷ்ணன் பெருமிதத்துடன் கூறினார்.
சிவகார்த்திகேயனின் தொடர்ச்சியான வளர்ச்சி மற்றும் வெற்றிகள் தமிழ் சினிமாவில் அவரது இடத்தை மேலும் பலப்படுத்தி வருகின்றன.
விஜய்யின் கடைசி திரைப்படம் அடுத்த ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலை ஒரு அரசியல்வாதியாக எதிர்கொள்ளவுள்ளார் விஜய். தற்போது நடித்துக்கொண்டிருக்கும் தனது…
எம்ஜிஆர்-நம்பியார் நட்பு திரைப்படங்களில் எம்ஜிஆர்க்கு நம்பியார் எப்போதும் வில்லன்தான். அதுவும் இந்த ஹீரோ வில்லன் கூட்டணி அமைந்துவிட்டால் அந்த படம்…
கோவை கணபதி பகுதியைச் சேர்ந்தவர் தீர்த்தகிரி. இவர் ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்தில் முரளிதரன் என்பவர்…
கோவை மாவட்டம், கோவில்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சிவா. சமையல் வேலை செய்யும் இவர், இந்து முன்னணியில் உறுப்பினராக இருந்து வருகிறார்.…
கோவிலுக்கு சென்ற இளம்பெண்ணை 7 பேர் கொண்ட கும்பல் மதுபோதையில் விடிய விடிய பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை…
இனி AI யுகம்… Artificial Intelligence எனப்படும் AI தொழில்நுட்பம் இனி வரும் காலங்களில் மக்களின் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை…
This website uses cookies.