சின்னத்திரை வழியாக தனது பயணத்தை தொடங்கி, கடின உழைப்பின் மூலம் வெள்ளித்திரையில் உச்சத்தை தொட்டிருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன் இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர்.
சிவகார்த்திகேயன் சமீபத்தில் நடிப்பில் வெளிவந்த “அமரன்” படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று, வசூலில் சாதனை படைத்துள்ளது. உலகளவில் ரூ.300 கோடி அளவில் வசூல் செய்ததாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த வெற்றி, சிவகார்த்திகேயனின் சினிமா பயணத்தில் முக்கிய திருப்புமுனையாக அமைந்துள்ளது.
“அமரன்” வெற்றியைத் தொடர்ந்து, சிவகார்த்திகேயன் தற்போது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகின்றது.
சமீபத்தில், நடிகை ரம்யா கிருஷ்ணன் சிவகார்த்திகேயனைப் பற்றிய ஒரு பேட்டியில் தெரிவித்த கருத்துகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இதையும் படியுங்க: திருமணத்தில் நாகசைதன்யா – சோபிதாவுக்கு விருப்பமில்லை.. பரபரப்பை கிளப்பிய நாகர்ஜூனா!
“ஜோடி” நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் பங்கேற்ற போது, அவருக்கு நான் அதிகமான டாஸ்க்குகளை கொடுத்தேன். அதற்குக் காரணம், அவரிடம் உள்ள திறமையை நான் தெளிவாக உணர்ந்தேன். அப்போது நான் கூறினேன், “இவரால் ஹீரோ ஆக முடியாதபட்சத்தில், நான் என் பெயரை மாற்றிக் கொள்வேன்.”
இன்று, அவரது திறமையும் உழைப்பும் அவர் பெரிய உயரத்தை எட்ட காரணமாக உள்ளது,”* என ரம்யா கிருஷ்ணன் பெருமிதத்துடன் கூறினார்.
சிவகார்த்திகேயனின் தொடர்ச்சியான வளர்ச்சி மற்றும் வெற்றிகள் தமிழ் சினிமாவில் அவரது இடத்தை மேலும் பலப்படுத்தி வருகின்றன.
தியேட்டரை காலி பண்ணும் விடாமுயற்சி அஜித் நடிப்பில் வெளிவந்த விடாமுயற்சி திரைப்படத்தின் OTT ரிலீஸ் தேதியை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.இதனால்…
மாணவர்களை கெடுக்கும் சினிமா தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த புஷ்பா திரைப்படம் மாணவர்களின் மனநிலையை கெடுத்து வைக்கிறது…
பிரார்த்தனையில் ஈடுபட்ட ரிஷ்வான் துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளிடேயே நடைபெற்ற சாம்பியன்ஸ் போட்டியின் போது பாகிஸ்தான் அணியின் கேப்டன்…
தமிழ் புத்தாண்டு தினத்தன்று விஜய் நடித்து வரும் ஜனநாயகன் படத்தின் ஸ்பெஷல் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.…
பிரபுதேவா நடன நிகழ்ச்சியில் வடிவேல் பேச்சு நடிகரும் நடன இயக்குனருமான பிரபுதேவாவின் முதல் நடன நிகழ்ச்சி சென்னையில் பிரமாண்டமாக பெப்ரவரி…
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில், தகுதியுள்ள நபர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத்…
This website uses cookies.